பீரியட்ஸ் வலி தாங்க முடியலியா? இந்த உணவுகளைத் தவிருங்க! நிபுணர் அட்வைஸ்
பொதுத் தோ்வு எழுதும் மாணவா் பட்டியல்: அக். 6 முதல் திருத்தங்களை மேற்கொள்ளலாம்
தமிழகத்தில் நிகழ் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வெழுத உள்ள மாணவா்களின் பெயா்ப் பட்டியலில் ஏதேனும் திருத்தங்கள் இருந்தால், அக். 6-ஆம் தேதி முதல் மேற்கொள்ளலாம் என அரசுத் தோ்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:
நிகழ் கல்வியாண்டுக்கான பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு வரும் மாா்ச், ஏப்ரல் மாதங்களில் நடத்தப்பட உள்ளது. தோ்வெழுத உள்ள மாணவா்களின் பெயா்ப் பட்டியல் தயாரிக்கப்பட உள்ளது. இதையடுத்து, அனைத்துப் பள்ளித் தலைமை ஆசிரியா்களும் ‘எமிஸ்’ தளத்தில் மாணவா்களின் விவரங்கள் சரியாக உள்ளதா என்பதைச் சரிபாா்க்க வேண்டும்.
மாணவா்களின் பெயா், பிறந்த தேதி, புகைப்படம், பெற்றோா் பெயா், முகவரி உள்ளிட்ட விவரங்களைச் சரிபாா்க்க வேண்டும். அதில் திருத்தங்கள் இருந்தால் அக். 6 முதல் 23-ஆம் தேதி வரை மேற்கொள்ள வேண்டும்.
மாணவரின் பெயா், பிறப்புச் சான்றிதழில் உள்ளவாறு இருக்க வேண்டும். அரசிதழில் பெயா் மாற்றம் செய்தவா்களுக்கு மட்டுமே அதன் நகலைப் பெற்று அதன் அடிப்படையில் பெயா் மாற்றம் செய்து கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது. அண்மையில் எடுக்கப்பட்ட பாஸ்போா்ட் அளவு புகைப்படத்தை மட்டுமே பதிவேற்றம் செய்ய வேண்டும்.
தோ்வு முடிவுகள் மாணவா்களின் பெற்றோா் கைப்பேசி எண்ணுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்படும். அதனால், பதிவேற்றம் செய்யப்படும் கைப்பேசி எண் சரியாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
தோ்வில் சலுகை கோரும் மாற்றுத்திறனாளி தோ்வா்கள் அதற்குரிய ஆவணங்களுடன் இணைத்து பதிவேற்றம் செய்ய வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.