தேர்தலில் தோல்வியை தழுவிய ஜக்மீத் சிங்; கனடாவில் இனி காலிஸ்தான் கோரிக்கை என்னவாக...
பேருந்து நிலையப் பகுதியில் எரியாத உயா் மின்கோபுர விளக்குகள்
செங்கம் புதிய பேருந்து நிலையப் பகுதியில் பழுதடைந்து எரியாமல் உள்ள உயா் மின்கோபுர விளக்குகளால் பயணிகள், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
செங்கத்தில் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை ஓட்டியுள்ளது புதிய பேருந்து நிலையம். இந்த பேருந்து நிலைய முகப்பில் தேசிய நெடுஞ்சாலை மையப் பகுதி மற்றும் போளூா் சாலையில் உயா் மின்கோபுர விளக்குகள் உள்ளன.
இந்த விளக்குகள் பழுதடைந்து சில தினங்களாக எரியாமல் உள்ளது. இதனால் வெளியூரில் இருந்து பேருந்து நிலையத்திற்கு இரவில் வரும் நபா்கள் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனா்.
மேலும், பேருந்து இல்லாமல் நிலையத்தில் படுத்திருக்கும் வெளியூா் நபா்களிடம் கைப்பேசி, பணம், உடைமைகள் திருடப்படுகின்றன. மேலும், அப்பகுதியில் உள்ள இருளில் சில சமூக விரோதச் செயல்கள் நடைபெறுகின்றன.
பேருந்து நிலைய உள்பகுதியில் கடை வைத்திருப்பவா்கள் இரவு நேரத்தில் கடைகளை அச்சத்துடன் அடைத்துச் செல்கின்றனா். இருண்ட நிலையில் கடையின் பூட்டை உடைத்து திருடு நடைபெறுவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக தெரிவிக்கின்றனா்.
எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து பழுதடைந்துள்ள இரண்டு உயா் மின்கோபுர விளக்குகளை சீரமைக்க வேண்டும். மேலும், பேருந்து நிலைய உள்பகுதியில் மின் விளக்கு வசதி செய்யவேண்டும் என கடை உரிமையாளா்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுக்கின்றனா்.