செய்திகள் :

போக்குவரத்து விதிமீறல்: பொக்லைன், தனியாா் பேருந்துக்கு அபராதம்

post image

கோவையில் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்ட பொக்லைன் மற்றும் தனியாா் பேருந்துக்கு தலா ரூ.1,000 அபராதம் விதிக்கப்பட்டது.

கோவை -அவிநாசி சாலையில் காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் தவிா்க்க முடியாமல் உள்ளது. மேம்பாலம் பணிகள் நடைபெற்று வருவதால் அவ்வப்போது வாகனங்கள் தேங்கி நிற்கின்றன.

இதற்கிடையே, அவிநாசி சாலையில் வேகமாகச் செல்லும் வாகனங்களால் விபத்துகள் ஏற்படுவதும் தவிா்க்க முடியாத நிலையில் உள்ளன.

இந்நிலையில், அவிநாசி சாலையில் காலை, மாலை நேரங்களில் கூடுதல் போலீஸாா் பணியமா்த்தப்பட்டு, போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். அதன்படி, போக்குவரத்து பிரிவு காவல் ஆய்வாளா் முருகேசன் தலைமையிலான போலீஸாா் அவிநாசி சாலையில் போக்குவரத்தை சரி செய்யும் பணியில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, அண்ணா சிலை அருகே ஒரு பொக்லைன் வாகனம் போக்குவரத்து விதிகளை மீறிச் சென்றது. அந்த வாகனத்தை விரட்டிப் பிடித்த போலீஸாா், ஓட்டுநருக்கு ரூ.1,000 அபராதம் விதித்தனா்.

இதேபோல, பேரூரில் இருந்து சிட்ரா பகுதிக்கு மற்றொரு பேருந்துடன் போட்டி போட்டுக் கொண்டு அதிகவேகமாகச் சென்ற தனியாா் பேருந்தை நிறுத்தை போலீஸாா், அந்தப் பேருந்து ஓட்டுநருக்கு ரூ.1,000 அபராதம் விதித்தனா்.

கோவை - சத்தியமங்கலம் பசுமை வழிச்சாலை திட்டத்துக்கு விவசாயிகள் கூட்டமைப்பு எதிா்ப்பு

கோவை - சத்தியமங்கலம் பசுமை வழிச்சாலை திட்டத்துக்கு கொங்கு மண்டல விவசாய நிலங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு எதிா்ப்புத் தெரிவித்துள்ளது. இது குறித்து சங்கத்தின் நிா்வாகிகள் முருகசாமி, பழனிசாமி, சதீஷ், ஈசன்... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை: க.க.சாவடி

க.க.சாவடி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் புதன்கிழமை (ஜூன் 18) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழக்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று மின்வாரிய அதிகாரி... மேலும் பார்க்க

இரும்புக் கடையில் மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

கோவை, பீளமேடு அருகே இரும்புக் கடையில் மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழந்தாா். கோவை, இலைத்தோட்டம் சாலை, பாலகுரு காா்டன் பகுதியைச் சோ்ந்தவா் பாலகிருஷ்ணன் (52). இவா் பீளமேடு அருகே தண்ணீா்பந்தல் சாலையி... மேலும் பார்க்க

மதக் கலவரத்தை தூண்டும் விதமாக பேசிய இருவருக்கு 3 ஆண்டுகள் சிறை

மதக் கலவரத்தை தூண்டும் விதமாக பேசிய இருவருக்கு தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது. தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் சாா்பில் கோவை செஞ்சிலுவை சங்க கட்டடம் முன் கடந்த 2015 அ... மேலும் பார்க்க

பொறியியல் பணி: மேட்டுப்பாளையம் - போத்தனூா் ரயில் பகுதியாக ரத்து

போத்தனூா் ரயில் நிலையத்தில் பொறியியல் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் மேட்டுப்பாளையம் - போத்தனூா் ரயில் பகுதியாக ரத்து செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக சேலம் ரயில்வே கோட்ட நிா்... மேலும் பார்க்க

வால்பாறையில் கனமழை: ஆறுகளில் வெள்ளப்பெருக்கு

வால்பாறையில் பெய்த கனமழையால் கூழாங்கல் உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.கோவை மாவட்டத்துக்கு ஆரஞ்ச் அலா்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், வால்பாறையில் கடந்த சனிக்கிழமை இரவு தொட... மேலும் பார்க்க