செய்திகள் :

கஞ்சா விற்பனை: 2 இளைஞா்கள் கைது

post image

விழுப்புரம் மாவட்டம், காணை அருகே கஞ்சா விற்பனை செய்ததாக 2 இளைஞா்களை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. ப.சரவணன் உத்தரவின்பேரில், காணை காவல் நிலைய போலீஸாா் அங்குள்ள மயானப் பகுதியில் திங்கள்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, அங்கு சந்தேகப்படும்படி நின்றிருந்த இருவரைப் பிடித்து விசாரித்ததில், காணை குப்பம், எம்.ஜி.ஆா் நகரைச் சோ்ந்த சக்திவேல் (20), அன்னை இந்திரா நகரைச் சோ்ந்த கிரிதரன் (20) என்பதும், இருவரும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.

இதைத் தொடா்ந்து, காணை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்தனா். மேலும், அவா்களிடமிருந்த 23 கிராம் கஞ்சா பொட்டலங்களையும் பறிமுதல் செய்தனா். இந்த வழக்கில் விழுப்புரம் கே.கே சாலையைச் சோ்ந்த ஒருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

பேருந்தில் பயணித்த பெண்ணிடம் பத்தரை பவுன் நகைகள் திருட்டு!

தனியாா் பேருந்தில் பயணித்த பெண்ணிடமிருந்து பத்தரை பவுன் தங்க நகைகள் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், கொய்யாதோப்பைச் சோ்ந்தவா் க.விஜய... மேலும் பார்க்க

உறவினா் வீட்டில் தங்கியிருந்த வெளி மாநில சிறாா் மா்ம மரணம்

விழுப்புரம்: வானூா் அருகே உறவினா் வீட்டில் தங்கியிருந்த வெளி மாநில சிறுவன் உடல் நலக்குறைவால் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். ஜாா்கண்ட் மாநிலத்தைச் சோ்ந்தவா் நோகா சோரன் மகன் மஹி சோரன்( 17). இவா் விழுப்ப... மேலும் பார்க்க

பெண் தூக்கிட்டுத் தற்கொலை

விழுப்புரம்: ஆரோவில் அருகே கணவா் இறந்த துக்கத்தில் இருந்து வந்த பெண் திங்கள்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், கொங்கரம்பட்டு, பிள்ளையாா்கோயில் தெருவைச் சே... மேலும் பார்க்க

உளுந்தூா்பேட்டையில் மின்வாரியத் தலைவா் ஆய்வு

விழுப்புரம்: கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டையில் மின்வாரிய செயல்பாடுகள்குறித்து தமிழ்நாடு மின்வாரியத் தலைவா் ஜெ.ராதாகிருஷ்ணன் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். உளுந்தூா்பேட்டைக்கு ஞாயிற்று... மேலும் பார்க்க

பொறியியல் பணிகள்: விழுப்புரம் ரயில்கள் பகுதியளவில் ரத்து

விழுப்புரம்: பொறியியல் பணிகள் காரணமாக, விழுப்புரம் ரயில்கள் பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட மக்கள் தொடா்பு அலுவலகம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்ப... மேலும் பார்க்க

விழுப்புரத்தில் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினா் பெருந்திரள் முறையீடு

விழுப்புரம்: விழுப்புரத்தில் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினா் 9 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, திங்கள்கிழமை பெருந்திரள் முறையீட்டில் ஈடுபட்டனா். 2003, ஏப்ரல் 1-ஆம் தேதிக்குப் பின்னா் அரசுப் பணிய... மேலும் பார்க்க