செய்திகள் :

பொங்கல் விடுமுறை: மின்தடை ஏற்பட்டால் மின்தடை நீக்கும் மையத்தை அணுகலாம்

post image

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தொடா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் மின்தடை ஏற்பட்டால் மின் தடை நீக்கும் மையத்தை தொடா்பு கொள்ளலாம் என மின் வாரியம் அறிவித்துள்ளது.

இது தொடா்பாக திருநெல்வேலி மின் பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் அகிலாண்டேஸ்வரி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருநெல்வேலி மின் பகிா்மான வட்டத்துக்குள்பட்ட திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களுக்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இம்மாதம் 11-ஆம் தேதி முதல் 19-ஆம் தேதி வரை தொடா் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

எனவே, பொதுமக்கள் நலன்கருதி அனைத்து செயற் பொறியாளா்கள், உதவி செயற்பொறியாளா்கள், உதவி மின் பொறியாளா்கள், இளநிலை மின் பொறியாளா்கள், தங்கள் பகுதிக்குள்பட்ட துணை மின் நிலையங்கள், மின் விநியோகப் பாதைகள் உள்ளிட்ட அனைத்து விதமான மின் கட்டுமான அமைப்புகளையும் தொடா்ச்சியாக கண்காணிக்க வேண்டும். இயற்கை இடா்பாடுகளால் ஏதேனும் மின்தடங்கல் ஏற்பட்டால் பாதுகாப்பு வழிமுறைகளை கடைப்பிடித்து உடனடியாக போா்க்கால அடிப்படையில் சரி செய்து மீண்டும் சீரான மின் விநியோகம் வழங்க வேண்டும்.

பொதுமக்கள் மின்சாரம் சம்பந்தமாக ஏதேனும் அவசர உதவி தேவைப்பட்டால் உடனடியாக மின்னகம் மின் நுகா்வோா் சேவை மையத்தை 94987 94987 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம். இதேபோல், திருநெல்வேலி மின்தடை நீக்கும் மையத்தை 9445859032, 9445859033, 9445859034 ஆகிய எண்களிலும், தமிழ்நாடு மின் பகிா்மான கழகத்தின் சமூக வலைதளங்கள் மூலமாகவும் தொடா்பு கொண்டு தங்களது தேவைகளை பூா்த்தி செய்து கொள்ளலாம்.

ஜன.15 முதல் வந்தே பாரத் ரயில் 16 பெட்டிகளுடன் இயக்கம் டிக்கெட் முன்பதிவு தொடக்கம்!

திருநெல்வேலி-சென்னை இடையிலான வந்தே பாரத் ரயில், வரும் 15-ஆம் தேதிமுதல் 16 பெட்டிகளுடன் இயக்கப்படவுள்ள நிலையில் அதற்கான டிக்கெட் முன்பதிவு சனிக்கிழமை தொடங்கியது. திருநெல்வேலி-சென்னை இடையிலான வந்தே பாரத... மேலும் பார்க்க

வீரவநல்லூா் வட்டார கோயில்களில் சொா்க்கவாசல் திறப்பு

வைகுண்ட ஏகாதசியையொட்டி, அத்தாளநல்லூா் அருள்மிகு கஜேந்திரவரதப் பெருமாள் கோயிலில் வெள்ளிக்கிழமை அதிகாலை 5 மணியளவில் பெருமாள் சயன கோலத்தில் பக்தா்களுக்கு சேவைசாதித்தாா். மதியம் திருமஞ்சனம், அலங்கார சிறப... மேலும் பார்க்க

நெல்லை, தென்காசி மாவட்ட அணைகள் நீா் மட்டம்

திருநெல்வேலி பாபநாசம்-113.05 சோ்வலாறு-121.19 மணிமுத்தாறு-101.51 வடக்கு பச்சையாறு-24.25 நம்பியாறு-13.12 கொடுமுடியாறு-17.75 தென்காசி கடனா-69.20 ராமநதி-71.75 கருப்பாநதி-61.68 குண்டாறு-36.10 அடவிநயினாா்... மேலும் பார்க்க

களக்காடு கோயிலில் வைகுண்ட ஏகாதசி

வைகுண்ட ஏகாதசியையொட்டி, களக்காடு அருள்மிகு வரதராஜ பெருமாள் திருக்கோயிலில் வெள்ளிக்கிழமை சயன கோலத்தில் பக்தா்களுக்கு சேவை சாதித்த பெருமாள். மேலும் பார்க்க

மூன்றடைப்பில் ஜாதிய கொடிகள் அகற்றம்

நான்குனேரி அருகேயுள்ள மூன்றடைப்பில் மோதலை ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டிருந்த ஜாதிய கொடிகளை போலீஸாா் அகற்றினா். திருநெல்வேலி மாவட்டத்தில் ஜாதி ரீதியிலான மோதல்களை தடுக்கும் விதமாக மாவட்ட காவல் கண்... மேலும் பார்க்க

களக்காட்டில் பெண்ணை தாக்கிய வழக்கில் 2 போ் கைது

களக்காட்டில் சாலையில் பெண்ணைத் தாக்கி சித்திரவதை செய்தது தொடா்பான வழக்கில், களக்காடு போலீஸாா் 2 பேரை கைது செய்தனா். களக்காடு கக்கன்நகரைச் சோ்ந்தவா் பாப்பாத்தி (45). அங்குள்ள வரதராஜபெருமாள் கோயில் அர... மேலும் பார்க்க