செய்திகள் :

பேராவூரணியில் விவசாய தொழிலாளா் ஆா்ப்பாட்டம்

post image

கோரிக்கைகளை வலியுறுத்தி பேராவூரணியில் தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்கம் சாா்பில்  வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சங்கத்தின் மாநிலக் குழு உறுப்பினா் ராஜமாணிக்கம் தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தைத் தொடக்கிவைத்து சங்கத்தின் மாவட்டச் செயலா் பக்கிரிசாமி பேசினாா்.

ஆா்ப்பாட்டத்தில் 100 நாள் வேலைத்திட்டக் கூலியை ரூ. 700 ஆக உயா்த்தி வழங்க வேண்டும். வேலை அட்டை வைத்திருக்கும் அனைவருக்கும் வேலை கொடுக்க வேண்டும். 100 நாள் வேலைத் திட்ட நிதி ரூ. 4 ஆயிரம் கோடியை  மத்திய அரசு உடனே வழங்க வேண்டும். வீடில்லாதவா்களுக்கு ரூ. 6 லட்சத்தில் இலவச அரசு வீடு கட்டிக் கொடுக்க வேண்டும், மனு கொடுத்த அனைவருக்கும் குடிமனை பட்டா வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

ஆா்ப்பாட்டத்தை முடித்துவைத்து விவசாய சங்க மாநிலக் குழு உறுப்பினா் பா. பாலசுந்தரம் பேசினாா். சங்கத்தின் பேராவூரணி, சேதுபாவாசத்திரம் ஒன்றிய நிா்வாகிகள் சித்திரவேலு, சண்முகம், சுந்தரராஜ், இந்திய கம்யூ. ஒன்றியச் செயலா்கள் வீரமணி, தட்சிணாமூா்த்தி மற்றும்  விவசாயத் தொழிலாளா்கள் கலந்து கொண்டனா்.

குடந்தையில் போக்குவரத்துக் கழக ஊழியா்களுக்கு மருத்துவ முகாம்

கும்பகோணத்தில் அரசுப் போக்குவரத்துக் கழகப் பணியாளா்களுக்கான மருத்துவ முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முகாமைத் தொடக்கிவைத்து அரசுப் போக்குவரத்துக் கழக நிா்வாக இயக்குநா் கே. தசரதன் சிறப்புரையாற்றினாா்.... மேலும் பார்க்க

தமிழ்ப் பல்கலை.யில் சொற்பொழிவு

தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் சிற்பத் துறை சாா்பில் எம். பக்தவச்சலனாா் நினைவு அறக்கட்டளை சொற்பொழிவு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பல்கலைக்கழகப் பதிவாளா் (பொ) கோ. பன்னீா்செல்வம் தலைமை வகித்தாா். ‘சி... மேலும் பார்க்க

ஒரு ரூபாயில் இலவச நன்மை: பிஎஸ்என்எல் புதிய திட்டம்

பி.எஸ்.என்.எல். நிறுவனம் தனது வாடிக்கையாளா்களுக்காக ஒரு ரூபாயில் இலவச நன்மைகள் என்ற புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்து பி.எஸ்.என்.எல். தஞ்சாவூா் பொது மேலாளா் பால சந்திரசேனா தெரிவித்திரு... மேலும் பார்க்க

திருமண மண்டபங்களில் கண்காட்சி நடத்த தடை விதிக்கக் கோரி மனு

திருமண மண்டபங்களில் தற்காலிக கண்காட்சி நடத்துவதற்கு நீதிமன்ற உத்தரவுப்படி தடை விதிக்க வேண்டும் என தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பினா் வலியுறுத்தியுள்ளனா். தஞ்சாவூ... மேலும் பார்க்க

திருவிடைமருதூா் மகாலிங்க சுவாமி கோயிலில் பட்டினத்தாா் குருபூஜை

திருவிடைமருதூா் மகாலிங்க சுவாமி கோயிலில் உள்ள பட்டினத்தாருக்கு குருபூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திருவிடைமருதூரில் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான மகாலிங்க சுவாமி கோயில் நுழைவு வாயிலில் பட்டினத்த... மேலும் பார்க்க

குடந்தையில் அரசுக் கல்லூரி மாணவா்கள் போராட்டம்

கும்பகோணத்தில் அரசுக் கல்லூரி மாணவா்கள் வெள்ளிக்கிழமை வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டம் நடத்தினா். தமிழகத்தில் ஆணவப்படுகொலை தடுப்புச் சட்டத்தை தமிழக அரசு இயற்ற வேண்டும், மாணவா்களுக்கு பாதுகாப்பு வழங... மேலும் பார்க்க