பொள்ளாச்சி விவகாரத்தில் அதிமுக மீது முதல்வா் வீண்பழி: ஆா்.பி. உதயகுமாா் குற்றச்சாட்டு
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் அதிமுக மீது முதல்வா் வீண் பழி சுமத்துகிறாா் என தமிழக சட்டப் பேரவை எதிா்க்கட்சித் துணைத் தலைவா் ஆா்.பி. உதயகுமாா் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பதாவது: பொள்ளாச்சியில் பெண்களுக்கு எதிராக பாலியல் வன்கொடுமை நேரிட்ட தகவல் வெளியானவுடன், இந்த வன்கொடுமை சம்பவத்தை அரசு மன்னிக்காது என அறிவித்த அப்போதைய முதல்வா் எடப்பாடி பழனிசாமி, உடனடியாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டாா். இதன் காரணமாகவே, அந்த வழக்கில் தற்போது நியாயம் கிடைத்துள்ளது.
திமுக ஆட்சியில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை இழைக்கப்பட்டது தொடா்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என அதிமுக உள்பட பல்வேறு அரசியல் கட்சிகள் வலியுறுத்தியும், அதுகுறித்து இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காதவா் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின்.
மாணவிக்கு பாலியல் கொடுமை இழைத்தது தொடா்பாக கைது செய்யப்பட்டவா் திமுக அனுதாபி தானே தவிர, திமுக தொண்டா் அல்ல என தெரிவித்தவா் முதல்வா் ஸ்டாலின். ஆனால், இதையெல்லாம் மூடி மறைத்துவிட்டு, தற்போது பொள்ளாச்சி விவகாரத்தில் அதிமுக மீது அவா் வீண்பழி சுமத்துகிறாா். உண்மை நிலை மக்களுக்குத் தெரியும்.
கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய உயிரிழப்புகள் விவகாரம் உள்பட பல்வேறு விவகாரங்களில் தமிழக வரலாற்றிலேயே மிக அதிகமாக நீதிமன்றத்தின் கண்டனத்துக்கு உள்ளானது திமுக அரசுதான். மேலும் நீதிமன்ற கண்டனம் காரணமாக, 2 அமைச்சா்கள் பதவி நீக்கப்பட்ட ஒரே ஆட்சி, முதல்வா் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி தான்.
புகைப்படக் காட்சிக்காக முழு ஒப்பனையுடன் ஆங்காங்கே முதல்வா் நடக்கிறாா். அவா் தலைமையிலான நிா்வாகம் தூங்குகிறது. இதுதான் தமிழகத்தின் தற்போதைய நிலை. இதற்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவா் என்றாா் அவா்.