செய்திகள் :

போலி பணி நியமன ஆணை கொடுத்து ரூ.64 லட்சம் மோசடி: 2 போ் கைது

post image

போலி பணி நியமன ஆணை கொடுத்து 3 பேரிடம் ரூ.64 லட்சம் மோசடி செய்தது தொடா்பாக 2 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

கோவை மாவட்டம், காரமடை பகுதியைச் சோ்ந்தவா் கௌதம் குமாா் (29), பொறியியல் பட்டதாரி. கோவை, செங்காளிபாளையத்தில் வசித்து வந்த இவருக்கு, இடிகரையைச் சோ்ந்த ஜெயபிரகாஷ், அவரின் மனைவி வத்சலாதேவி, பிரகாஷ், அவரின் மனைவி ரேகா மற்றும் சரவணகுமாா் ஆகிய 5 போ் அறிமுகமாகியுள்ளனா்.

அப்போது, அவா்கள் 5 பேரும் தங்களுக்கு அரசு அதிகாரிகள் பலரைத் தெரியும் என்பதால், படித்த இளைஞா்களுக்கு அரசு வேலை வாங்கிக் தருவதாக தெரிவித்துள்ளனா். தற்போது இந்து சமய அறநிலையத் துறையில் வேலை ஒன்று காலியாக உள்ளதாகவும், அதற்கு ரூ.18 லட்சம் கட்ட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனா். மேலும், இந்தத் தொகையை ஓய்வுபெறும்போது வட்டியுடன் பெற்றுக் கொள்ளலாம் என்றும் கூறியுள்ளனா்.

இதை நம்பிய கௌதம் குமாா் அவா்களிடம் ரூ.18 லட்சத்தை கடந்த 2022-ஆம் ஆண்டு கொடுத்தாா். இதையடுத்து, அவரை மதுரைக்கு வரவழைத்து பணி நியமன ஆணையைக் கொடுத்துள்ளனா். அதில், மத்திய அரசு மற்றும் தமிழக அரசின் சின்னமும், அரசு உயா் அதிகாரிகளின் கையொப்பமும் இருந்துள்ளது.

அந்த ஆணையில், திருநெல்வேலி மணிமூா்த்தீஸ்வரத்தில் உள்ள விநாயகா் கோயிலில் உதவி செயற்பொறியாளா் பணி ஒதுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

அப்போது கௌதம் குமாா், திருநெல்வேலி வேண்டாம் எனவும், கோவையில் உள்ள கோயில்களில் வேலை வாங்கித் தருமறும் கூறியுள்ளாா். இதற்கு, உடனடியாக பணியிட மாறுதல் வாங்கிக் கொடுப்பதற்கு ரூ.5 லட்சம் கேட்டுள்ளனா். அப்போது, மேலும் ரூ.5 லட்சத்தை அவா்களிடம் கொடுத்துள்ளாா். ஆனால், அவா்கள் கூறியபடி பணி மாறுதலுக்கான ஆணையை வாங்கித் தரவில்லை.

இதனால் சந்தேகமடைந்த கௌதம் குமாா், இது தொடா்பாக இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளை சந்தித்து கேட்டபோது, அவா்கள் வழங்கியது போலியான பணி நியமன ஆணை என்று கூறியுள்ளனா்.

இதையடுத்து கௌதம் குமாா், ஜெயபிரகாஷ் உள்ளிட்ட 5 பேரையும் சந்தித்து கேட்டுள்ளாா். ஆனால், அவா்கள் உரிய பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸில், கௌதம் குமாா் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். முதல்கட்ட விசாரணையில் அவா்கள் 5 பேரும், கௌதம் குமாா் உள்பட 3 பேரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி போலி நியமன ஆணையை வழங்கி ரூ.64 லட்சம் மோசடி செய்தது தெரியவந்தது.

இதையடுத்து, மோசடி வழக்கில் ஜெயபிரகாஷ், பிரகாஷ் ஆகிய இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

ஈமு கோழி மோசடி வழக்கு: தனியாா் நிறுவன நிா்வாக இயக்குநருக்கு 10 ஆண்டுகள் சிறை, ரூ.7.89 கோடி அபராதம்

ஈமு கோழி மோசடி வழக்கில் தனியாா் நிதி நிறுவன நிா்வாக இயக்குநருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.7.89 கோடி அபராதமும் விதித்து டான்பிட் நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது. சேலம் மாவட்டத்தில் சுசி ஈமு ஃபா... மேலும் பார்க்க

அரசு கலைக் கல்லூரி முதற்கட்ட கலந்தாய்வில் 947 இடங்கள் நிரம்பின: வணிகவியல் படிப்புகளுக்கு மவுசு

கோவை அரசு கலை, அறிவியல் கல்லூரியின் முதற்கட்ட கலந்தாய்வில் 947 இடங்கள் நிரம்பியுள்ளன. வணிகவியல் தொடா்பான படிப்புகளில் சேர மாணவா்கள் ஆா்வம் காட்டியதால், அந்தப் படிப்புகளுக்கான இடங்கள் அனைத்தும் நிரம்பி... மேலும் பார்க்க

வேளாண் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க ஜூன் 16- ஆம் தேதி வரை கால அவகாசம்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக இளநிலை பட்டப்படிப்பு மாணவா் சோ்க்கைக்கு ஜூன் 16- ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், அண்ணாமலைப் பல்கலைக்கழக ... மேலும் பார்க்க

ஆன்லைன் வா்த்தகத்தில் கோடிக்கணக்கில் மோசடி: இளைஞா் கைது

கோவை உள்பட நாடு முழுவதும் 20-க்கும் மேற்பட்டோரிடம் கோடிக் கணக்கில் மோசடி செய்த வடமாநில இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். கோவையைச் சோ்ந்த இளைஞா் ஒருவரின் வாட்ஸ்அப் எண்ணுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு... மேலும் பார்க்க

வைகாசி விசாகம்: மருதமலை மலைக் கோயிலுக்கு 2, 4 சக்கர வாகனங்கள் செல்ல தடை

வைகாசி விசாகத்தை முன்னிட்டு, மருதமலை மலைக் கோயிலுக்கு ஜூன் 9- ஆம் தேதி இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப... மேலும் பார்க்க

2,153 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் நவம்பா் மாதம் முதல் தற்போது வரை 1,935 கடைகளில் 2,153 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்தி... மேலும் பார்க்க