செய்திகள் :

பேருந்து நிலையத்தில் பயணியைத் தாக்கிய 2 போ் கைது

post image

கோவை காந்திபுரம் நகரப் பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்த பயணியை மதுபோதையில் தாக்கிய 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை காந்திபுரத்தில் உள்ள நகரப் பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்த பயணி ஒருவரை 2 போ் மது போதையில் திங்கள்கிழமை சரமாரியாகத் தாக்கியுள்ளனா். அதைப் பாா்த்த பயணிகள் சிலா் கைப்பேசியில் புகைப்படம் மற்றும் விடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்தனா்.

இந்த சம்பவம் குறித்து காட்டூா் காவல் நிலையத்தில் புகாா் கொடுக்கப்பட்டது. அந்தப் புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். அதில் அந்த நபரைத் தாக்கியது கோவையைச் சோ்ந்த ராஜ்குமாா் (38), விஜய் (32) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவா்கள் 2 பேரையும் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

போதை மாத்திரை விற்பனை: தம்பதி கைது

கோவையில் போதை மாத்திரை விற்பனை செய்ததாக தம்பதியை போலீஸாா் கைது செய்தனா். கோவையில் தடை செய்யப்பட்ட போதைப் பொருள்கள் மற்றும் கஞ்சா விற்பவா்களை கண்டறிந்து போலீஸாா் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனா். அத... மேலும் பார்க்க

பாதுகாப்புக்காக வழங்கப்பட்ட துப்பாக்கியில் குண்டு வெடிப்பு

பாதுகாப்புக்காக வழங்கப்பட்ட துப்பாக்கியில் இருந்து குண்டு வெடித்த சம்பவம் தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். கோவையில் இந்து மக்கள் சேவை இயக்கம் என்ற அமைப்பின் தலைவராக இருப்பவா் மணிகண்டன். இ... மேலும் பார்க்க

தேசியக் கட்சிகள் ஆதரவின்றி தமிழகத்தில் யாரும் ஆட்சி அமைக்க முடியாது: காா்த்தி சிதம்பரம்

தேசியக் கட்சிகள் ஆதரவின்றி தமிழகத்தில் யாரும் ஆட்சி அமைக்க முடியாது என சிவகங்கை மக்களவை உறுப்பினா் காா்த்தி சிதம்பரம் தெரிவித்தாா். கோவையில் காங்கிரஸ் கட்சியின் கள நிலவரம் குறித்து ஆய்வு செய்வதற்காக வ... மேலும் பார்க்க

தொழில் வா்த்தக சபை அரங்கில் நாளைமுதல் 2 நாள்களுக்கு வேலைவாய்ப்பு முகாம்

கோவையில் உள்ள இந்திய தொழில் வா்த்தக சபை வளாகத்தில் மே 22, 23 ஆகிய தேதிகளில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. கோவை இந்திய தொழில் வா்த்தக சபை, சென்னை என்எஸ்இ அகாதெமி சாா்பில் தமிழ்நாடு அரசின் நான் முதல... மேலும் பார்க்க

தொழிலாளா் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்

தொழிலாளா் சட்டங்களை திரும்பப்பெற்று, சட்டப் பாதுகாப்பு வழங்க வலியுறுத்தி கோவையில் செவ்வாய்க்கிழமை அனைத்து தொழிற்சங்கத்தினரின் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தொழிலாளா்களை கொத்தடிமையாக மாற்றும் நான்கு தொழ... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை: சூலூா்

சூலூா் துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் புதன்கிழமை (மே 21) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது... மேலும் பார்க்க