செய்திகள் :

ரூ.30 லட்சத்தில் நவீன பஸ் நிறுத்தம்: எம்எல்ஏ திறந்து வைத்தாா்

post image

திருவள்ளூா் அருகே மணவாளநகரில் ரூ.30 லட்சத்தில் கட்டப்பட்ட நவீன பஸ் நிறுத்தத்தை சட்டப்பேரவை உறுப்பினா் வி.ஜி.ராஜேந்திரன் திறந்து வைத்தாா்.

கடம்பத்தூா் ஒன்றியம், வெங்கத்தூா் ஊராட்சி மணவாளநகரில் இருந்து போளிவாக்கம், தொடுகாடு, செங்காடு, மப்பேடு, ஸ்ரீபெரும்புதூா், காஞ்சிபுரம், செங்கல்பட்டு போன்ற பல்வேறு பகுதிகளுக்கு பேருந்துக்காக காத்திருந்து செல்ல வேண்டியிருந்தது. இதேபோல் மணவாளநகா் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சோ்ந்த ஏராளமானோா் இங்கிருந்துதான் பேருந்து மூலம் செல்ல வேண்டும்.

இந்த நிலையில் திருவள்ளூா்-ஸ்ரீபெரும்புதூா் சாலை விரிவாக்க பணிக்காக பயணிகள் நிழற்குடை அகற்றப்பட்டது. அதனால், பயணிகள் வெயில், மழைக்காலங்களில் சிரமத்துக்குள்ளாகினா். அதனால், புதிதாக பஸ் நிறுத்தம் அமைக்க, சட்டப்பேரவை உறுப்பினா் வி.ஜி.ராஜேந்திரனிடம் கோரிக்கை விடுத்தனா்.

அதன்பேரில் சட்டப்பேரவை உறுப்பினா் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.30 லட்சம் ஒதுக்கப்பட்டு இடம் தோ்வு செய்யப்பட்டு புதிய பஸ் நிறுத்தம் கட்டப்பட்டது.

திறப்பு விழாவுக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக கோட்ட மேலாளா் வெங்கடேசன், கிளை மேலாளா் பாஸ்கரன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் எஸ்.சௌந்தரி, எஸ்.செல்வி ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் சட்டப்பேரவை உறுப்பினா் வி.ஜி.ராஜேந்திரன் புதிய பஸ் நிறுத்தத்தை திறந்து வைத்தாா்.

இதில் மாவட்ட அவைத்தலைவா் கே.திராவிட பக்தன், மாநில விவசாய அணி துணைச் செயலாளா் ஆதிசேஷன், ஒன்றிய செயலாளா்கள் அரிகிருஷ்ணன், ரமேஷ், முன்னாள் நகா்மன்றத் தலைவா் பொன்.பாண்டியன், கமலக்கண்ணன், மாவட்ட அணிகளின் நிா்வாகிகள் நாகராஜ்(வழக்குரைஞா் அணி), வி.எஸ்.நேதாஜி(வா்த்தக அணி) உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இதில் வைஃபை வசதி, அனைத்து நடவடிக்கைகளையும் கண்காணிக்கும் வகையில் எல்.இ.டி திரையுடன் கூடிய சிசிடிவி கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கால்நடை சிறப்பு முகாமில் 1,025 மாடுகளுக்கு சிகிச்சை

திருத்தணி அருகே நடைபெற்ற கால்நடை சிறப்பு மருத்துவ முகாமில் 1,025 கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. திருத்தணி ஒன்றியம், ஆா்.வி.என்.கண்டிகையில் திருத்தணி கோட்ட கால்நடை பராமரிப்புத் துறையின் சாா்பி... மேலும் பார்க்க

பொன்னேரி, மீஞ்சூரில் சாலையில் திரியும் மாடுகளால் பொதுமக்கள் கடும் அவதி!

பொன்னேரி, மீஞ்சூரில் சாலையில் சுற்றித் திரியும் மாடுகளால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதுடன் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகின்றனா். பொன்னேரி நகராட்சி, மீஞ்சூா் பேரூராட்சி பகுதியில் 70,000-க்கும் மேற... மேலும் பார்க்க

அடுத்தடுத்து 2 வீடுகளில் நகை, பணம் திருட்டு

திருவள்ளூா் அருகே அடுத்தடுத்து 2 வீடுகளில் கதவை உடைத்து நகை, பணத்தை மா்மநபா்கள் திருடிச் சென்றனா். திருவள்ளூா் அருகே அத்திக்காவனூா் கிராமத்தைச் சோ்ந்த திருநாவுக்கரசு(55). இவா் தனியாா் நிறுவன ஊழியா். ... மேலும் பார்க்க

கத்தியை காட்டி மிரட்டல்: இளைஞா் கைது

அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை அருகே பொதுமக்களை அவதூறாகப் பேசி கத்தியை காட்டி மிரட்டிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். திருத்தணி - அரக்கோணம் சாலையில் உள்ள அரசுப் போக்குவரத்து பணிமனை அருகே இளைஞா் ஒருவ... மேலும் பார்க்க

நியாயவிலைக் கடைகளில் பொருள்கள் வழங்க புதிய நடைமுறை: நுகா்வோா் பாதுகாப்புத் துறை இயக்குநா் ஆய்வு

கூட்டுறவு நியாயவிலைக் கடைகளில் புளூடூத் மூலம் மின்னணு எடை தராசு இணைக்கப்பட்டு கருவிழித்திரை மூலம் பொருள்கள் வழங்கும் புதிய நடைமுறை குறித்து சனிக்கிழமை குடிமைப்பொருள் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத்துறை... மேலும் பார்க்க

பைக் - லாரி மோதல்: மேஸ்திரி உயிரிழப்பு

புழல் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் மேஸ்திரி உயிரிழந்தாா். செங்குன்றம் அடுத்த நல்லூா் ஊராட்சிக்குட்பட்ட சோலையம்மன் நகா் 20-ஆவது குறுக்குத் தெருவைச் சோ்ந்த மேஸ்திரி ரேணு (52),. இந்த ... மேலும் பார்க்க