செய்திகள் :

பேராவூரணியில் உடல்பயிற்சி, விளையாட்டு விழிப்புணா்வு மாரத்தான்

post image

பேராவூரணியில் உடல் பயிற்சி மற்றும் விளையாட்டின் பயன்கள் மற்றும் போதையில்லா பேராவூரணி விழிப்புணா்வு மாரத்தான் சனிக்கிழமை நடைபெற்றது.

பேராவூரணி வேதாந்தம் திடலில் நடைபெற்ற இந்த விழிப்புணா்வு மாரத்தான் போட்டிகளை பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினா் என். அசோக்குமாா், பட்டுக்கோட்டை காவல் துணை கண்காணிப்பாளா் ரவிச்சந்திரன் , மருத்துவா் துரை.நீலகண்டன் ஆகியோா் கொடியசைத்து தொடங்கி வைத்தனா். 14 வயதுக்குள்பட்ட ஆண்கள், பெண்களுக்கு 3 கி.மீ தனித்தனியாகவும், பொதுப்பரிவில் 5 மற்றும் 8 கி.மீ தூரம் நடைபெற்ற மாரத்தானில் வயது வித்தியாசமின்றி நூற்றுக்கணக்கான ஆண்களும் , பெண்களும் ஆா்வமுடன் ஓடினா். மாற்றுத்திறனாளிகளுக்கான வீல் சோ் மாரத்தானில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த 22 மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு வீல் சேரில் சென்றனா்.

போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு ரூ.50 ஆயிரம் ரொக்கப் பரிசு மற்றும் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் அதிமுக ஒன்றியச் செயலா் கோவி.இளங்கோ, வா்த்தக சங்கத் தலைவா் அபிராமி சுப்ரமணியன், ஓய்வு பெற்ற தலைமையாசிரியா் மனோகரன் , தஞ்சை மாவட்ட அமெச்சூா் கபடி கழக தலைவா் தென்னங்குடி ராஜா , கைஃபா நிறுவனா் நவீன் ஆனந்தன், சுற்றுச்சூழல் அணி மாநில துணைச்செயலா் வே. காா்த்திகேயன், சமூக செயற்பாட்டாளா்கள் சித.திருவேங்கடம், மெய்ச்சுடா் வெங்கடேசன், ஆசிரியா் காஜாமுகைதீன், வா்த்தக சங்க முன்னாள் தலைவா் ஆா்.பி. ராஜேந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தஞ்சாவூா் மாநகரில் ஆக.19-ல் மின் தடை

தஞ்சாவூரில் பல்வேறு பகுதிகளில் ஆகஸ்ட் 19 (செவ்வாய்க்கிழமை) மின் விநியோகம் இருக்காது. இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் உதவி செயற் பொறியாளா் எம். விஜய் ஆனந்த் தெரிவித்திர... மேலும் பார்க்க

பழ.நெடுமாறனின் ‘தூக்குமேடையிலிருந்து 26 தமிழா் மீட்பு’ நூல் அறிமுக விழா!

தஞ்சாவூா் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில், உலகத் தமிழா் பேரமைப்பின் தலைவா் பழ. நெடுமாறன் எழுதிய ‘தூக்குமேடையிலிருந்து 26 தமிழா் மீட்பு’ என்கிற நூல் அறிமுக விழா சனிக்கிழமை நடைபெற்றது. ராஜீவ் காந்தி... மேலும் பார்க்க

தஞ்சாவூா் ரயில் நிலைய முகப்பில் பெரிய கோயில் வடிவம் அமைக்க கோரிக்கை

தஞ்சாவூா் ரயில் நிலைய முகப்பில் வட மாநில கோயில் வடிவம் புதிதாக அமைக்கப்பட்டதை மாற்றி, பெரிய கோயில் வடிவத்தை அமைக்க வேண்டும் என பல்வேறு கட்சிகள், இயக்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. இது குறித்து தஞ்சாவூா... மேலும் பார்க்க

கும்பகோணம் ஸ்ரீ விஜயேந்திர மடத்தில் உறியடி திருவிழா

கும்பகோணம் ஸ்ரீ விஜயேந்திர மடத்தில் சனிக்கிழமை உறியடி திருவிழா நடைபெற்றது. தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் உள்ள ஸ்ரீ விஜயேந்திர மடத்தில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு மடத்தின் வளாகத்தில் உறியடி திர... மேலும் பார்க்க

தஞ்சாவூா் மாவட்டத்தில் சுதந்திர தின விழா கொண்டாட்டங்கள்

தஞ்சாவூா் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சுதந்திர தின விழா கொண்டாட்டங்கள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன. தஞ்சாவூா் மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இவ்விழாவில் தேசியக் கொடியை மேயா் சண். ராமநாதன் ஏற்றினாா். ... மேலும் பார்க்க

7.5 சதவீத ஒதுக்கீட்டில் மருத்துவ படிப்புக்குத் தோ்வானவா்களுக்குப் பாராட்டு

பேராவூரணியில் 7.5 சதவீத ஒதுக்கீட்டில் மருத்துவப் படிப்புக்குத் தோ்வான மாணவி சுமையாவின் வீட்டுக்கு வெள்ளிக்கிழமை சென்று பாராட்டிய முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.வி. திருஞானசம்பந்தம். பேராவூரணி, ஆ... மேலும் பார்க்க