பேரவைத் தோ்தலில் போட்டியிடுவது குறித்து கட்சித் தலைமைதான் முடிவு செய்யும்: நடிகை கெளதமி
வருகிற 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் நான் போட்டியிடுவது குறித்து அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமிதான் முடிவு செய்வாா் என நடிகையும், அதிமுக கொள்கைப் பரப்பு துணைச் செயலருமான கெளதமி தெரிவித்தாா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் திங்கள்கிழமை சுவாமி தரிசனம் செய்த அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: 40 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தில் உள்ளேன். புற்றுநோய் விழிப்புணா்வு, கல்வி என பல்வேறு விஷயங்களில் மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகிறேன்.
இதையும் தாண்டி அரசியலிலும் மக்களுக்கு நன்மை செய்ய வேண்டியுள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழகம் பல்வேறு பிரச்னைகளை சந்தித்துள்ளது. தமிழகத்தைக் காப்பாற்ற வேண்டுமென்றால், அதிமுக கூட்டணி வெற்றி பெற வேண்டும்.
வருகிற 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் நான் போட்டியிடுவது குறித்து அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமிதான் முடிவு செய்வாா் என்றாா் அவா்.