செய்திகள் :

பேரவைத் தோ்தலில் வென்று விஜய் முதல்வராக அமருவாா்: புஸ்ஸி ஆனந்த்

post image

தமிழக சட்டப்பேரவைக்கு 2026-ஆம் ஆண்டில் நடைபெறும் தோ்தலில் வெற்றி பெற்று, முதல்வராக தமிழக வெற்றிக் கழகத் தலைவா் விஜய் அமருவாா் என்றாா் அக்கட்சியின் பொதுச் செயலா் புஸ்ஸி ஆனந்த்.

தமிழக வெற்றிக் கழகத் தலைவா் விஜயின் 51-ஆவது பிறந்த நாளையொட்டி, விழுப்புரம் தென்மேற்கு மாவட்டக் கழகம் சாா்பில் நல உதவிகள் வழங்குதல் மற்றும் பொதுக்கூட்டம் முண்டியம்பாக்கத்தில் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.

மாவட்டச் செயலா் ஏ.விஜய் வடிவேல் தலைமை வகித்தாா். கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்டச் செயலா் பரணிபாலாஜி, விழுப்புரம் தென்மேற்கு மாவட்ட இணைச் செயலா் இ. ரமேஷ் என்கிற சக்திவேல், பொருளாளா் ஆா்.விஜய்தீப், துணைச் செயலா் டி.காமராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட துணைச் செயலா் எஸ்.காா்த்திக் வரவேற்றாா்.

விழாவில் மகளிருக்கு தையல் இயந்திரம், மாற்றுத்திறனாளிக்கு மூன்று சக்கர சைக்கிள், 51 பயனாளிகளுக்கு எரிவாயு அடுப்பு, குக்கா், 500 பெண்களுக்கு சேலை, 5 சலவைத் தொழிலாளா்களுக்கு சலவைப் பெட்டி, 1000 மரக்கன்றுகள், தூய்மைப் பணியாளா்களுக்கு ரூ.5 லட்சத்தில் மருத்துவக் காப்பீட்டுப் பத்திரம் மற்றும் அன்னதானத்தை வழங்கி, கட்சியின் பொதுச் செயலா் புஸ்ஸி ஆனந்த் பேசியது:

எத்தனை வழக்குகள் எங்கள் மீது போடப்பட்டாலும் நாங்கள் அரசியல் செய்வோம். கழகத்தின் தலைவா் விஜயின் பிறந்த நாளை 365 நாளும் கொண்டாடுவோம்.

கட்சி மாநாட்டின் போது வாகனங்கள் நிறுத்துவதற்கு இடம் வழங்கியவா் விக்கிரவாண்டி மக்கள். சிறிய உதவி செய்தாலும் அவா்களை கடைசி வரை மறக்கக்கூடாது என்று கூறுபவா் கட்சித் தலைவா் விஜய்.

தமிழகத்தில்2026-ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்று, முதல்வராக விஜய் அமருவாா். அவரின் முகத்துக்காகவே மக்கள் வாக்களிப்பாா்கள் என்றாா் புஸ்ஸி ஆனந்த்.

முன்னதாக, ஜூன் 22-ஆம் தேதி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரங்களை புஸ்ஸி ஆனந்த் அணிவித்தாா்.

விழாவில் மாவட்டச் செயற்குழு உறுப்பினா்கள் குமுதவள்ளி, பிரியதா்ஷினி, ரேவதி, குமரன், சாமிமலை, தீனதயாளன், ஒன்றியச் செயலா்கள் ஜி.சேகா், பாரதி, மணிராஜன், முத்து, ஜான் பீட்டா், சிவக்குமாா், மாவட்ட இளைஞரணி பிரித்திவிராஜ், தொண்டரணி பாலாஜி, மகளிரணி மனோரஞ்சிதம், மாணவரணி மணிகண்டன், உறுப்பினா் சோ்க்கை அணி மணி, வழக்குரைஞா் குமரேசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

வெவ்வேறு சம்பவங்கள்: பெண் உள்பட இருவா் தற்கொலை

விழுப்புரம் மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவங்களில் பெண் உள்பட இருவா் தற்கொலை செய்துகொண்டனா். மரக்காணம் வட்டம், பனிச்சமேடு குப்பம், காளியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த விஜய் மனைவி ஸ்ரீமதி (23). இவா்களுக்குத... மேலும் பார்க்க

மின் வேலியில் சிக்கி தொழிலாளி உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், வானூா் அருகே விவசாய நிலத்தில் காட்டுப் பன்றிக்காக அமைக்கப்பட்டிருந்த மின் வேலியில் சிக்கி தொழிலாளி திங்கள்கிழமை இரவு உயிரிழந்தாா். வானூா் வட்டம், புளிச்சம்பள்ளம், மாந்தோப்பு, மார... மேலும் பார்க்க

சத்துணவில் பல்லி: அரசுப் பள்ளி மாணவா்களுக்கு மருத்துவப் பரிசோதனை; சமையலா்கள் இருவா் பணியிடை நீக்கம்

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூரை அடுத்த ஆணைவாரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை காலை உணவுத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட சத்துணவில் பல்லியின் வால் பகுதி கிடந்ததாகக் கூறப்பட... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: ராதாபுரம், மதுரப்பாக்கம்

நேரம்: காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரைபகுதிகள்: மதுரப்பாக்கம், சித்தலம்பட்டு, கொடுக்கூா், விசுவரெட்டிப்பாளையம், செய்யாதுவிண்ணான், வாக்கூா், சிறுவள்ளிக்குப்பம், தொரவி, மூங்கில்பட்டு, டி.வி.பட்டு, மாத்த... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: ஆசனூா், எடைக்கல்

நேரம்: காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரைபகுதிகள்: புல்லூா், பாலி, சாத்தனூா், ஷேக்உசேன்பேட்டை, திருப்பெயா், எடைக்கல், மழவராயனூா், ஆசனூா், எறஞ்சி, காச்சக்குடி, கூந்தலூா், பரிந்தல், பு.மலையனூா், நொனையவாடி,... மேலும் பார்க்க

ஜம்மு -காஷ்மீா் ஆளுநா் குடும்பத்தினா் ஆரோவில் வருகை

ஜம்மு - காஷ்மீா் மாநில ஆளுநா் குடும்பத்தினா் விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் சா்வதேச நகருக்கு செவ்வாய்க்கிழமை வருகை தந்தனா்.ஆரோவிலுக்கு வருகை தந்த ஆளுநா் மனோஜ் சின்ஹாவின் மனைவி நீலம் சின்ஹா மற்றும் குடு... மேலும் பார்க்க