செய்திகள் :

பையனூரில் அடுக்குமாடி குடியிருப்பு - சினிமா, டிவி நட்சத்திரங்களுக்கு குட் நியூஸ் சொன்ன தமிழக அரசு!

post image

கடந்த 2010-ம் ஆண்டு திமுக ஆட்சியில் செங்கல்பட்டு மாவட்டம் பையனூரில் 1000 ஏக்கரில் திரைப்பட நகரம் அமைக்க உத்தரவிட்டிருந்தார் அப்போதைய முதல்வர் கருணாநிதி. அந்த பகுதியின் உள்ளேயே சினிமா மற்றும் சின்னத்திரை நடிகர்களுக்காக அடுக்குமாடி குடியிருப்பு கட்டிக்கொள்வும் அரசாணை வெளியாகியிருந்தது. 

ஆனால் இந்த அறிவிப்பு வந்த அடுத்த ஆண்டிலேயே, தேர்தல் வந்து அதிமுக ஆட்சிக்கு வந்து விட, தொடர்ந்து அதன் பத்தாண்டு ஆட்சிக் காலத்தில் இந்த அரசாணை மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படாமலிருந்ததாக சொல்கிறார்கள்.

அதேநேரம் திரைப்பட நகரம் உருவாக்கும் பணி மட்டும் நடந்ததன் விளைவாக தற்போது சில படங்களின் சினிமா ஷூட்டிங்குள் அங்கு நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், அடுக்கு மாடி கட்டுவதற்காகப் பிறப்பிக்கப்பட்ட அரசாணையைப் புதுப்பித்துச் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கும்படி கோரிக்கை வைத்தது தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம். இதற்காக சங்க நிர்வாகிகள் துணை முதல்வர் உதயநிதியைச் சந்தித்துப் பேசியிருந்தனர். தொடர்ந்து முதல்வரின் கவனத்துக்கும் இந்த விஷயம் கொண்டு செல்லப்பட்டதாகத் தெரிகிறது.

தமிழக அரசு

தற்போது தமிழக அரசு இந்த அரசாணையை ஏற்கனவே இருந்தது போலவே புதுப்பித்து உத்தரவிட்டிருக்கிறதாம். எனவே சினிமா மற்றும் சின்னத்திரைக் கலைஞர்கள் பயன்பெறுவிதம் அடுக்கு மாடி குடியிருப்புகள் அமைக்கும் பணி விரைவில் தொடங்கலாமென தெரியவருகிறது.

தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறது முரளி ராமநாராயணைத் தலைவராகக் கொண்ட தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

``சிவராத்திரிக்கு தமிழ்நாட்டில் இருக்க மாட்டேன்; சிவன் எழுத்தைப் பார்க்கப் போறேன்" - நடிகை மதுமிதா

'சின்ன பாப்பா பெரிய பாப்பா' உள்ளிட்ட சில டிவி நிகழ்ச்சிகளிலும் 'ஒரு கல் ஒரு கண்ணாடி' முதலிய சில படங்களிலும் நடித்தவர் நடிகை மதுமிதா. விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியிலும்கலந்து கொண்டவர். நடிப்பு தா... மேலும் பார்க்க

Ethirneechal : ஆதி குணசேகரன் ஆட்டம் ஆரம்பம்; இம்முறையாவது பெண்கள் அணி ஜெயிக்குமா?

எதிர்நீச்சல் சீரியலின் முதல் பாகத்தில் குணசேகரன் தன் தங்கை ஆதிரைக்கு கரிகாலனுடன் கட்டாயத் திருமணம் செய்து வைப்பார். அந்த திருமணத்தை நிறுத்த ஜனனி, நந்தினி, ஈஸ்வரி ஆகியோர் (பெண்கள் அணி) பல முயற்சிகளை மே... மேலும் பார்க்க

திடீரென நீக்கப்பட்ட இயக்குநர்; நடிகையுடனான பிரச்னை காரணமா? `வள்ளியின் வேலன்' தொடரில் என்ன நடக்கிறது?

ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் தொடர் 'வள்ளியின் வேலன்'. 'கலர்ஸ்' சேனலில் ஒளிபரப்பான 'திருமணம்' தொடர் மூலம் சின்னத்திரை ரசிகர்களுக்கு அறிமுகமாகி பிரபலமான சித்து - ஸ்ரேயா ஜோடி திருமணத்துக்குப் பின் ... மேலும் பார்க்க

Siragadikka Aasai: மீனாவால் பொசசிவ் ஆகும் ரோகிணி... ஆழமாகும் அருண்-சீதா நட்பு; அடுத்து என்ன?

சிறகடிக்க ஆசை சீரியலின் நேற்றைய எபிசோடில் பரசு தன் மகளின் திருமணத்திற்குப் பத்திரிக்கை வைக்க அண்ணாமலை வீட்டிற்கு வருகிறார். முத்து, மீனா, ரவி ஆகியோர் மகிழ்ச்சியுடன் அவர்களிடம் பேசிக் கொண்டிருக்க விஜயா... மேலும் பார்க்க

``காதல் மத எல்லைகளுக்கு அப்பாற்பட்டது!'' -திருணம் குறித்து மனம் திறக்கும் பாவ்னி!

பிக் பாஸ் வீட்டில் காதலை தொடங்கி, கடந்த 2023-ம் ஆண்டு காதலர் தினத்தன்று தங்களின் காதல் குறித்து அதிகாரப்பூர்வமாக அமீர் - பாவ்னி ஜோடி அறிவித்திருந்தார்கள். அதனை தொடர்ந்து இந்தாண்டு காதலர் தினத்தன்று தங... மேலும் பார்க்க

7 முதல் 3 மணி வரை விடாத போன் கால்; ஓட்டமெடுத்த தேர்தல் அலுவலர்; செய்தி வாசிப்பாளர் சங்கப் பஞ்சாயத்து

சுமார் 500 பேர் உறுப்பினர்களாக இருக்கும் தமிழ் செய்தி வாசிப்பாளர் சங்கத்தில் புதிய நிர்வாகிகள் தேர்தல் இம்மாதக் கடைசியில் நடக்கவிருப்பதாக சில தினங்களுக்கு முன்னர் அறிவிப்பு வெளியானது.தேர்தல் நடத்தும் ... மேலும் பார்க்க