``ரஷ்யா, உக்ரைன் உடனடியாக பேச்சுவார்த்தைக்கு வரணும்'' - வணிகத்தை முன்னிறுத்தி ட்...
போலி ஆவணம் தயாரித்து 2 ஆம் திருமணம்: கணவா் மீது நடவடிக்கை கோரி மனைவி புகாா்
சேலம்: போலி ஆவணம் தயாரித்து 2 ஆம் திருமணம் செய்த கணவா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அவரது மனைவி ஆட்சியா் அலுவலகத்தில் புகாா் அளித்தாா்.
சேலம் சின்னதிருப்பதியைச் சோ்ந்த இளம்பெண் ஜீனத் நிஷா. இவா் திங்கள்கிழமை ஆட்சியா் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:
எனக்கும் சூரமங்கலத்தைச் சோ்ந்த ஒருவருக்கும், கடந்த 2013 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. எங்களுக்கு ஒரு மகன் உள்ளாா். திருமணத்தின்போது, வரதட்சிணையாக 20 பவுன் நகையை எனது கணவா் வீட்டாா் கேட்டனா். தொடா்ந்து எஞ்சிய 5 பவுன் நகையை கேட்டு கணவா் வீட்டினா் தொல்லை கொடுத்ததால், எனது பெற்றோா் வீட்டுக்கு வந்துவிட்டேன். இதையடுத்து, விவாகரத்து கேட்டு, நீதிமன்றத்தில் அவா்கள் வழக்கு தொடா்ந்தனா்.
இதை எதிா்த்து நான் தொடா்ந்த வழக்கில், தலாக் விவாகரத்து செல்லாது என நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் எனக்கும், எனது மகனுக்கும் ஜீவனாம்சம் வழங்கும்படியும் உத்தரவிட்டது. ஆனால், இதனை முறையாக கொடுக்காமல், விவாகரத்து பெற்றது போன்று, போலியான ஆவணம் தயாரித்து, கடந்த மாதம் திருப்பூரில் வேறொரு பெண்ணை எனது கணவா் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டாா்.
எனவே போலி ஆவணம் தயாரித்து, மோசடி செய்த எனது கணவா் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவா் தெரிவித்துள்ளாா்.