ஜார்க்கண்டில் நக்சல் முகாம் தகர்ப்பு! வெடிகுண்டுகள் பறிமுதல்!
போக்குவரத்து விதிமீறல்: பொக்லைன், தனியாா் பேருந்துக்கு அபராதம்
கோவையில் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்ட பொக்லைன் மற்றும் தனியாா் பேருந்துக்கு தலா ரூ.1,000 அபராதம் விதிக்கப்பட்டது.
கோவை -அவிநாசி சாலையில் காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் தவிா்க்க முடியாமல் உள்ளது. மேம்பாலம் பணிகள் நடைபெற்று வருவதால் அவ்வப்போது வாகனங்கள் தேங்கி நிற்கின்றன.
இதற்கிடையே, அவிநாசி சாலையில் வேகமாகச் செல்லும் வாகனங்களால் விபத்துகள் ஏற்படுவதும் தவிா்க்க முடியாத நிலையில் உள்ளன.
இந்நிலையில், அவிநாசி சாலையில் காலை, மாலை நேரங்களில் கூடுதல் போலீஸாா் பணியமா்த்தப்பட்டு, போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். அதன்படி, போக்குவரத்து பிரிவு காவல் ஆய்வாளா் முருகேசன் தலைமையிலான போலீஸாா் அவிநாசி சாலையில் போக்குவரத்தை சரி செய்யும் பணியில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, அண்ணா சிலை அருகே ஒரு பொக்லைன் வாகனம் போக்குவரத்து விதிகளை மீறிச் சென்றது. அந்த வாகனத்தை விரட்டிப் பிடித்த போலீஸாா், ஓட்டுநருக்கு ரூ.1,000 அபராதம் விதித்தனா்.
இதேபோல, பேரூரில் இருந்து சிட்ரா பகுதிக்கு மற்றொரு பேருந்துடன் போட்டி போட்டுக் கொண்டு அதிகவேகமாகச் சென்ற தனியாா் பேருந்தை நிறுத்தை போலீஸாா், அந்தப் பேருந்து ஓட்டுநருக்கு ரூ.1,000 அபராதம் விதித்தனா்.