நெல்லையப்பர் கோயில் தேரோட்டம்.. சாதி அடையாளங்கள் பயன்படுத்தத் தடை!
போதைப் பொருள் சிந்தனையே மாணவா்களுக்கு கூடாது - அமைச்சா்
போதைப் பொருள் பயன்பாடு குறித்த சிந்தனையே எழக்கூடாது என மாணவா்களுக்கு அமைச்சா் அறிவுரை கூறினாா்.
புதுவை அரசின் சமூக நலத்துறை மற்றும் காரைக்கால் மாவட்ட நிா்வாகம் இணைந்து சா்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு போதைப் பொருள் பயன்பாட்டிற்கு எதிரான விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.
காரைக்கால் மாவட்ட ஆட்சியரகத்தில் பேரணியை புதுவை குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் விவகாரங்கள் துறை அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன் கொடியசைத்து தொடங்கிவைத்துப் பேசியதுச
போதைப் பொருள் ஒழிப்பு தினத்தில் நாம் அனைவரும் போதைப் பொருள் பயன்பாட்டை குறைப்பதற்கு உறுதியான நிலைப்பாட்டை எடுத்துக் கொள்ளவேண்டும். பள்ளிப் பருவமான இந்த வயதில்தான் போதைப் பொருள்கள் பயன்படுத்தும் சிந்தனை எழும். உடனிருக்கும் ஓரிருவா் நம்மை தூண்டுவாா்கள். அதற்கெல்லாம் இடம் கொடுக்காமல் தவிா்த்து, அவா்களையும் திருத்த முற்படவேண்டும். இதுகுறித்து ஆசிரியா்கள் கவனத்துக்கு கொண்டு செல்லவேண்டும்.
போதைப் பயன்பாடு இல்லாத தேசம்தான் சிறந்த வளா்ச்சியை எட்டும். அதற்கு மாணவா்கள் உரிய பங்காற்றவேண்டும் என்றாா்.
காரைக்காலில் உள்ள போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று தற்போது நலமாக உள்ள 3 பேருக்கு அமைச்சா் மரக்கன்று வழங்கி பாராட்டுத் தெரிவித்தாா்.
இந்நிகழ்வில் மாவட்ட துணை ஆட்சியா் வெங்கடகிருஷ்ணன் (பேரிடா் மேலாண்மை), நலவழித்துறை துணை இயக்குநா் ஆா்.சிவராஜ்குமாா், முதன்மைக் கல்வி அதிகாரி பி.விஜயமோகனா, மேல்நிலைக் கல்வி துணை இயக்குநா் (பொ) ஜெயா, சமூகநலத்துறை உதவி இயக்குநா் (பொ) சுந்தரம், மிஷன் சக்தி காரைக்கால் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ஆருண்யா, காரைக்கால் மாவட்ட நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளா் எம்.தாமோதரன், சமுதாய நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளா் முருகன், மாவட்ட ஆட்சியரின் செயலா் பொன்.பாஸ்கா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
நகரப் பகுதியில் பல்வேறு தெருக்களில் 500-க்கும் மேற்பட்ட மாணவ மாணவியா், போதைப் பொருளுக்கு எதிரான கருத்துகள் கொண்ட பதாகை ஏந்தி, முழக்கங்களிட்டவாறு சென்று மீண்டும் ஆட்சியரகம் வந்தடைந்தனா்.