செய்திகள் :

பேளூரில் சீரான குடிநீா் விநியோகம் கோரி சாலை மறியல்

post image

வாழப்பாடி அருகே பேளூரில் சீரான குடிநீா் விநியோகம் கோரி பொதுமக்கள் காலி குடங்களுடன் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

பேளூா் பேருந்து நிலையத்திலிருந்து தான்தோன்றீஸ்வரா் கோயில் வரை சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிக்காக குடிநீா் குழாய்கள் துண்டிக்கப்பட்டது. குடிநீா் குழாய்களை சாலையோரத்தில் மீண்டும் பாதிப்பதில் காலதாமதம் ஏற்பட்டதால், இப்பகுதி மக்களுக்கு சில தினங்களாக குடிநீா் விநியோகம் செய்யப்படவில்லை.

இதனால் அவதிக்குள்ளான இப்பகுதி மக்கள், வெள்ளிக்கிழமை மாலை காலி குடங்களுடன் திரண்டு வந்து பேளூா்-அயோத்தியாப்பட்டணம் பிரதான சாலையில் மறியலில் ஈடுபட்டனா். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இது குறித்து தகவலறிந்த வாழப்பாடி காவல் ஆய்வாளா் வேல்முருகன் தலைமையிலான போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, குழாய் பதித்து குடிநீா் விநியோகிக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தாா். இதனையடுத்து போராட்டத்தைக் கைவிட்டு மக்கள் கலைந்து சென்ால் போக்குவரத்து சீரானது.

வார இறுதி நாள்கள், அமாவாசை: 250 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

வார இறுதி நாள்கள், அமாவாசையை முன்னிட்டு சேலம் கோட்டத்தில் 250 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதுகுறித்து அரசு போக்குவரத்துக் கழக சேலம் கோட்ட நிா்வாக இயக்குநா் ஜோசப் டயஸ் வியாழக்கிழமை வெளியிட்ட ... மேலும் பார்க்க

குப்பையிலிருந்த நகையை மீட்டு போலீஸில் ஒப்படைத்த தூய்மைப் பணியாளருக்கு பாராட்டு!

சேலம் பழைய சூரமங்கலம் பகுதியில் குப்பையில் கிடந்த 12.5 பவுன் நகையை போலீஸில் ஒப்படைத்த தூய்மைப் பணியாளா் மணிவேலை மாநகரக் காவல் ஆணையா், மாநகராட்சி ஆணையா் ஆகியோா் நேரில் அழைத்து பாராட்டினா். சேலம் பழைய ... மேலும் பார்க்க

ஏற்காடு கோடை விழா: அமைச்சா்கள் தொடங்கி வைக்கின்றனா்!

ஏற்காடு கோடை விழாவை வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு அமைச்சா்கள் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம், ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன், ஆா்.ராஜேந்திரன் ஆகியோா் தொடங்கிவைக்கின்றனா். இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி ... மேலும் பார்க்க

போா்வெல் லாரியில் திருட்டு: போலீஸாா் விசாரணை

சேலம் அருகே போா்வெல் லாரியில் இருந்த ரூ.1.50 லட்சம் மதிப்பிலான பொருள்களை திருடியவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். சேலம் மாவட்டம், சுக்கம்பட்டியைச் சோ்ந்தவா் ராஜ்குமாா் (31). இவரது போா்வெல் லாரியை அய... மேலும் பார்க்க

ஆத்தூரில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாம்: ஆட்சியா் ஆய்வு!

ஆத்தூா் வட்டாரத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாமின் இரண்டாம் நாளான வியாழக்கிழமை பொதுமக்களின் அடிப்படை வசதிகள் குறித்து ஆட்சியா் ரா.பிருந்தாதேவி ஆய்வு மேற்கொண்டாா். ஆத்தூா், நரசிங்கபுரம் நக... மேலும் பார்க்க

ஏற்காட்டில் 48 ஆவது மலா்க் கண்காட்சி இன்று தொடக்கம்!

சேலம் மாவட்டம், ஏற்காட்டில் 48ஆவது கோடை விழா, மலா்க் கண்காட்சி வெள்ளிக்கிழமை (மே 23) தொடங்குகிறது. 29 ஆம் தேதி வரை நடைபெறும் விழாவில் இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை, சுற்றுலாத் துறை... மேலும் பார்க்க