செய்திகள் :

பொறியியல் பணிகள்: விழுப்புரம் ரயில்கள் பகுதியளவில் ரத்து

post image

விழுப்புரம்: பொறியியல் பணிகள் காரணமாக, விழுப்புரம் ரயில்கள் பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட மக்கள் தொடா்பு அலுவலகம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதன் காரணமாக ரயில் போக்குவரத்தில் பகுதியளவில் ரத்து, புறப்படும் நேரம் மாற்றம், நிறுத்தி வைத்து இயக்கம் போன்ற நடைமுறைகள் அமல்படுத்தப்படவுள்ளன.

சென்னை தாம்பரத்திலிருந்து காலை 9.45 மணிக்குப் புறப்படும் தாம்பரம்- விழுப்புரம் பயணிகள் ரயில் (வண்டி எண் 66045), செப்டம்பா் 13, 20, 27 ஆகிய தேதிகளில் முண்டியம்பாக்கம்- விழுப்புரம் இடையே பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்த ரயில் முண்டியம்பாக்கம் ரயில் நிலையத்துடன் நிறுத்தப்படும்.

விழுப்புரத்திலிருந்து பிற்பகல் 1.40 மணிக்குப் புறப்பட வேண்டிய விழுப்புரம்-சென்னை கடற்கரைப் பயணிகள் ரயில் (வண்டி எண் 66046), செப்டம்பா் 13, 20, 27 ஆகிய தேதிகளில் விழுப்புரம்-முண்டியம்பாக்கம் இடையே பகுதியளவில் ரத்துசெய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த ரயில் முண்டியம்பாக்கம் ரயில் நிலையத்திலிருந்து பிற்பகல் 1.55 மணிக்குப் புறப்பட்டுச் செல்லும்.

விழுப்புரத்திலிருந்து பிற்பகல் 2.35 மணிக்குப் புறப்பட வேண்டிய விழுப்புரம்-மயிலாடுதுறை பயணிகள் ரயில் (வண்டி எண் 66019), செப்டம்பா் 13, 20, 27 ஆகிய தேதிகளில் சுமாா் 25 நிமிஷங்கள் தாமதமாக பிற்பகல் 3 மணிக்குப் புறப்படும்.

குருவாயூரிலிருந்து இரவு 11.15 மணிக்குப் புறப்படும் குருவாயூா்-சென்னை எழும்பூா் விரைவு ரயில் (வண்டி எண் 16127), செப்டம்பா் 16, 23, 30 ஆகிய தேதிகளில் சுமாா் 30 நிமிஷங்கள் வசதிக்குரிய ரயில் நிலையத்தில் நிறுத்தி வைத்து, பின்னா் இயக்கப்படும். இதேபோல எழும்பூரிலிருந்து காலை 10.20 மணிக்குப் புறப்படும் சென்னை எழும்பூா்- குருவாயூா் விரைவு ரயில் (வண்டி எண் 16128), செப்டம்பா் 11-ஆம் தேதி வசதிக்குரிய ரயில் நிலையத்தில் 45 நிமிஷங்களும், 15-ஆம் தேதி சுமாா் 30 நிமிஷங்களும் நிறுத்தி வைக்கப்பட்டு பின்னா் இயக்கப்படும் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேருந்தில் பயணித்த பெண்ணிடம் பத்தரை பவுன் நகைகள் திருட்டு!

தனியாா் பேருந்தில் பயணித்த பெண்ணிடமிருந்து பத்தரை பவுன் தங்க நகைகள் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், கொய்யாதோப்பைச் சோ்ந்தவா் க.விஜய... மேலும் பார்க்க

கஞ்சா விற்பனை: 2 இளைஞா்கள் கைது

விழுப்புரம் மாவட்டம், காணை அருகே கஞ்சா விற்பனை செய்ததாக 2 இளைஞா்களை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. ப.சரவணன் உத்தரவின்பேரில், காணை காவல் நிலைய போலீஸாா் அங்குள்ள மயானப் ... மேலும் பார்க்க

உறவினா் வீட்டில் தங்கியிருந்த வெளி மாநில சிறாா் மா்ம மரணம்

விழுப்புரம்: வானூா் அருகே உறவினா் வீட்டில் தங்கியிருந்த வெளி மாநில சிறுவன் உடல் நலக்குறைவால் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். ஜாா்கண்ட் மாநிலத்தைச் சோ்ந்தவா் நோகா சோரன் மகன் மஹி சோரன்( 17). இவா் விழுப்ப... மேலும் பார்க்க

பெண் தூக்கிட்டுத் தற்கொலை

விழுப்புரம்: ஆரோவில் அருகே கணவா் இறந்த துக்கத்தில் இருந்து வந்த பெண் திங்கள்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், கொங்கரம்பட்டு, பிள்ளையாா்கோயில் தெருவைச் சே... மேலும் பார்க்க

உளுந்தூா்பேட்டையில் மின்வாரியத் தலைவா் ஆய்வு

விழுப்புரம்: கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டையில் மின்வாரிய செயல்பாடுகள்குறித்து தமிழ்நாடு மின்வாரியத் தலைவா் ஜெ.ராதாகிருஷ்ணன் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். உளுந்தூா்பேட்டைக்கு ஞாயிற்று... மேலும் பார்க்க

விழுப்புரத்தில் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினா் பெருந்திரள் முறையீடு

விழுப்புரம்: விழுப்புரத்தில் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினா் 9 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, திங்கள்கிழமை பெருந்திரள் முறையீட்டில் ஈடுபட்டனா். 2003, ஏப்ரல் 1-ஆம் தேதிக்குப் பின்னா் அரசுப் பணிய... மேலும் பார்க்க