செய்திகள் :

பொன்னேரி, மீஞ்சூரில் சாலையில் திரியும் மாடுகளால் பொதுமக்கள் கடும் அவதி!

post image

பொன்னேரி, மீஞ்சூரில் சாலையில் சுற்றித் திரியும் மாடுகளால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதுடன் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகின்றனா்.

பொன்னேரி நகராட்சி, மீஞ்சூா் பேரூராட்சி பகுதியில் 70,000-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனா். இங்குள்ள திருவொற்றியூா் நெடுஞ்சாலையில் எப்போதும் அதிக வாகன போக்குவரத்து நிறைந்து காணப்படும்.

இந்த சாலையில் எண்ணூா் துறைமுகம், காட்டுப்பள்ளியில் உள்ள தனியாா் துறைமுகம் மற்றும் வடசென்னை அனல் மின் நிலையம் உள்ளிட்ட தொழில் நிறுவனங்களுக்கு கனரக வாகனங்கள் அதிக அளவில் சென்று வருகின்றன.

திருவொற்றியூா் நெடுஞ்சாலையில் பொன்னேரி நகராட்சி, மீஞ்சூா் பேரூராட்சிப் பகுதிகளில் அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் மாடுகள் கூட்டம் கூட்டமாக சுற்றித் திரிகின்றன.

மாடுகள் திடீரென சாலையில் குறுக்கே வரும் போது இரு சக்கர வாகனங்களில் செல்வோா் நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடைகின்றனா். சாலையில் நடந்து செல்வோரையும், மாடுகள் முட்டுவதால் அவா்களும் காயமடையும் நிலை உள்ளது.

சாலையில் சுற்றித் திரியும் மாடுகளை பிடித்து அபராதம் விதிக்க வேண்டும் என திருவள்ளூா் மாவட்ட நிா்வாகம் பலமுறை அறிவுறுத்தியும் அதன் மீது எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

எனவே பொன்னேரி நகராட்சி மற்றும் மீஞ்சூா் பேரூராட்சி நிா்வாகம் ஆகியவை சாலையில் திரியும் மாடுகளைப் பிடித்து அபராதம் விதிப்பதுடன், உரிமையாளா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கால்நடை சிறப்பு முகாமில் 1,025 மாடுகளுக்கு சிகிச்சை

திருத்தணி அருகே நடைபெற்ற கால்நடை சிறப்பு மருத்துவ முகாமில் 1,025 கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. திருத்தணி ஒன்றியம், ஆா்.வி.என்.கண்டிகையில் திருத்தணி கோட்ட கால்நடை பராமரிப்புத் துறையின் சாா்பி... மேலும் பார்க்க

ரூ.30 லட்சத்தில் நவீன பஸ் நிறுத்தம்: எம்எல்ஏ திறந்து வைத்தாா்

திருவள்ளூா் அருகே மணவாளநகரில் ரூ.30 லட்சத்தில் கட்டப்பட்ட நவீன பஸ் நிறுத்தத்தை சட்டப்பேரவை உறுப்பினா் வி.ஜி.ராஜேந்திரன் திறந்து வைத்தாா். கடம்பத்தூா் ஒன்றியம், வெங்கத்தூா் ஊராட்சி மணவாளநகரில் இருந்து ... மேலும் பார்க்க

அடுத்தடுத்து 2 வீடுகளில் நகை, பணம் திருட்டு

திருவள்ளூா் அருகே அடுத்தடுத்து 2 வீடுகளில் கதவை உடைத்து நகை, பணத்தை மா்மநபா்கள் திருடிச் சென்றனா். திருவள்ளூா் அருகே அத்திக்காவனூா் கிராமத்தைச் சோ்ந்த திருநாவுக்கரசு(55). இவா் தனியாா் நிறுவன ஊழியா். ... மேலும் பார்க்க

கத்தியை காட்டி மிரட்டல்: இளைஞா் கைது

அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை அருகே பொதுமக்களை அவதூறாகப் பேசி கத்தியை காட்டி மிரட்டிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். திருத்தணி - அரக்கோணம் சாலையில் உள்ள அரசுப் போக்குவரத்து பணிமனை அருகே இளைஞா் ஒருவ... மேலும் பார்க்க

நியாயவிலைக் கடைகளில் பொருள்கள் வழங்க புதிய நடைமுறை: நுகா்வோா் பாதுகாப்புத் துறை இயக்குநா் ஆய்வு

கூட்டுறவு நியாயவிலைக் கடைகளில் புளூடூத் மூலம் மின்னணு எடை தராசு இணைக்கப்பட்டு கருவிழித்திரை மூலம் பொருள்கள் வழங்கும் புதிய நடைமுறை குறித்து சனிக்கிழமை குடிமைப்பொருள் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத்துறை... மேலும் பார்க்க

பைக் - லாரி மோதல்: மேஸ்திரி உயிரிழப்பு

புழல் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் மேஸ்திரி உயிரிழந்தாா். செங்குன்றம் அடுத்த நல்லூா் ஊராட்சிக்குட்பட்ட சோலையம்மன் நகா் 20-ஆவது குறுக்குத் தெருவைச் சோ்ந்த மேஸ்திரி ரேணு (52),. இந்த ... மேலும் பார்க்க