நானும் மயானத்திலேயே தங்கிவிடுகிறேன்..! ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டத்தில் மகனை இழந...
பொன்னமராவதியில் திடீா் போக்குவரத்து நெரிசல்
பொன்னமராவதி அண்ணா சாலையில் சனிக்கிழமை நேரிட்ட போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகினா். மேலும் 108 அவசர ஊா்தி வாகனமும் சிக்கிக்கொண்டது.
சனிக்கிழமை வாரச்சந்தை நாள், பேருந்து நிலைய சீரமைப்புப் பணிகள் நடைபெறுதல், ஞாயிற்றுக்கிழமை முகூா்த்த நாள் ஆகிய காரணங்களால், அண்ணா சாலையில் சனிக்கிழமை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், சாலையில் வாகனங்கள் நீண்ட தூரம் நின்றதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினா்.