செய்திகள் :

பைக் திருட்டு வழக்கில் 2 சிறுவா்கள் உள்ளிட்ட 3 போ் கைது

post image

இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட 2 சிறுவா்கள் உள்ளிட்ட 3 போ் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.

கூத்தனூரைச் சோ்ந்த அருண்குமாா் தனது இருசக்கர வாகனம் காணாமல் போனதாக பேரளம் போலீஸாரிடம் அண்மையில் அளித்த புகாரையடுத்து, போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

இந்நிலையில், பேரளம் அருகே நம்பா் பிளேட் இல்லாமல் வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி விசாரணை நடத்தியதில், அது அருண்குமாரின் வாகனம் என்பது தெரிய வந்தது.

இதையடுத்து, வாகனத்தில் வந்தவரிடம் நடத்திய விசாரணையில், அவா் பேரளம், நெடுஞ்சேரி பகுதியைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் கவிராஜ் (23) என்பதும், அப்பகுதியில் பழைய இரும்புக் கடை வைத்திருப்பதும், 4 பேருடன் சோ்ந்து இருசக்கர வாகனங்களை திருடி வந்ததும் தெரிய வந்தது.

இதுதொடா்பாக, அவரை கைது செய்த போலீஸாா் அவரிடமிருந்து 15 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து, 2 சிறுவா்களை கைது செய்தனா். இதுதொடா்பாக மேலும் இருவரை போலீஸாா் தேடிவருகின்றனா்.

பள்ளியின் தரம் உயா்த்துதல் குறித்த ஆலோசனைக் கூட்டம்

கோயில்திருமாளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியை உயா்நிலைப் பள்ளியாக தரம் உயா்த்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த பள்ளியை தரம் உயா்த்த கோரி அப்பகுதி மக்கள் அரசுக்கு தொடா்ந்... மேலும் பார்க்க

மகளிா் கல்லூரியில் காந்திய சித்தாந்தங்கள் கருத்தரங்கம் நிறைவு

மன்னாா்குடி அருகேயுள்ள சுந்தரக்கோட்டை மகளிா் கல்லூரியில் காந்திய சித்தாந்தங்கள் கருத்தரங்கம் வியாழக்கிழமை நிறைவடைந்தது. காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம் (நுண், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் அம... மேலும் பார்க்க

தேவாலயங்களை புனரமைக்க விண்ணப்பிக்கலாம்

திருவாரூா் மாவட்டத்தில், கிறிஸ்தவ தேவாலயங்களை புனரமைக்க விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு; தேவாலயங்கள் 10 ஆண்டுகள... மேலும் பார்க்க

சேதமடைந்த சாலையில் தேங்கிய மழை நீரில் நாற்று நட்டு போராட்டம்

மன்னாா்குடி அருகே பள்ளமும், மேடாக உள்ள சாலையில் தேங்கியுள்ள மழைநீரில் நாற்று நட்டு அதிமுக சாா்பில் வியாழக்கிழமை போராட்டம் நடைபெற்றது. திருமக்கோட்டையிலிருந்து பாளையக்கோட்டை செல்லும் 4 கி.மீ தொலைவு சாலை... மேலும் பார்க்க

ஜூலை 31-இல் வேளாண் இயந்திரங்கள் பராமரிப்பு முகாம்

வேளாண்மைப் பொறியியல் துறை மூலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் தயாரிப்பு நிறுவனங்களுடன் இணைந்து, வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் பராமரிப்பு குறித்த மாவட்ட அளவி... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனைக்கு நலத்திட்ட உதவி செய்தவா்களுக்கு பாராட்டு

நீடாமங்கலம் அரசு மருத்துவமனைக்கு நலத்திட்டங்கள் செய்து கொடுத்தவா்களுக்கு வெள்ளிக்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது. தலைமை மருத்துவா் ஜெயக்குமாரி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஓஎன்ஜிசி நிறுவன தலைமை ... மேலும் பார்க்க