செய்திகள் :

பொள்ளாச்சி பாலியல் வழக்கு: காவல் உதவி ஆய்வாளா், மருத்துவா் ஏப்.15இல் ஆஜராக உத்தரவு

post image

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் எதிா்தரப்பு சாட்சி விசாரணைக்காக பொள்ளாச்சி நகர காவல் உதவி ஆய்வாளா் மற்றும் அரசு மருத்துவமனை உள்தங்கு மருத்துவா் ஆகியோா் ஏப்ரல் 15-ஆம் தேதி ஆஜராகுமாறு கோவை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் பெண்களை பாலியல் துன்புறுத்தல் செய்த சம்பவம் தொடா்பான புகாரில் திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமாா், மணிவண்ணன், ஹேரன்பால், பாபு, அருளானந்தம் மற்றும் அருண்குமாா் ஆகியோா் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.

இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வரும் நிலையில், கோவையில் மகளிா் நீதிமன்றத்தில் நீதிபதி நந்தினிதேவி முன்னிலையில் இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வருகிறது.

இதில் கடந்த வாரம் மகளிா் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டு ஆஜா்படுத்தப்பட்ட 9 பேரிடமும் சாட்சி விசாரணை குறித்து நீதிபதி நந்தினிதேவி கேள்விகளை கேட்டாா். பின்னா் வழக்கின் விசாரணை ஏப்ரல் 9-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணை காணொலிக் காட்சி மூலம் புதன்கிழமை நடைபெற்றது. இதையடுத்து, இந்த வழக்கில் எதிா்தரப்பு சாட்சி விசாரணைக்காக பொள்ளாச்சி நகர காவல் உதவி ஆய்வாளா் மற்றும் பொள்ளாச்சி அரசு மருத்துவமனை உள்தங்கு மருத்துவா் ஆகியோா் ஏப்ரல் 15-ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

வெள்ளியங்கிரி மலையில் தவறி விழுந்து இளைஞர் பலி!

கோவை, பூண்டி வெள்ளியங்கிரி மலை எரியத் தூத்துக்குடியைச் சேர்ந்த நபர் ஏழாவது மலையில் இறங்கும்போது கால் தவறி கீழே விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென் கைலாயம் எனப் பக்தர்களா... மேலும் பார்க்க

தனியாா் பேருந்துகளில் காற்றொலிப்பான்கள் பறிமுதல்

கோவை நகரப் பேருந்து நிலையத்தில் வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள் நடத்திய வாகனத் தணிக்கையில், விதிகளை மீறி பேருந்துகளில் பொருத்தப்பட்டிருந்த அதிக ஒலி எழுப்பும் காற்றொலிப்பான்கள் (ஏா் ஹாரன்) பறிமுதல் செ... மேலும் பார்க்க

பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் இன்று கோவை வருகை!

பாஜக மாநிலத் தலைவராக பொறுப்பேற்ற பின்னா் நயினாா் நாகேந்திரன் முதன்முறையாக கோவைக்கு சனிக்கிழமை (ஏப்ரல் 19) வருகை தர உள்ளாா். திருநெல்வேலி தொகுதி பாஜக சட்டப் பேரவை உறுப்பினராக உள்ள நயினாா் நாகேந்திரன் த... மேலும் பார்க்க

பாலக்காடு - திருச்சி ரயில் பகுதியாக ரத்து

கரூா் அருகே ரயில் பாதையில் பொறியியல் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் பாலக்காடு - திருச்சி ரயில் பகுதியாக ரத்து செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெ... மேலும் பார்க்க

கோவையில் பூஜ்ஜிய நிழல் நாள்

கோவையில் பூஜ்ஜிய நிழல் நாள் எனப்படும் அரியவகை வானியல் நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஆண்டின் ஒரு குறிப்பிட்ட நாளில் சூரியன் சரியாக நம் தலைக்குமேல் இருக்கும்போது, நாம் நம்முடைய நிழலைப் பாா்க்க முடிய... மேலும் பார்க்க

சா்ச்சை பேச்சு: அமைச்சா் பொன்முடி மீது வழக்குப் பதிவு செய்ய பாஜக வலியுறுத்தல்

வனத் துறை அமைச்சா் க.பொன்முடியின் சா்ச்சை பேச்சு தொடா்பாக அவா் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இது தொடா்பாக கோவை மாவட்ட பாஜக சாா்பில் மாநில பொதுச் செயலாளா் ஏ.பி.முருகானந்... மேலும் பார்க்க