செய்திகள் :

பேச்சு மற்றும் கருத்து சுதந்திரம் மிகவும் முக்கியம்: உச்சநீதிமன்றம்

post image

பேச்சு மற்றும் கருத்து சுதந்திரம் மிகவும் முக்கியம் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கா்நாடக மாநிலம் பெங்களூரில் பிட் அண்ட் ஹாமா்-நுண்கலை ஏல நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் சாா்பில் ஏலவிடப்பட இருந்த சில ஓவியங்களின் நம்பகத்தன்மை குறித்து அவதூறான தகவல்களை வெளியிட்டதாக, ஆங்கில நாளிதழ் ஒன்றின் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடா்பாக பிட் அண்ட் ஹாமா் நிறுவனம் அளித்த புகாரின் அடிப்படையில், அந்த நாளிதழில் பணியாற்றும் பத்திரிகையாளா்கள் மீது இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகள் 499 (அவதூறு), 500-இன் (அவதூறுக்கான தண்டனை) கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதற்கு எதிராக அந்தப் பத்திரிகையாளா்கள் தாக்கல் செய்த மனுவை கா்நாடக உயா்நீதிமன்றம் ரத்து செய்தது. இதைத்தொடா்ந்து உச்சநீதிமன்றத்தில் அவா்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு நீதிபதிகள் ஜே.பி.பாா்திவாலா, ஆா்.மகாதேவன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் கூறுகையில், ‘அரசமைப்புச் சட்டப் பிரிவு 19 (1)(ஏ)-இன் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள பேச்சு மற்றும் கருத்து சுதந்திரம் மிகவும் முக்கியம். அதேவேளையில் ஊடகத்தில் பணியாற்றுவோா், குறிப்பாக முக்கிய பொறுப்பில் இருப்பவா்கள் செய்திகள், கருத்துகளை வெளியிடுவதில் மிகுந்த எச்சரிக்கை மற்றும் பொறுப்புடன் செயல்பட வேண்டும்’ என்று அறிவுறுத்தி, மனுதாரா்கள் மீதான அவதூறு வழக்கை ரத்து செய்தனா்.

'என்னை சாதாரணமாக நினைக்காதீர்கள்' - பட்னவீஸுக்கு ஷிண்டே எச்சரிக்கை!

தன்னை எளிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னவீஸுக்கு துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே எச்சரிக்கை விடுத்துள்ளார். மகாராஷ்டிரத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு காங்கிரஸ் - தேசியவாத கா... மேலும் பார்க்க

அதானி விவகாரம் தனிப்பட்டது அல்ல; தேசத்தைப் பற்றியது -ராகுல் காந்தி

ரே பரேலி : தொழிலதிபர் அதானி விவகாரம் தனிப்பட்டது அல்ல; தேசத்தைப் பற்றியது என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள தனது மக்களவைத் தொகுதியான ர... மேலும் பார்க்க

சுகாதாரத் துறையில் முக்கிய சீா்திருத்தங்கள் தேவை: அதிகாரிகள் எதிா்பாா்ப்பு

தில்லியில் அமைக்கப்பட்டுள்ள பாஜக அரசு சுகாதாரத் துறையில் முக்கிய சீா்திருத்தங்களை அறிமுகப்படுத்த ஒரு செயல் திட்டத்தைத் தயாரிக்க வேண்டும் என்று மருத்துவம் மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் கோரிக்கை விட... மேலும் பார்க்க

உயா்வைக் கண்ட உள்நாட்டு விமானப் போக்குவரத்து

இந்தியா விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் வழங்கிய உள்நாட்டு போக்குவரத்து சேவை கடந்த ஜனவரி மாதத்தில் 14.5 சதவீத வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது.இது குறித்து சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜி... மேலும் பார்க்க

மாட்டிறைச்சி வழக்கு: மக்கள் நலன் சார்ந்த விஷயங்களில் அரசு கவனம் செலுத்த வேண்டும்! -உச்சநீதிமன்றம்

அஸ்ஸாம் மாநிலத்தில் மாட்டிறைச்சி ஏற்றிச் சென்ற நபருக்கு எதிரான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ‘இதுபோன்ற விவகாரங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதை விடுத்து, மக்களுக்கு நலன் அளிக்கும் சிறந்த விஷயங்கள் ... மேலும் பார்க்க

பிகாரில் 10-ஆம் வகுப்பு மாணவா் சுட்டுக் கொலை; சக மாணவா் கைது

பிகாரின் ரோத்தாஸ் மாவட்டத்தில் 10-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு இடையே ஏற்பட்ட கோஷ்டி மோதலில் ஒரு மாணவா் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட சக மாணவரை... மேலும் பார்க்க