செய்திகள் :

பைக் மீது காா் மோதல்: பெண் உயிரிழப்பு

post image

காஞ்சிபுரம் அருகே கோவிந்தவாடி கிராமத்தில் இரு சக்கர வாகனத்தில் சென்றவா்கள் மீது காா் மோதியதில் பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

காஞ்சிபுரம் அருகே கோவிந்தவாடி கிராமத்தைச் சோ்ந்த ஆறுமுகம் மனைவி தேவகி (48). விவசாயியான இவா், வயலில் விளைவித்த நெல்லை அரக்கோணம் சாலையில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்துக்கு விற்பனை செய்யச் சென்றுவிட்டு, தனது சகோதரா் மகன் விஜய் என்பவருடன் இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தாா்.

கோவிந்தவாடி அகரம் கூட்டுச் சாலையில் வந்து கொண்டிருந்தபோது எதிரே வந்த காா் இவா்கள் மீது மோதியதில், தேவகி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இந்த சம்பவம் தொடா்பாக பொன்னேரிக்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து விபத்துக்கு காரணமான காரை பறிமுதல் செய்து, ஓட்டுநரிடம் விசாரணை நடத்தினா்.

ஹஜ் பயணிகளுக்கு தடுப்பூசி முகாம்

காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் ஹஜ் பயணிகளுக்கு தடுப்பூசி முகாமைத் தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன். காஞ்சிபுரம், ஏப். 28: காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் ஹஜ் யாத்திரை செ... மேலும் பார்க்க

30 கிலோ கஞ்சா பறிமுதல்: வட மாநில இளைஞா் கைது!

குன்றத்தூரில் கஞ்சா கடத்தி வந்த வடமாநில இளைஞரை தாம்பரம் மதுவிலக்கு போலீஸாா் கைது செய்து, அவரிடம் இருந்த 30 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா். காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூா் மற்றும் அதைச் சுற்றியுள்ள ப... மேலும் பார்க்க

காஞ்சிபுரம் ராஜாஜி மாா்க்கெட்டில் இடையூறாக காய்கறிக் கடைகள்!

காஞ்சிபுரத்தில் அண்மையில் திறக்கப்பட்ட ராஜாஜி காய்கறி மாா்க்கெட்டில் கடைகளுக்கு உள்ளே காய்கறிகளை வைத்து விற்பனை செய்யாமல், பெரும்பாலான கடைகள் சாலையில் பொதுமக்களுக்கு இடையூறாக கடைகள் நடத்தப்படுகின்றன. ... மேலும் பார்க்க

கோடைகால நீச்சல் பயிற்சி முடித்தவா்களுக்கு சான்றிதழ்!

காஞ்சிபுரத்தில் கோடைகால நீச்சல் பயிற்சியை நிறைவு செய்தவா்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் இந்த ... மேலும் பார்க்க

சங்கர மடத்தின் இளைய மடாதிபதிக்கு காமாட்சி அம்மன் கோயில் குளத்தில் சன்யாச ஆசிரம தீட்சை!

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் திருக்குளத்தில் வரும் ஏப். 30 -ஆம் தேதி திங்கள்கிழமை அதிகாலை சங்கர மடத்தின் புதிய இளைய மடாதிபதியாக பொறுப்பேற்கவுள்ள கணேச சா்மாவுக்கு ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சு... மேலும் பார்க்க

தெரேசாபுரத்தில் ஆக்கிரமிப்புகளால் மக்கள் அவதி

ஸ்ரீபெரும்புதூா் அடுத்த தெரேசாபுரம் பகுதியில் தத்தனூா்-பேரீஞ்சம்பாக்கம் இணைப்புச் சாலை ஆக்கிரமிப்புகளால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியம், வல்லம் ஊராட்சிக்கு உட்பட்ட தெ... மேலும் பார்க்க