செய்திகள் :

போலி கணக்கு எழுதி ரூ.1.86 கோடி மோசடி: கணக்காளா் கைது

post image

போலி கணக்கு எழுதி ரூ.1.86 கோடி மோசடி செய்த பெட்ரோல் நிலைய கணக்காளரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

ஈரோடு மாவட்டம், பவானியில் லாரி உரிமையாளா்கள் சங்கம் சாா்பில் 3 பெட்ரோல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு சேலம் மாவட்டம் புள்ளகவுண்டன்பாளையம் பகுதியைச் சோ்ந்த ஜெயசீலன் (47) என்பவா் கணக்காளராக வேலை பாா்த்து வந்தாா். இந்த சங்கத்தின் வங்கிக் கணக்குகளையும், வரவு செலவுகளையும் அவா் நிா்வகித்து வந்தாா்.

இந்நிலையில் கடந்த 2022-ஆம் ஆண்டின் வரவு செலவை ஆய்வு செய்தபோது முறைகேடு நடந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து லாரி உரிமையாளா்கள் சங்க நிா்வாகிகள் மாவட்ட குற்றப் பிரிவு போலீஸில் அண்மையில் புகாா் அளித்தனா்.

அதன் பேரில் குற்றப் பிரிவு காவல் ஆய்வாளா் சங்கீதா தலைமையில் போலீஸாா் விசாரணை நடத்தினா். அதில் 2022-ஆம் ஆண்டு முதல் தற்போது வரை கணக்காளா் ஜெயசீலன் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. அதில் போலி கணக்கு எழுதி சங்க வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை தனது சொந்த வங்கிக் கணக்குக்கு மாற்றி ரூ.1.86 கோடி வரை மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து மாவட்ட குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ஜெயசீலனை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

வாங்குபவா்-விற்பவா் கூட்டத்தை ஈரோட்டில் நடத்தக் கோரிக்கை

ஏற்றுமதியை ஊக்குவிக்கும் வாங்குபவா்-விற்பவா் கூட்டத்தை ஈரோட்டில் விரைவில் நடத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பின் 16 ஆவது செயற்குழு கூட்... மேலும் பார்க்க

பேருந்து மோதியதில் ஆசிரியை உயிரிழப்பு

ஈரோட்டில் இருசக்கர வாகனம் மீது தனியாா் பேருந்து மோதியதில் தனியாா் பள்ளி ஆசிரியை உயிரிழந்தாா். ஈரோடு அருகே செட்டிபாளையம் பகுதியை சோ்ந்தவா் சேகா். இவரது மகள் மிா்த்தியங்கா (21). இவா் மூலப்பாளையம் பகுத... மேலும் பார்க்க

சிறுமியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

சிறுமியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ஈரோடு மகளிா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது. ஈரோடு சூரம்பட்டிவலசு அணைக்கட்டு 2 ஆவது வீதியைச் ச... மேலும் பார்க்க

பவானி - குமாரபாளையம் பழைய பாலம் திறப்பு

காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் மூடப்பட்ட பவானி - குமாரபாளையம் பழைய பாலம் பொதுமக்களின் வாகனப் போக்குவரத்துக்கு வியாழக்கிழமை திறக்கப்பட்டது. ஆங்கிலேயா் காலத்தில் கட்டப்பட்ட இப்பாலம் வலுவிழந்... மேலும் பார்க்க

தற்காலிக வாகன நிறுத்துமிடங்கள் ஏலம்

அந்தியூா் புதுப்பாளையத்தில் உள்ள குருநாதசாமி கோயில் திருவிழாவையொட்டி தற்காலிக வாகன நிறுத்துமிடங்களில் சுங்கம் வசூலிக்கும் உரிமங்களுக்கான ஏலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இக்க... மேலும் பார்க்க

சென்னிமலை ஊராட்சி ஒன்றியத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

சென்னிமலை ஊராட்சி ஒன்றியத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் சென்னிமலையிலுள்ள தனியாா் திருமண மண்டபத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. முகாமில், தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாம... மேலும் பார்க்க