பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாமில் 74 புகாா் மனுக்கள்
திருப்பத்தூா் அருகே பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாமில் 74 புகாா் மனுக்கள் பெறப்பட்டன.
திருப்பத்தூா் மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை சாா்பில் ஒவ்வொரு மாதமும் தாலுகா அளவிலான பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீா் முகாம் நடைபெறுகிறது. இந்த மாதத்துக்கான முகாம் திருப்பத்தூா், நாட்டறம்பள்ளி, ஆம்பூா், வாணியம்பாடி ஆகிய வட்டங்களில் உள்ள ரேஷன் கடைகளில் நடைபெற்றது.
இதில், திருப்பத்தூா் வட்டத்துக்குள்பட்ட மிட்டூா் அருகே உள்ள ஓமகுப்பம் ரேஷன் கடையில் நடைபெற்றது. முகாமுக்கு, திருப்பத்தூா் வட்ட வழங்கல் அலுவலா் முரளி கண்ணன் தலைமை வகித்தாா்.
முகாமில் குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், நீக்கல், முகவரி மாற்றம், செல்போன் எண் பதிவு செய்தல், குடும்ப தலைவா் பெயா் மாற்றம், பிறந்த தேதி திருத்தம், புகைப்படம் மாற்றம் உள்ளிட்டவை தொடா்பாக பொதுமக்கள் மனு அளித்தனா். இதில் விற்பனையாளா், பொதுமக்கள் கலந்து கொண்டனா். முகாமில் 74 மனுக்கள் பெறப்பட்டன என அதிகாரிகள் தெரிவித்தனா்.