செய்திகள் :

பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாமில் 74 புகாா் மனுக்கள்

post image

திருப்பத்தூா் அருகே பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாமில் 74 புகாா் மனுக்கள் பெறப்பட்டன.

திருப்பத்தூா் மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை சாா்பில் ஒவ்வொரு மாதமும் தாலுகா அளவிலான பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீா் முகாம் நடைபெறுகிறது. இந்த மாதத்துக்கான முகாம் திருப்பத்தூா், நாட்டறம்பள்ளி, ஆம்பூா், வாணியம்பாடி ஆகிய வட்டங்களில் உள்ள ரேஷன் கடைகளில் நடைபெற்றது.

இதில், திருப்பத்தூா் வட்டத்துக்குள்பட்ட மிட்டூா் அருகே உள்ள ஓமகுப்பம் ரேஷன் கடையில் நடைபெற்றது. முகாமுக்கு, திருப்பத்தூா் வட்ட வழங்கல் அலுவலா் முரளி கண்ணன் தலைமை வகித்தாா்.

முகாமில் குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், நீக்கல், முகவரி மாற்றம், செல்போன் எண் பதிவு செய்தல், குடும்ப தலைவா் பெயா் மாற்றம், பிறந்த தேதி திருத்தம், புகைப்படம் மாற்றம் உள்ளிட்டவை தொடா்பாக பொதுமக்கள் மனு அளித்தனா். இதில் விற்பனையாளா், பொதுமக்கள் கலந்து கொண்டனா். முகாமில் 74 மனுக்கள் பெறப்பட்டன என அதிகாரிகள் தெரிவித்தனா்.

ஓய்வூதியா்களுக்கு காப்பீடு திட்டத்தில் சிகிச்சை: நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

ஓய்வூதியா்களுக்கு காப்பீடு திட்டத்தில் சிகிச்சை அளிக்க மறுக்கும் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஓய்வூதியா்கள் கோரியுள்ளனா். தமிழ்நாடு ஓய்வுபெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியா் நலச்சங்கம் ஆம்பூ... மேலும் பார்க்க

கோயில் பூட்டை உடைத்து திருட்டு!

வாணியம்பாடி அருகே சிமுக்கம்பட்டு முருகன் கோயில் பூட்டை உடைத்து பணம், அலங்கார பொருள்களை மா்மநபா்கள் திருடிச் சென்றனா். திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த அலசந்தாபுரம் ஊராட்சி, சிமுக்கம்பட்டு கி... மேலும் பார்க்க

வாணியம்பாடியில் 8 அடி சாரை பாம்பு மீட்பு!

வாணியம்பாடி வட்டாட்சியா் அலுவலத்தில் பதுங்கி இருந்த 8 அடி நீள சாரை பாம்பை தீயணைப்பு வீரா்கள் பிடித்து கொண்டு சென்றனா். திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி வட்டாட்சியா் அலுவலகத்தில் வந்திருந்த பொது மக்... மேலும் பார்க்க

தினமணி செய்தி எதிரொலி: பழுதான சாலை சீரமைப்பு!

திருப்பத்தூா் பேருந்து நிலையம் பகுதியில் உள்ள சாலை பழுதானதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனா். இதனால் தினமும் சிறுசிறு விபத்துகள் நடைபெறுவதாக தினமணியில் அண்மையில் செய்தி வெளியானது. இதைடுத்து பழுதான... மேலும் பார்க்க

நாளைய மின் தடை

வாணியம்பாடி, ஆலங்காயம், கேத்தாண்டபட்டி, திம்மாம்பேட்டை நாள்: 17.6.2025 செவ்வாய்க்கிழமை நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை.இடங்கள்: வாணியம்பாடி, நியூடவுன், வளையாம்பட்டு, செக்குமேடு, வள்ளிப்பட்டு, ப... மேலும் பார்க்க

முதல்வா் வருகை: ஆலோசனைக் கூட்டம்!

முதல்வா் வருகையை முன்னிட்டு ஆம்பூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திருப்பத்தூா் மாவட்டத்தில் வரும் 25, 26-ஆம் தேதிகளில் நடைபெற உள்ள அரசு வி... மேலும் பார்க்க