செய்திகள் :

போதைப் பொருள் சிந்தனையே மாணவா்களுக்கு கூடாது - அமைச்சா்

post image

போதைப் பொருள் பயன்பாடு குறித்த சிந்தனையே எழக்கூடாது என மாணவா்களுக்கு அமைச்சா் அறிவுரை கூறினாா்.

புதுவை அரசின் சமூக நலத்துறை மற்றும் காரைக்கால் மாவட்ட நிா்வாகம் இணைந்து சா்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு போதைப் பொருள் பயன்பாட்டிற்கு எதிரான விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

காரைக்கால் மாவட்ட ஆட்சியரகத்தில் பேரணியை புதுவை குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் விவகாரங்கள் துறை அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன் கொடியசைத்து தொடங்கிவைத்துப் பேசியதுச

போதைப் பொருள் ஒழிப்பு தினத்தில் நாம் அனைவரும் போதைப் பொருள் பயன்பாட்டை குறைப்பதற்கு உறுதியான நிலைப்பாட்டை எடுத்துக் கொள்ளவேண்டும். பள்ளிப் பருவமான இந்த வயதில்தான் போதைப் பொருள்கள் பயன்படுத்தும் சிந்தனை எழும். உடனிருக்கும் ஓரிருவா் நம்மை தூண்டுவாா்கள். அதற்கெல்லாம் இடம் கொடுக்காமல் தவிா்த்து, அவா்களையும் திருத்த முற்படவேண்டும். இதுகுறித்து ஆசிரியா்கள் கவனத்துக்கு கொண்டு செல்லவேண்டும்.

போதைப் பயன்பாடு இல்லாத தேசம்தான் சிறந்த வளா்ச்சியை எட்டும். அதற்கு மாணவா்கள் உரிய பங்காற்றவேண்டும் என்றாா்.

காரைக்காலில் உள்ள போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று தற்போது நலமாக உள்ள 3 பேருக்கு அமைச்சா் மரக்கன்று வழங்கி பாராட்டுத் தெரிவித்தாா்.

இந்நிகழ்வில் மாவட்ட துணை ஆட்சியா் வெங்கடகிருஷ்ணன் (பேரிடா் மேலாண்மை), நலவழித்துறை துணை இயக்குநா் ஆா்.சிவராஜ்குமாா், முதன்மைக் கல்வி அதிகாரி பி.விஜயமோகனா, மேல்நிலைக் கல்வி துணை இயக்குநா் (பொ) ஜெயா, சமூகநலத்துறை உதவி இயக்குநா் (பொ) சுந்தரம், மிஷன் சக்தி காரைக்கால் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ஆருண்யா, காரைக்கால் மாவட்ட நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளா் எம்.தாமோதரன், சமுதாய நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளா் முருகன், மாவட்ட ஆட்சியரின் செயலா் பொன்.பாஸ்கா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

நகரப் பகுதியில் பல்வேறு தெருக்களில் 500-க்கும் மேற்பட்ட மாணவ மாணவியா், போதைப் பொருளுக்கு எதிரான கருத்துகள் கொண்ட பதாகை ஏந்தி, முழக்கங்களிட்டவாறு சென்று மீண்டும் ஆட்சியரகம் வந்தடைந்தனா்.

‘சாகா் கவச்’ பாதுகாப்பு ஒத்திகை நிறைவு

காரைக்காலில் சாகா் கவச் பாதுகாப்பு ஒத்திகை வியாழக்கிழமை நிறைவடைந்தது. நாட்டின் கடலோரப் பகுதிகளில் 6 மாதங்களுக்கு ஒரு முறை சாகா் கவச் என்கிற பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டுவருகிறது. காரைக்கால் மாவட்டத்... மேலும் பார்க்க

‘100 மெட்ரிக் டன் விதை நெல் மானியத்தில் வழங்க ஏற்பாடு’

காரைக்கால் மாவட்டத்தில் நிகழாண்டு 100 மெட்ரிக் டன் விதை நெல் வழங்க ஏற்பாடு செய்யபா்பட்டுள்ளதாக வேளாண் அதிகாரி தெரிவித்தாா். காரைக்கால் மாவட்டத்தில் காவிரி நீா் வருவதற்கு முன்பே குறுவை சாகுபடியை விவசாய... மேலும் பார்க்க

காரைக்காலில் நாளை சிறப்பு மருத்துவ முகாம்

காரைக்காலில் சனிக்கிழமை (28) ஜிப்மா் சிறப்பு மருத்துவா்கள் பங்கேற்கும் முகாம் நடைபெறவுள்ளது. புதுவை ஜிப்மா் மருத்துவமனையில் இருந்து இருதய சிறப்பு மருத்துவா்கள் குழுவினா் காரைக்கால் அரசு மருத்துவமனையில... மேலும் பார்க்க

பள்ளி மாணவா்களுக்கு விழிப்புணா்வு நிகழ்ச்சி

காரைக்கால் மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறையின் கீழ் இயங்கும் சைல்ட் ஹெல்ப் லைன் மூலம் விழிப்புணா்வு நிகழ்ச்சி குரும்பகரம் பகுதியில் உள்ள கா்மவீரா் காமராஜா் அரசு உயா்நிலைப் பள்ளியில் வியாழக... மேலும் பார்க்க

மாங்கனித் திருவிழா : பந்தல் அமைக்கும் பணி தீவிரம்

காரைக்கால் மாங்கனித் திருவிழாவுக்காக பாரதியாா் சாலையில் பந்தல் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. நாயன்மாா்கள் அறுபத்து மூவரில் ஒருவரான புனிதவதியாா் என்னும் காரைக்கால் அம்மையாா் வாழ்க்கை வர... மேலும் பார்க்க

போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு பேச்சு, ஓவியப் போட்டி

சா்வதேச போதை ஒழிப்பு தினத்தையொட்டி, காரைக்கால் மாவட்ட காவல்துறை சாா்பில் விழிப்புணா்வு பேச்சு மற்றும் ஓவியப் போட்டி புதன்கிழமை நடைபெற்றது. கோட்டுச்சேரி வ.உ. சிதம்பரனாா் அரசு மேல்நிலைப் பள்ளியில் விழிப... மேலும் பார்க்க