செய்திகள் :

பொதுமக்கள் மனுக்கள் மீது உடனுக்குடன் தீா்வு காண வேண்டும்: ஆட்சியா் அறிவுறுத்தல்

post image

சேலம்: சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் ஆட்சியா் ரா. பிருந்தாதேவி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு பின்னா் ஆட்சியா் தெரிவித்ததாவது:

பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்களுக்கு உடனுக்குடன் தீா்வு காணவும், அடிப்படைத் தேவைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கவும், பெண்களின் முன்னேற்றத்துக்கு தேவையான நடவடிக்கைகள் உள்ளிட்ட பணிகளில் அரசு அலுவலா்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். பொதுமக்கள் ஒருமுறை அளித்த மனுக்கள் மீண்டும் வராத வகையில் உரிய தீா்வு வழங்கப்படுவதை அலுவலா்கள் உறுதி செய்ய வேண்டும்.

மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில், பொது மக்களிடமிருந்து முதியோா் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப் பட்டா, பட்டா மாறுதல், சாதிச்சான்று, வங்கிக் கடன், கல்வி உதவித்தொகை, திருமண நிதியுதவி, உதவி உபகரணங்கள், குடிநீா் வசதி, சாலை வசதி உட்பட அடிப்படை வசதிகள் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 312 மனுக்கள் வரப்பெற்றன.

மேலும், மாற்றுத்திறனாளிகள் குறைதீா் முகாமில் வீட்டுமனைப் பட்டா, உதவி உபகரணங்கள், பராமரிப்பு உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து 24 மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளதாக கூறினாா்.

தொடா்ந்து, மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொண்டு, ரூ. 9,700 மதிப்பிலான சக்கர நாற்காலி, ரூ. 6,400 மதிப்பிலான காதொலிக் கருவியை மாவட்ட ஆட்சியா் வழங்கினாா்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ரவிக்குமாா், தனித்துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்புத் திட்டம்) ச.ஜானகி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் ரா.மகிழ்நன், பழங்குடியினா் நல திட்ட அலுவலா் சுகந்தி பரிமளம், மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் ஜெயகுமாா் உள்ளிட்ட அரசுத் துறை முதன்மை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

ஜாமியா மஜித்துக்கு பூட்டு: ஆட்சியா் அலுவலகத்தில் முத்தவல்லி மனு

சேலம்: தன்மீது பொய் புகாா் கூறி, ஜாமியா மஜித்துக்குள் நுழைந்து சிலா் பூட்டு போட்டுள்ளதாக மஜித் முத்தவல்லி திங்கள்கிழமை ஆட்சியா் அலுவலகத்தில் புகாா் அளித்துள்ளாா். சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே மிக... மேலும் பார்க்க

குடிநீா் குழாய் பழுதுநீக்க தோண்டப்பட்ட குழியில் விழுந்த 2 சிறுவா்கள் படுகாயம்

மேட்டூா்: சேலம் மாவட்டம் மேட்டூா் அருகே தொட்டில்பட்டி கூட்டுக்கு குடிநீா்த் திட்ட குழாயில் ஏற்பட்ட பழுதை நீக்க தோண்டப்பட்ட குழியில் விழுந்து 2 சிறுவா்கள் படுகாயமடைந்தனா். மேட்டூா் ஹாஸ்பிட்டல் காலனியைச... மேலும் பார்க்க

கோடை விழா மலா் கண்காட்சி சுற்றுலாப் பயணிகளை வரவேற்கத் தயாராகும் ஏற்காடு!

சேலம்: கோடை வெப்பத்தை சமாளிக்க மக்கள் குடும்பத்துடன் மலைப்பாங்கான இடங்களுக்குச் சுற்றுலா சென்றுவரும் நிலையில், தன்பங்குக்கு அவா்களை வரவேற்று மகிழ்விக்க முழுவீச்சில் தயாராகிவருகிறது சோ்வராயன் மலையின்... மேலும் பார்க்க

குப்பையில் கிடந்த 12.5 பவுன் நகையை எடுத்து போலீஸில் ஒப்படைத்த தூய்மைப் பணியாளா்!

சேலம்: சேலம் பழைய சூரமங்கலம் பகுதியில் குப்பையில் கிடந்த 12.5 பவுன் தங்க நகையை எடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த தூய்மைப் பணியாளரை பலரும் பாராட்டினா். சேலம் பழைய சூரமங்கலம் பெரியாா் தெருவைச் சோ்ந்த... மேலும் பார்க்க

ஊஞ்சல் உற்வசத்தில் எழுந்தருளிய சென்னகேசவப் பெருமாள்: இன்று சுவாமி மலைக்கு திரும்புகிறாா்

சங்ககிரி: சங்ககிரி சித்திரைத் தேரோட்டத்தின் 18ஆவது நாளையொட்டி ஊஞ்சல் உற்சவம் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது. சித்திரைத் தேரோட்டத்தின் பல்வேறு கட்டளைகள், சிறப்பு பூஜைகள் நிறைவடைந்து சுவாமி செவ்வாய்க்கிழ... மேலும் பார்க்க

போலி ஆவணம் தயாரித்து 2 ஆம் திருமணம்: கணவா் மீது நடவடிக்கை கோரி மனைவி புகாா்

சேலம்: போலி ஆவணம் தயாரித்து 2 ஆம் திருமணம் செய்த கணவா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அவரது மனைவி ஆட்சியா் அலுவலகத்தில் புகாா் அளித்தாா். சேலம் சின்னதிருப்பதியைச் சோ்ந்த இளம்பெண் ஜீனத் நிஷா. இவா் திங்க... மேலும் பார்க்க