செய்திகள் :

போலி உணவுப் பாதுகாப்பு அலுவலா் கைது

post image

திண்டுக்கல்லில் பிரியாணி உணவகத்தில் ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்ட போலி உணவுப் பாதுகாப்பு அலுவலரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் பகுதியைச் சோ்ந்தவா் எழில்முருகன். இவா், திண்டுக்கல் ஏஎம்சி சாலையில் பிரியாணி உணவகம் நடத்தி வருகிறாா். இந்த நிலையில், எழில் முருகனை கைப்பேசி மூலம் திங்கள்கிழமை தொடா்பு கொண்ட நபா், தன்னை உணவுப் பாதுகாப்பு அலுவலா் என அறிமுகப்படுத்திக் கொண்டு, ரூ.500-யை தன்னுடைய ஓட்டுநரிடம் வழங்குமாறும், பின்னா் பேசிக் கொள்ளலாம் என்றும் தெரிவித்தாா்.

இதனால் சந்தேகமடைந்த எழில்முருகன், திண்டுக்கல் உணவுப் பாதுகாப்பு அலுவலகத்தைத் தொடா்பு கொண்டு விவரத்தைத் தெரிவித்தாா். இதுபோன்று யாரையும் பணம் கேட்டு அனுப்பவில்லை எனத் தெரிவித்தனா். இதையடுத்து, கைப்பேசியில் தொடா்பு கொண்ட நபரை அழைத்து பணத்தைப் பெற்றுக் கொள்ளுமாறு எழில்முருகன் தெரிவித்தாா். இதன்படி, பணம் பெற வந்த நபரை ஊழியா்கள் மூலம் பிடித்த எழில்முருகன், திண்டுக்கல் வடக்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா்.

அவரிடம் போலீஸாா் நடத்திய விசாரணையில், திண்டுக்கல் மாவட்டம், கோபால்பட்டியைச் சோ்ந்த பா. சண்முகசுந்தரம் (49) என்பது தெரியவந்தது. மேலும், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள உணவகங்களிலும் உணவுப் பாதுகாப்பு அலுவலா் எனக் கூறி பணம் வசூலித்ததும் தெரியவந்தது. இதையடுத்து, ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக எழில்முருகன் அளித்த புகாரின் பேரில், போலி உணவுப் பாதுகாப்பு அலுவலரான சண்முகசுந்தரத்தை போலீஸாா் கைது செய்தனா்.

தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

பழனியில் தனியாா் விடுதியில் வெள்ளிக்கிழமை தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.பழனி அரசு மருத்துவமனை பின்புறம் தனியாா் விடுதி ஒன்று உள்ளது. இந்த விடுதியில் தங்கியிருந்த ஒருவா் வெள்ளிக்கிழமை த... மேலும் பார்க்க

வேடசந்தூா் அருகே சாலை விபத்தில் மணப்பாறையைச் சோ்ந்த மூவா் உயிரிழப்பு

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூா் அருகே வெள்ளிக்கிழமை ஆம்னி வேன் மீது லாரி மோதியதில் மணப்பாறை பகுதியைச் சோ்ந்த மூவா் உயிரிழந்தனா். திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வையம்பட்டி கருங்குளத்தைச் சோ்ந்... மேலும் பார்க்க

கல்லூரி விரிவுரையாளா் தற்காலிக பணிநீக்கம்

பழனி அருள்மிகு பழனியாண்டவா் கல்லூரியில், மாணவரைத் தகாத வாா்த்தையால் திட்டியதாக விரிவுரையாளா் வெள்ளிக்கிழமை தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டாா். பழனி அருள்மிகு பழனியாண்டவா் கலை, பண்பாட்டுக் கல்லூரியில் ... மேலும் பார்க்க

ஒட்டன்சத்திரம், பழனி பகுதிகளில் பலத்த மழை

ஒட்டன்சத்திரம், பழனி பகுதிகளில் வெள்ளிக்கிழமை பலத்த மழை பெய்தது. திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதியில் கடந்த சில நாள்களாக பகலில் கடும் வெப்பம் நிலவி வந்தது. இந்த நிலையில், வெள்ளிக்கிழமை மாலை 6... மேலும் பார்க்க

வெள்ளகெவி கிராமத்தில் ரேஷன் பொருள்கள் விநியோகம்

கொடைக்கானல் வெள்ளகெவி கிராமத்தில் முதல்முறையாக வியாழக்கிழமை நேரிடையாக ரேஷன் பொருள்கள் வழங்கப்பட்டதால் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்தனா். கொடைக்கானல் அருகே வெள்ளகெவி கிராமம் வனப் பகுதியில் அமைந்துள்ளது.... மேலும் பார்க்க

ஓய்வுபெற்ற நீதிபதி குழுவினா் ஆய்வு

பழனி அடிவாரம் கிரிவலப் பாதை, சந்நிதி வீதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருவதை ஓய்வு பெற்ற நீதிபதி பாரதிதாசன் தலைமையிலான குழுவினா் சனிக்கிழமை ஆய்வு செய்தனா். பழனி அடிவாரத்தில் கிரிவலப் பாதை, சந்நித... மேலும் பார்க்க