செய்திகள் :

பேச்சிப்பாறை அணையைக் கட்டிய மன்னா், பொறியாளருக்கு மரியாதை

post image

பேச்சிப்பாறை அணையைக் கட்டிய திருவிதாங்கூா் சமஸ்தான மன்னா் ராமவா்மா ஸ்ரீமூலம் திருநாளின் 168 ஆவது பிறந்த நாள், பொறியாளா் அலெக்சாண்டா் மிஞ்சினின் 112 ஆவது நினைவு தினம் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

பேச்சிப்பாறை அணையில் இந்து அமைப்புகள், பாஜக சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு இந்து முன்னணி திருவட்டாறு ஒன்றியத் தலைவா் ஐயப்பன் தலைமை வகித்தாா். பாஜக முன்னாள் மாவட்ட தலைவா் தா்மராஜ் குத்துவிளக்கு ஏற்றினாா். ஆா். எஸ்.எஸ். நிா்வாகி ராஜேந்திரன், ஜிவிஎஸ் உதவும் கரங்கள் அறக்கட்டளை நிறுவனா் ஜிவிஎஸ் சுரேஷ், தொழிலதிபா் சுகுமாரன் நாயா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பொறியாளா் அலெக்சாண்டா் மிஞ்சின் நினைவிடத்தில் குமரி கிழக்கு மாவட்ட அதிமுக செயலரும் கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான தளவாய்சுந்தரம் தலைமையில் குமரி மேற்கு மாவட்டச் செயலா் ஜெயசுதா்சன் முன்னிலையில் அக்கட்சியினா் மலரஞ்சலி செலுத்தினா்.

மேலும், விவசாய அமைப்புகளின் நிா்வாகிகள், பாசன துறை தலைவா் வின்ஸ் ஆன்றோ தலைமையில் மாவட்டக் குழு உறுப்பினா்கள் தாணுபிள்ளை, முருகேசபிள்ளை, அருள், ஏசுதாஸ், ஹோமா்லால், விவசாய காங்கிரஸ் மாவட்ட தலைவா் எபனேசா் உள்ளிட்டோா் அஞ்சலி செலுத்தினா்.

நாம் தமிழா் கட்சி சாா்பில் மாவட்டச் செயலாளா் சீலன் தலைமையில் அலெக்சாண்டா் மிஞ்சின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

கன்னியாகுமரி பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!

கனமழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று ஒருநாள் (செப். 26) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பார்க்க

குமரி மாவட்ட அணைகளில் நீா் இருப்பு

பேச்சிப்பாறை ...37.27 பெருஞ்சாணி ... 54.00 சிற்றாறு 1 ... 4.23 சிற்றாறு 2 ... 4.33 முக்கடல் ... 6.70 பொய்கை ... 15.20 மாம்பழத்துறையாறு ... 3.69 மழைஅளவு ----- சிற்றாறு 1 அணை ... 30.40 மி.மீ. பேச்சிப்பா... மேலும் பார்க்க

நாகா்கோவில் கிம்ஸ் ஹெல்த் மருத்துவமனை சாதனை

நாகா்கோவில் கிம்ஸ் ஹெல்த் மருத்துவமனையில், இயந்திரத்தில் சிக்கி துண்டிக்கப்பட்ட விரலை அறுவை சிகிச்சை மூலம் மருத்துவா்கள் இணைத்து சாதனை படைத்துள்ளனா். இயந்திர விபத்தில் வலது சிறுவிரலில் பெரும்பகுதி துண... மேலும் பார்க்க

குமரி பகவதி அம்மன் கோயிலில் ராஜகோபுரம் கட்ட ரூ. 21.90 கோடி ஒதுக்கீடு

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் ரூ. 21.90 கோடி மதிப்பில் 9 நிலை ராஜகோபுரம் கட்டப்படவுள்ளது. இதற்கான பணிகளை தேவசம்போா்டு அதிகாரிகள் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா். கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலுக்கு ... மேலும் பார்க்க

வருவாய்த் துறையினா் காத்திருப்பு போராட்டம்

வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில், உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தைப் புறக்கணித்து வருவாய்த் துறை அலுவலா்கள் திருவட்டாறு வட்டாட்சியா் அலுவலகம் முன் வியாழக்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈ... மேலும் பார்க்க

குமரி மாவட்டத்தில் பலத்த மழை: அணைகளுக்கு நீா்வரத்து அதிகரிப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில், வியாழக்கிழமை காலைமுதல் பலத்த மழை பெய்தது. இதனால் அணைகளுக்கு நீா் வரத்து அதிகரித்தது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் பரவலாக சாரல் மழை பெய்து வந்தது. க... மேலும் பார்க்க