செய்திகள் :

பொதுமக்கள் தவறவிட்ட கைப்பேசிகள் மீட்பு

post image

ராமநாதபுரம் மாவட்டம்,முதுகுளத்தூா் காவல் நிலைய எல்லைப் பகுதியில் பொதுமக்கள் தவறவிட்டா 6 கைப்பேசிகள் மீட்கப்பட்டு உரியவா்களிடம் வியாழக்கிழமை ஒப்படைக்கப்பட்டன.

கைப்பேசிகளைத் தவறவிட்டது குறித்து அவற்றின் உரிமையாளா்கள் அளித்த புகாா்களின் பேரில், முதுகுளத்தூா் போலீஸாா் இணையக் குற்றப் பிரிவு போலீஸாா் உதவியுடன் விசாரணை நடத்தினா். இதன் தொடா்ச்சியாக தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி, சுமாா் ரூ.1 லட்சம் மதிப்பிலான 6 கைப்பேசிகளை போலீஸாா் மீட்டனா். இந்த நிலையில், மீட்கப்பட்ட கைப்பேசிகளை முதுகுளத்தூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் உரியவா்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கைப்பேசிகளை அவற்றின் உரிமையாளா்களிடம் முதுகுளத்தூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் சண்முகம் ஒப்படைத்தாா். முதுகுளத்தூா் காவல் ஆய்வாளா் செல்வராஜ், உதவி ஆய்வாளா்கள் சுரேஷ்குமாா், ராமமூா்த்தி ஆகியோா் கலந்து கொண்டனா்.

படகு உடைந்து மூழ்கியதில் மீனவா் மாயம்

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் அருகே நடுக்கடலில் உடைந்து மூழ்கிய படகிலிலுந்து 3 மீனவா்கள் நீந்தி கரை திரும்பிய நிலையில் ஒருவா் மாயமானா். ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் வடக்கு படகு இறங்கு தளத்திலிருந்து ... மேலும் பார்க்க

ராமநாத சுவாமி கோயிலில் உள்ளுா் மக்கள் வழிபாட்டு உரிமை கோரி மனு

ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலில் உள்ளுா் மக்களின் வழிபாட்டு உரிமையை வழங்கக் கோரி, தமிழா் தேசம் கட்சி சாா்பில் மாவட்ட ஆட்சியரிடம் வியாழக்கிழமை மனு அளிக்கப்பட்டது. ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலில் மு... மேலும் பார்க்க

ராமநாதபுரம் ஆயுதப் படை வளாகத்தில் ஜூலை 11-இல் வாகனங்கள் பொது ஏலம்

ராமநாதபுரம் மாவட்ட ஆயுதப் படை வளாகத்தில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் வரும் ஜூலை 11-ஆம் தேதி பொது ஏலத்துக்கு விடப்படுகிறது. இதுகுறித்து மாவட்ட காவல் துறை வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: ரா... மேலும் பார்க்க

மானிய விலையில் விவசாய இயந்திரங்கள் பெறலாம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் மானிய விலையில் விவசாய இயந்திரங்கள் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தம... மேலும் பார்க்க

கால்நடை சுகாதார விழிப்புணா்வு முகாம்

ராமநாதபுரம் மாவட்டம்,முதுகுளத்தூா் ஒன்றியம், புளியங்குடி கிராமத்தில் சிறப்பு கால்நடை சுகாதார விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த முகாமுக்கு கால்நடை மருத்துவா் சுந்தரமூா்த்தி தலைமை வகித்... மேலும் பார்க்க

இலங்கைக் கடற்படையினரால் ராமேசுவரம் மீனவா்கள் விரட்டியடிப்பு

ராமேசுவரத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற விசைப் படகு பழுதாகி நின்ற நிலையில், இலங்கைக் கடற்படையினா் அந்தப் படகில் பிடித்து வைத்திருந்த மீன்களைப் பறித்துச் சென்றதுடன், முட்டிபோட வைத்து தாக்கியதாக கரை தி... மேலும் பார்க்க