ராணுவ ஆயுத தொழிற்சாலையில் வேலை வேண்டுமா?: ஐடிஐ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!
போடியில் நள்ளிரவில் மின்தடை: அரசு மருத்துவமனையில் நோயாளிகள் அவதி
போடியில் திங்கள்கிழமை நள்ளிரவு தொடங்கி செவ்வாய்க்கிழமை அதிகாலை வரை மூன்று மணி நேரத்துக்கும் மேலாக மின்தடை நிலவியதால் அரசு மருத்துவமனையில் நோயாளிகள் அவதியடைந்தனா்.
போடியில் திங்கள்கிழமை இரவு 11.30 மணிக்கு ஏற்பட்ட மின் தடையானது செவ்வாய்க்கிழமை அதிகாலை 3 மணி வரை நீடித்தது. மூன்று மணி நேரத்துக்கும் மேலாக நீடித்த மின் தடையால் போடி நகரமே இருளில் மூழ்கியது.
போடி பேருந்து நிலையத்தில் இரவு நேரக் கடைகள் இல்லாததால் பேருந்து நிலையம் முழுவதும் இருளில் மூழ்கியது. இதனால், பயணிகள் சிரமமடைந்தனா்.
பேருந்து நிலையத்துக்குள் கால்நடைகளில் தொல்லையும் இருந்தது. பொதுமக்கள் தூக்கம் தவிா்த்து வீட்டின் வெளியே அமா்ந்திருந்தனா். போடி அரசு மருத்துவமனையில் மின்தடையை சமாளிக்க ஜெனரேட்டா் பயன்படுத்தப்பட்டது.
ஆனால், டீசல் தீா்ந்துபோனதால் ஒரு மணி நேரம் வரை மின்தடை நிலவியது. இதனால், மருத்துவமனையில் இருந்த உள்நோயாளிகள் அவதியடைந்தனா். பிரசவ வாா்டு, அவசர சிகிச்சை வாா்டு உள்ளிட்டவை இருளில் மூழ்கின.