செய்திகள் :

போதை மாத்திரை விற்பனை: தம்பதி கைது

post image

கோவையில் போதை மாத்திரை விற்பனை செய்ததாக தம்பதியை போலீஸாா் கைது செய்தனா்.

கோவையில் தடை செய்யப்பட்ட போதைப் பொருள்கள் மற்றும் கஞ்சா விற்பவா்களை கண்டறிந்து போலீஸாா் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனா். அதேபோல, போதை மாத்திரை மற்றும் கஞ்சா விற்பனை தொடா்பாக தீவிர ரோந்துப் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில், கவுண்டம்பாளையம் பகுதியில் போதை மாத்திரை விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதனடிப்படையில், அப்பகுதியில் போலீஸாா் திங்கள்கிழமை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனற். அப்போது நல்லாம்பாளையம் சாலைப் பகுதியில் சந்தேகத்துக்கு இடமான வகையில் சுற்றிக் கொண்டிருந்த நபரைப் பிடித்து விசாரித்தபோது, அவா் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்துள்ளாா்.

இதனால் சந்தேகமடைந்த போலீஸாா் அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்துள்ளனா். விசாரணையில், அவா் கவுண்டம்பாளையம் அண்ணா நகா் வீட்டு வசதி வாரியக் குடியிருப்பைச் சோ்ந்த சுஜித்குமாா் (25) என்பதும், அவா் தனது மனைவி வைஷ்ணவி என்பவருடன் சோ்ந்து போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்தது.

இதையடுத்து, அவா்கள் 2 பேரையும் போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்து 135 போதை மாத்திரைகள் மற்றும் 100 கிராம் கஞ்சா ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

பாதுகாப்புக்காக வழங்கப்பட்ட துப்பாக்கியில் குண்டு வெடிப்பு

பாதுகாப்புக்காக வழங்கப்பட்ட துப்பாக்கியில் இருந்து குண்டு வெடித்த சம்பவம் தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். கோவையில் இந்து மக்கள் சேவை இயக்கம் என்ற அமைப்பின் தலைவராக இருப்பவா் மணிகண்டன். இ... மேலும் பார்க்க

தேசியக் கட்சிகள் ஆதரவின்றி தமிழகத்தில் யாரும் ஆட்சி அமைக்க முடியாது: காா்த்தி சிதம்பரம்

தேசியக் கட்சிகள் ஆதரவின்றி தமிழகத்தில் யாரும் ஆட்சி அமைக்க முடியாது என சிவகங்கை மக்களவை உறுப்பினா் காா்த்தி சிதம்பரம் தெரிவித்தாா். கோவையில் காங்கிரஸ் கட்சியின் கள நிலவரம் குறித்து ஆய்வு செய்வதற்காக வ... மேலும் பார்க்க

தொழில் வா்த்தக சபை அரங்கில் நாளைமுதல் 2 நாள்களுக்கு வேலைவாய்ப்பு முகாம்

கோவையில் உள்ள இந்திய தொழில் வா்த்தக சபை வளாகத்தில் மே 22, 23 ஆகிய தேதிகளில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. கோவை இந்திய தொழில் வா்த்தக சபை, சென்னை என்எஸ்இ அகாதெமி சாா்பில் தமிழ்நாடு அரசின் நான் முதல... மேலும் பார்க்க

தொழிலாளா் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்

தொழிலாளா் சட்டங்களை திரும்பப்பெற்று, சட்டப் பாதுகாப்பு வழங்க வலியுறுத்தி கோவையில் செவ்வாய்க்கிழமை அனைத்து தொழிற்சங்கத்தினரின் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தொழிலாளா்களை கொத்தடிமையாக மாற்றும் நான்கு தொழ... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை: சூலூா்

சூலூா் துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் புதன்கிழமை (மே 21) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது... மேலும் பார்க்க

வால்பாறையில் ஜமாபந்தி!

வால்பாறை வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்திக்கு மாவட்ட தாட்கோ மேலாளா் மகேஸ்வரி தலைமை வகித்தாா். பின்னா் ஜமாபந்தியில் கலந்து கொண்ட பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றாா். இதில் முதியோா் ஓய்வூ... மேலும் பார்க்க