செய்திகள் :

போலந்தில் யூஎஃப்ஓ விபத்து? வானில் பறந்து வந்து கீழே விழுந்து வெடித்த மர்ம பொருள்!

post image

போலந்து நாட்டின் கிழக்கு மாகாணத்தில், வானில் பறந்து வந்த மர்ம பொருள் திடீரென கிழே விழுந்து வெடித்ததால், அங்கு பரபரப்பான சூழல் நிலவியுள்ளது.

போலந்தின், ஒசினி கிராமத்தில் இன்று (ஆக.20) அதிகாலை 2 மணியளவில் வானில் பறந்து வந்த மர்ம பொருள் ஒன்று, திடீரென தரையில் விழுந்து வெடித்துச் சிதறியுள்ளது. இதனால், அப்பகுதியில் அமைந்திருந்த சில வீடுகளின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்ததாகக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு விரைந்த அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் தீயில் கருகிய சில மெட்டல் மற்றும் பிளாஸ்டிக் பொருள்கள் அங்கிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இதுகுறித்த விடியோ பதிவுகள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், விபத்துக்குள்ளானது யூஎஃப்ஓ என்று இணையவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஆனால், அப்பகுதியில் விழுந்து வெடித்துச் சிதறிய மர்ம பொருளானது ட்ரோனாக இருக்கக் கூடும் என அந்நாட்டு அதிகாரிகள் கூறியுள்ளனர்.

மேலும், அருகிலுள்ள உக்ரைன் மற்றும் பெலாரஸ் நாடுகளின் ட்ரோன்கள் போலந்தின் வான்வழியில் அத்துமீறி நுழையவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இருப்பினும், இந்தச் சம்பவத்தில் வெடித்துச் சிதறியது ராணுவ ட்ரோனா? அல்லது கடத்தல்காரர்கள் பயன்படுத்திய ட்ரோனா? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாக போலந்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிக்க: மேற்கு கரையை இரண்டாகப் பிரிக்கக் கூடிய திட்டம்! இஸ்ரேல் அரசு ஒப்புதல்!

A mysterious object flying in the sky suddenly fell to the ground in the eastern province of Poland, causing a tense situation there.

மியான்மரில் நிலநடுக்கம்! ரிக்டர் அளவில் 4.2 ஆகப் பதிவு!

மியான்மர் நாட்டில் 4.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மியான்மரில், இன்று (ஆக.20) மாலை 6.16 மணியளவில், நிலப்பரப்பில் இருந்து சுமார் 10 கி.மீ. ஆழத்தில் 4.2 ரிக்டர் அ... மேலும் பார்க்க

எத்தனை பேரை கொல்ல முடியும் என்பது வலிமை இல்லை: இஸ்ரேல் பிரதமருக்கு ஆஸி. பதிலடி!

ஆஸ்திரேலியா நாட்டின் பிரதமர் ஆண்டனி அல்பானீஸ் பலவீனமானவர் என்ற இஸ்ரேல் பிரதமரின் கருத்துக்கு, அந்நாட்டு உள்துறை அமைச்சர் பதிலடி கொடுத்துள்ளார். காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் உடனடியாக முடிவுக்குக் ... மேலும் பார்க்க

மேற்கு கரையை இரண்டாகப் பிரிக்கக் கூடிய திட்டம்! இஸ்ரேல் அரசு ஒப்புதல்!

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு கரை பகுதியில் கட்டுமானங்கள் மேற்கொண்டு, அப்பகுதியை இரண்டாகப் பிரிக்கக் கூடிய சர்ச்சைக்குரிய திட்டத்துக்கு, இஸ்ரேல் அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. ஜெருசலேம் நகரத்துக்கு கிழக்குப்... மேலும் பார்க்க

ஆப்கன் பேருந்து விபத்து: பலி எண்ணிக்கை 78 ஆக அதிகரிப்பு!

ஆப்கானிஸ்தான் நாட்டில், புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற பேருந்து தீப்பிடித்த விபத்தில், பலியானவர்களின் எண்ணிக்கை 78 ஆக அதிகரித்துள்ளது. ஹெராத் மாகாணத்தின், குஸாரா மாவட்டத்தில் ஈரானில் இருந்து தாயகம் தி... மேலும் பார்க்க

பாலியல் தொழிலுக்காகக் கடத்தல்! அமெரிக்காவில் 5 இந்தியர்கள் கைது!

பாலியல் தொழிலுக்காக சிறுமிகளை கடத்திய வழக்கில் 5 இந்தியர்களை அமெரிக்க காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.அமெரிக்காவின் நெப்ராஸ்கா மாகாணத்தில் மனித கடத்தலில் ஈடுபடும் கும்பலைக் குறிவைத்து கடந்த வாரம் மிக... மேலும் பார்க்க

ஆப்கனில் பேருந்து தீப்பிடித்தது: 71 பேர் உடல் கருகி பலி!

ஆப்கானிஸ்தானில் புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற பேருந்து தீப்பிடித்து விபத்துக்குள்ளானதில் 71 பேர் உடல் கருகி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாகாண அரசு செய்தித் தொடர்பாளர் அஹ்மதுல்லா முத... மேலும் பார்க்க