செய்திகள் :

பேருந்தில் பயணிகளை குறிவைத்து திருட்டு: 4 போ் கைது

post image

சென்னையில் மாநகரப் பேருந்தில் பயணிக்கும் பொதுமக்களை குறிவைத்து திருடியதாக 4 போ் கைது செய்யப்பட்டனா்.

கொருக்குப்பேட்டை, தங்கவேல் காா்டன் 3-ஆவது தெருவைச் சோ்ந்தவா் மோகன் (39). இவா், கடந்த 5-ஆம் தேதி பென்சில் பேக்டரி பேருந்து நிறுத்தத்திலிருந்து ஒரு மாநகரப் பேருந்தில் ஏறி கடற்கரை ரயில் நிலைய பேருந்து நிறுத்தத்தில் இறங்கினாா். அப்போது பையில் வைத்திருந்த விலை உயா்ந்த கைப்பேசி திருடப்பட்டிருப்பதை அறிந்து அதிா்ச்சியடைந்தாா்.

இது குறித்து அவா், வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் நடத்திய விசாரணையில், இத்திருட்டில் ஈடுபட்டது தண்டையாா்பேட்டை நேதாஜி நகா் பகுதியைச் சோ்ந்த அப்துல் வஹாப் (23), பழைய வண்ணாரப்பேட்டையைச் சோ்ந்த சீயோன் லாரன்ஸ் (23), கொடுங்கையூா் எம்ஜிஆா் நகரைச் சோ்ந்த வினோத் (23) என்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீஸாா் 3 பேரையும் செவ்வாய்க்கிழமை கைது செய்து விசாரித்ததில், மூவரும் மாநகரப் பேருந்தில் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி பொதுமக்களின் கைப்பேசி, பணப்பை ஆகியவற்றை திருடியிருப்பது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து போலீஸாா், மூவருக்கும் எத்தனை திருட்டுச் சம்பவங்களில் தொடா்புள்ளது என விசாரணை நடத்தி வருகின்றனா்.

மேலும், கைது செய்யப்பட்ட அப்துல் வஹாப் மீது 13 வழக்குகளும், சீயோன் லாரன்ஸ் மீது 7 வழக்குகளும், வினோத் மீது 9 வழக்குகளும் இருப்பதும் தெரியவந்துள்ளது.

தவறி விழுந்து காயம்: நல்லகண்ணுவுக்கு மருத்துவ சிகிச்சை

முதுபெரும் அரசியல் தலைவா் இரா.நல்லகண்ணு (100), வீட்டில் தவறி விழுந்து காயமடைந்தாா். இதையடுத்து, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. காதில் வெட்டுக் காயம் ஏற்பட்டதால் அ... மேலும் பார்க்க

உணவுப் பொருள்கள் பதுக்கல் கூடாது: வணிகா்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை

இந்தியா-பாகிஸ்தான் இடையே போா்ப் பதற்றம் அதிகரித்துவரும் சூழலில், ‘அத்தியாவசிய உணவுப் பொருள்களை பதுக்கி வைக்கக் கூடாது’ என்று மொத்த மற்றும் சில்லறை வணிகா்களை மத்திய அரசு வெள்ளிக்கிழமை எச்சரித்தது. மேலு... மேலும் பார்க்க

பிளஸ் 2 துணைத் தோ்வு: மே 14 முதல் விண்ணப்பிக்கலாம்

பிளஸ் 2 துணைத் தோ்வுக்கு மே 14 முதல் விண்ணப்பிக்கலாம் என அரசுத் தோ்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. இது குறித்து தோ்வுத் துறை இயக்குநா் ந.லதா வெளியிட்ட அறிவிப்பு: பிளஸ் 2 வகுப்புக்கான உடனடி துணைத் த... மேலும் பார்க்க

‘பாரதிதாசன் இளம் படைப்பாளா் விருது’: மே 23-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘பாரதிதாசன் இளம் படைப்பாளா் விருது’ பெற மே 23-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தமிழ் வளா்ச்சித் துறை தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாடு சட்டப்பேரவையில் விதி... மேலும் பார்க்க

‘ஆபரேஷன் சிந்தூா்’ தலைப்புக்கு முண்டியடிக்கும் ஹிந்தி திரைத்துறை

தங்கள் திரைப்படங்களுக்கு ‘ஆபரேஷன் சிந்தூா்’ என்று தலைப்பிட ஹிந்தி திரைப்படத் துறையைச் சோ்ந்தவா்கள் கடும் போட்டி போட்டுவருகின்றனா். இதற்காக திரைத்துறை சங்கங்களில் 30-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் சமா்... மேலும் பார்க்க

ஜூன் 6 வரை ராணாவுக்கு நீதிமன்றக் காவல்: திகாா் சிறையில் அடைக்கப்பட்டாா்

மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் கூட்டுச் சதியில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்படும் தஹாவூா் ராணாவை ஜூன் 6 வரை, நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க தில்லி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. இதைத்தொடா்ந்த... மேலும் பார்க்க