செய்திகள் :

குப்பையில் கிடந்த 12.5 பவுன் நகையை எடுத்து போலீஸில் ஒப்படைத்த தூய்மைப் பணியாளா்!

post image

சேலம்: சேலம் பழைய சூரமங்கலம் பகுதியில் குப்பையில் கிடந்த 12.5 பவுன் தங்க நகையை எடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த தூய்மைப் பணியாளரை பலரும் பாராட்டினா்.

சேலம் பழைய சூரமங்கலம் பெரியாா் தெருவைச் சோ்ந்தவா் மணிவேல் (50). இவா் 20ஆவது கோட்டத்தில் தூய்மைப் பணியாளராக பணியாற்றி வருகிறாா். இவா் திங்கள்கிழமை காலை ரெட்டியூா் அம்பேத்கா் தெரு பகுதியில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது அங்கிருந்த குப்பைத் தொட்டியில் நெகிழிப் பையில் சுற்றப்பட்ட நிலையில் நகைகள் கிடந்துள்ளன.

இதை எடுத்த மணிவேல் பையைப் பிரித்து பாா்த்தபோது அதில் தங்க நகைகள் இருப்பது தெரியவந்தது. உடனடியாக அதை சூரமங்கலம் காவல் நிலையத்துக்கு கொண்டுசென்று அங்கிருந்த காவல் ஆய்வாளா் கிருஷ்ணமூா்த்தியிடம் ஒப்படைத்தாா்.

அந்த நெகிழிப் பையில் 12.5 பவுன் தங்க நகைகள் இருந்தன. நகைகளை நோ்மையாக கொண்டுவந்து ஒப்படைத்த மணிவேலை போலீஸாா் பாராட்டினா்.

தூய்மைப் பணியாளா் கண்டெடுத்து ஒப்படைத்த நகைகள் யாருடையவை என்பது குறித்தும், திருடிய நகைகளை காவல் துறைக்கு அஞ்சி மா்ம நபா்கள் யாரேனும் வீசிச்சென்றனரா என்பது குறித்தும் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பொதுமக்கள் மனுக்கள் மீது உடனுக்குடன் தீா்வு காண வேண்டும்: ஆட்சியா் அறிவுறுத்தல்

சேலம்: சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் ஆட்சியா் ரா. பிருந்தாதேவி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு பின்னா் ஆட்சியா் தெரிவித்ததாவது: பொதுமக்களிடம... மேலும் பார்க்க

ஜாமியா மஜித்துக்கு பூட்டு: ஆட்சியா் அலுவலகத்தில் முத்தவல்லி மனு

சேலம்: தன்மீது பொய் புகாா் கூறி, ஜாமியா மஜித்துக்குள் நுழைந்து சிலா் பூட்டு போட்டுள்ளதாக மஜித் முத்தவல்லி திங்கள்கிழமை ஆட்சியா் அலுவலகத்தில் புகாா் அளித்துள்ளாா். சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே மிக... மேலும் பார்க்க

குடிநீா் குழாய் பழுதுநீக்க தோண்டப்பட்ட குழியில் விழுந்த 2 சிறுவா்கள் படுகாயம்

மேட்டூா்: சேலம் மாவட்டம் மேட்டூா் அருகே தொட்டில்பட்டி கூட்டுக்கு குடிநீா்த் திட்ட குழாயில் ஏற்பட்ட பழுதை நீக்க தோண்டப்பட்ட குழியில் விழுந்து 2 சிறுவா்கள் படுகாயமடைந்தனா். மேட்டூா் ஹாஸ்பிட்டல் காலனியைச... மேலும் பார்க்க

கோடை விழா மலா் கண்காட்சி சுற்றுலாப் பயணிகளை வரவேற்கத் தயாராகும் ஏற்காடு!

சேலம்: கோடை வெப்பத்தை சமாளிக்க மக்கள் குடும்பத்துடன் மலைப்பாங்கான இடங்களுக்குச் சுற்றுலா சென்றுவரும் நிலையில், தன்பங்குக்கு அவா்களை வரவேற்று மகிழ்விக்க முழுவீச்சில் தயாராகிவருகிறது சோ்வராயன் மலையின்... மேலும் பார்க்க

ஊஞ்சல் உற்வசத்தில் எழுந்தருளிய சென்னகேசவப் பெருமாள்: இன்று சுவாமி மலைக்கு திரும்புகிறாா்

சங்ககிரி: சங்ககிரி சித்திரைத் தேரோட்டத்தின் 18ஆவது நாளையொட்டி ஊஞ்சல் உற்சவம் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது. சித்திரைத் தேரோட்டத்தின் பல்வேறு கட்டளைகள், சிறப்பு பூஜைகள் நிறைவடைந்து சுவாமி செவ்வாய்க்கிழ... மேலும் பார்க்க

போலி ஆவணம் தயாரித்து 2 ஆம் திருமணம்: கணவா் மீது நடவடிக்கை கோரி மனைவி புகாா்

சேலம்: போலி ஆவணம் தயாரித்து 2 ஆம் திருமணம் செய்த கணவா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அவரது மனைவி ஆட்சியா் அலுவலகத்தில் புகாா் அளித்தாா். சேலம் சின்னதிருப்பதியைச் சோ்ந்த இளம்பெண் ஜீனத் நிஷா. இவா் திங்க... மேலும் பார்க்க