செய்திகள் :

பொதுத்துறை நிறுவனத்தில் வேலை: ஐடிஐ, டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

post image

பெங்களூரை தலைமையிடமாகக் கொண்ட இந்திய பொதுத்துறை விண்வெளி மற்றும் பாதுகாப்பு மின்னணு பொதுத்துறை நிறுவனமான பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள பொறியாளர் உதவியாளர் டிரெய்னி பணியிடங்களுக்கு ஐடிஐ, பொறியியல் துறையில் டிப்ளமோ முடித்தவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்: BEL/HYD/2024-25/03

பணி: Engineering Assistant Trainee

காலியிடங்கள் : 8

சம்பளம் : மாதம் ரூ. 24,500 - 5.90,000

தகுதி : பொறியியல் துறையில் Electronics Communication பாடத்தில் 3 ஆண்டு டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு : 28-க்குள் இருக்க வேண்டும்.

பணி: Technician

காலியிடங்கள்: 21

சம்பளம்: மாதம் ரூ. 21,500 - 5.82,000

தகுதி: எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிக் பிரிவில் ஐடிஐ முடித்து அப்ரண்டிஸ் பயிற்சியும் முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு : 28-க்குள் இருக்க வேண்டும்.

பணி: Junior Assistant

காலியிடங்கள் : 3

சம்பளம்: மாதம் ரூ.21,500-.82,000

தகுதி : பி.காம் அல்லது பிபிஎம் முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு : 28-க்குள் இருக்க வேண்டும்.

கடற்படையில் பிளஸ் 2 முடித்தவர்களுக்கு மருத்துவ உதவியாளர் பணி

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். எழுத்துத்தேர்வில் வெற்றி பெற்று நேர்முகத்தேர்விற்கு வரும் நபர்களுக்கு ரயில் பயணக் கட்டணம் வழங்கப்படும்.

எழுத்துத் தேர்வுக்கான அழைப்புக்கடிதம் தகுதியானவர்களுக்கு மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும். எழுத்துத் தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்படும். எழுத்துத் தேர்வு Mental Ability, Logical Reasoning, Analytical, General Knowledge, Data Interpretation போன்ற பிரிவுகள் மற்றும் முக்கிய பொறியியல் பாடப்பிரிவுகளிலிருந்து கேள்விகள் கேட்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.250 மட்டும். கட்டணத்தை எஸ்பிஐ வங்கி மூலமாக ஆன்லைன்முறையில் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினர்களுக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: www.bel-india.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் விண்ணப்பப் படிவ லிங்கை பயன்படுத்தி ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும். எழுத்துத் தேர்வுக்கு வரும்போது விண்ணப்ப பிரிண்ட் அவுட்டை கொண்டுவர வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 10.4.2025

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் ஆராய்ச்சிப் பணிகள்

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின்(இஸ்ரோ) கீழ் செயல்பட்டு வரும் தரவு சேமிப்பு மற்றும் தகவல் பரிமாற்றத்திற்கான மையத்தில் காலியாகவுள்ள JRF மற்றும் Research Associate பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இர... மேலும் பார்க்க

ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தில் ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் வேலை: காலியிடங்கள்: 63

ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட்டில் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Junior... மேலும் பார்க்க

சென்னை ஐஐடியில் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்!

சென்னையில் உள்ள சென்னை ஐஐடி -இன் தொழில்துறை ஆலோசனை துறையில் நிரப்பப்பட உள்ள இளநிலை அலுவலர் பணிக்கு பட்டதாரி இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விளம்பர எண். ICSR/PR/Advt.64/2025பணி:... மேலும் பார்க்க

தேசிய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை: உடனே விண்ணப்பிக்கவும்!

புதுதில்லியிலுள்ள தேசிய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில்(என்ஐஇஎல்ஐடி) கீழ்வரும் பணிக்கு தகுதியான பொறியியல் பட்டதாரிகளிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வி... மேலும் பார்க்க

தேசிய தலைநகர் பிராந்திய போக்குவரத்துக் கழகத்தில் வேலை வேண்டுமா?

புதுதில்லியில் செயல்பட்டு வரும் மத்திய அரசு மற்றும் ஹரியாணா, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், தில்லி மாநிலங்களின் கூட்டு முயற்சி நிறுவனமான தேசிய தலைநகர் பிராந்திய போக்குவரத்துக் கழகத்தில் நிரப்பப்பட உள்ள 7... மேலும் பார்க்க

கடற்படையில் பிளஸ் 2 முடித்தவர்களுக்கு மருத்துவ உதவியாளர் பணி

இந்திய கடற்படையின் மருத்துவப் பிரிவில் காலியாக மருத்துவ உதவியாளர் பணியிடங்களு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணியிடங்களுக்கு ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க... மேலும் பார்க்க