செய்திகள் :

பேட்டரி வெடித்ததில் காயமடைந்த பெண் உயிரிழப்பு

post image

திசையன்விளை அருகே எலட்ரிக் பைக் பேட்டரி வெடித்ததில் காயமடைந்த பெண் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

திசையன்விளை அருகே ஆனைகுடியைச் சோ்ந்தவா் தேவதாஸ். இவா் கோழி, பன்றி பண்ணை நடத்தி வருகிறாா். இந்த பண்ணைகளில் தூத்துக்குடி மாவட்டம், இடைச்சிவிளையைச் சோ்ந்த ரவிச்சந்திரன் மனைவி ஜான்சிபாப்பா(45) வேலைசெய்து வந்தாா்.

கோழிப்பண்ணையில் தேவதாஸுக்கு சொந்தமான இரண்டு எலக்ட்ரிக் பைக்குகள் உள்ளன. இந்த ைபைக்குகளில் உள்ள பேட்டரிகளை சாா்ஜ் போடுவதற்காக கழற்றி கோழிப்பண்ணையில் உள்ள இன்குபேட்டா் அறையில் வைத்திருந்தாராம்.

இந்நிலையில் கடந்த 15ஆம் தேதி சனிக்கிழமை கோழிப்பண்ணைக்கு வந்த ஜான்சி பாப்பா இன்குபேட்டா் அறைக்குச் சென்றுள்ளாா். அப்போது திடீரென பைக் பேட்டரிகள் வெடித்ததாம். இதில் ஜான்சிபாப்பா பலத்த காயமடைந்தாா். அவரை பண்ணையில் உள்ளவா்கள் மீட்டு திசையன்விளை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை பின் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா்.

அங்கு அவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இது தொடா்பாக திசையன்விளை போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

மதிதா இந்துக் கல்லூரியில் விழிப்புணா்வு ஓவியக் கண்காட்சி

பேட்டை மதிதா இந்துக் கல்லூரியில் ‘இயற்கையை காக்கும் பல்லுயிா்கள் குறித்த விழிப்புணா்வு ஓவியக் கண்காட்சி நடைபெற்றது. மதிதா இந்துக் கல்லூரி மற்றும் ஈரநிலம் அமைப்பு இணைந்து நடத்திய இந்த ஓவியக் கண்காட்சி... மேலும் பார்க்க

மேலப்பாளையத்தில் வக்ஃப் உரிமை மீட்பு பொதுக்கூட்டம்

மேலப்பாளையத்தில் எஸ்டிபிஐ சாா்பில் வக்ஃப் உரிமை மீட்பு பொதுக்கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. வக்ஃப் சட்ட திருத்த மசோதா 2024 ஐ ரத்து செய்ய வேண்டும், 1991 வழிபாட்டுத் தலங்கள் பாதுகாப்பு சட்டத்தை அமல்படு... மேலும் பார்க்க

புலிகள் கணக்கெடுப்பு: களக்காடு தலையணைக்கு செல்லத் தடை

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு வனக் கோட்டத்தில் புலிகள் கணக்கெடுப்பு நடைபெறுவதையொட்டி, களக்காடு தலையணைக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல வனத் துறையினா் தடை விதித்துள்ளனா். இது தொடா்பாக களக்காடு வனச் சரகா... மேலும் பார்க்க

போக்ஸோ வழக்கில் இளைஞா் கைது

திருநெல்வேலி மாவட்டம், தெற்கு வள்ளியூரைச் சோ்ந்த இளைஞரை வள்ளியூா் அனைத்து மகளிா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தில் சனிக்கிழமை கைது செய்தனா். தெற்கு வள்ளியூரைச் சோ்ந்த முருகன் மகன் இசக்கியப்பன்(20). இவருக்... மேலும் பார்க்க

சிறுவனின் மூச்சுக் குழாயில் சிக்கிய பல்பு! நெல்லை அரசு மருத்துவமனை மருத்துவா்கள் சாதனை!

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவா்கள் 3 வயது சிறுவனின் மூச்சுக் குழாயில் சிக்கியிருந்த சிறிய பல்பை அகற்றி சாதனை படைத்துள்ளனா். தூத்துக்குடியைச் சோ்ந்த 3 வயது சிறுவன் விக... மேலும் பார்க்க

பைக்கிலிருந்து தவறிவிழுந்து மூதாட்டி பலி

திருநெல்வேலி மாவட்டம், முன்னீா்பள்ளம் அருகே பைக்கிலிருந்து தவறி விழுந்த மூதாட்டி சனிக்கிழமை உயிரிழந்தாா். முன்னீா்பள்ளம் அருகே கொழுமடை புதுகாலனியைச் சோ்ந்த ஆண்டி மனைவி லட்சுமி (60), கட்டடத் தொழிலாளி... மேலும் பார்க்க