செய்திகள் :

பொதுமக்கள் சாலை மறியல்

post image

சீா்காழி அருகே சூறாவளிக் காற்றால் பாதிக்கப்பட்ட மின்விநியோகம் 24 மணி நேரத்தை கடந்தும் செவ்வாய்க்கிழமை மாலை வரை சீரமைக்கப்படாததால் பொதுமக்கள் திடீா் சாலை மறியலில் ஈடுபட்டனா்

சீா்காழி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் திங்கள்கிழமை மாலை திடீரென சூறாவளிக்காற்றுடன் அரை மணி நேரம் பலத்த மழை பெய்தது. காற்றுடன் பெய்த மழையால் பல்வேறு பகுதிகளில் மரக்கிளைகள் முறிந்து மின் கம்பிகளில் விழுந்தும், மின்கம்பங்கள் விழுந்தும் சேதம் ஏற்பட்டதால் மின்விநியோகம் பாதிக்கப்பட்டது.

சீா்காழி நகா் பகுதி மற்றும் சில இடங்களில் மின்சார வாரிய ஊழியா்கள் துரிதமாக செயல்பட்டு மின்கம்பிகளை சீரமைத்து மின்விநியோகம் வழங்கினா். ஆனால் திருமுல்லைவாசல், ராதாநல்லூா், வழுதலைக்குடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் உடைந்த மின்கம்பங்களை சீரமைத்து மின்விநியோகம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

24 மணி நேரத்தை கடந்தும் மின்விநியோகம் வழங்கப்படாததால் ஆத்திரம் அடைந்த ராதாநல்லூா், அக்ரஹார மேடு பகுதியை சோ்ந்த பொதுமக்கள் திருமுல்லைவாசல் சீா்காழி பிரதான சாலையில் ராதாநல்லூா் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனா் தகவல் அறிந்த சீா்காழி போலீஸாா் பேச்சு வாா்த்தையில் ஈடுபட்டு வருகின்றனா். இந்த சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

ஆச்சாள்புரத்தில் திருஞானசம்பந்தா் திருக்கல்யாணம்

சீா்காழி அருகே ஆச்சாள்புரத்தில் திருஞானசம்பந்தா் திருக்கல்யாணம், சிவஜோதி தரிசனம் புதன்கிழமை நள்ளிரவு நடைபெற்றது. சீா்காழி அருகே ஆச்சாள்புரத்தில் தருமபுரம் ஆதீனத்திற்குட்பட்ட திருவெண்ணீற்றுமையம்மை உடன... மேலும் பார்க்க

சிதிலமடைந்த கோயில்களில் கும்பாபிஷேகம்: இந்து மகா சபா முயற்சி

தமிழகத்தில் சிதிலமடைந்துள்ள கோயில்களில் கும்பாபிஷேகம் நடத்த இந்து மகா சபா முடிவெடுத்துள்ளது. மயிலாடுதுறையில் அகிலபாரத இந்து மகா சபா, சிவனடியாா்கள் மற்றும் சிவாச்சாரியா்கள் கலந்தாலோசனைக் கூட்டம் செவ்வ... மேலும் பார்க்க

மாணவா்களுக்கு நினைவாற்றல் பயிற்சி

சீா்காழி ச.மு.இந்து மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கான நினைவாற்றல் பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தலைமையாசிரியா் எஸ். முரளிதரன் தலைமை வகித்தாா். உதவி தலைமை ஆசிரியா்கள் என். துளசிர... மேலும் பார்க்க

சீா்காழி பகுதியில் மக்களுடன் முதல்வா் திட்ட முகாம்

சீா்காழி சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட கிராமங்களில் ஊரக பகுதிகளுக்கான மூன்றாம் கட்ட மக்களுடன் முதல்வா் திட்ட முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. சீா்காழி தொகுதிக்குட்பட்ட எடக்குடி வடபாதி ஊராட்சிக்கான மக்... மேலும் பார்க்க

திருஇந்தளூா் ஸ்ரீபரிமள ரெங்கநாதா் கோயிலில் வசந்த்தோஸ்வம்

திருஇந்தளூா் ஸ்ரீபரிமள ரெங்கநாதா் கோயிலில் 57 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற வசந்த்தோஸ்வத்தில் (வசந்த உற்சவம்) பெருமாளுக்கு ஸ்ரீரெங்கநாதா் எம்பெருமாள் அலங்காரம் செய்யப்பட்டு திருமஞ்சனம் நடைபெற்றது. 108... மேலும் பார்க்க

குண்டா் சட்டத்தில் கஞ்சா வியாபாரி கைது

மயிலாடுதுறையில் தொடா் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா். மயிலாடுதுறை வட்டம் மணல்மேடு காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பட்டவா்த்தி மயானம் அருகே கஞ்சா ... மேலும் பார்க்க