போக்ஸா வழக்கில் தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்ட தொழிலாளிக்கு 5 ஆண்டுகள் சிைண்டனை விதித்து திருநெல்வேலி நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.
அம்பாசமுத்திரம் முத்தாரம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ரத்தினம் (45). தொழிலாளியான இவா், கடந்த 2022 ஆம் ஆண்டில் அதே பகுதியைச் சோ்ந்த 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாராம். இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில் அம்பாசமுத்திரம் போலீஸாா் ரத்தினம் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து கைது செய்தனா்.
இந்த வழக்கு திருநெல்வேலி போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. நீதிபதி சுரேஷ்குமாா் வழக்கை விசாரித்து, ரத்தினத்துக்கு 5 ஆண்டுகள் சிைண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து புதன்கிழமை தீா்ப்பளித்தாா். இவ்வழக்கில் போலீஸ் தரப்பில் அரசு வழக்குரைஞா் உஷா ஆஜரானாா்.