செய்திகள் :

போலி பாலியல் வழக்குகள்: வழக்கறிஞருக்கு ஆயுள் தண்டனை விதித்த நீதிமன்றம்!

post image

எஸ்சி, எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் பொய்யான பாலியல் வழக்குகளை பதிவு செய்த வழக்கறிஞர் ஒருவருக்கு லக்னெள சிறப்பு நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னெளவைச் சேர்ந்த வழக்கறிஞர் பரமானந்த குப்தா. இவர் சொத்து பிரச்னையில் தன் வீட்டின் அருகில் உள்ள அரவிந்த் யாதவ், அவதேஷ் யாதவ் ஆகியோர் மீது ஏராளமான வழக்குகளைத் தொடர்ந்திருந்தார்.

இந்நிலையில் அரவிந்த் வீட்டில் வாடகைக்கு இருந்த பூஜா என்பவரின் மூலமாக அரவிந்த், அவதேஷ் இருவரின் மீதும் வழக்குத் தொடர்ந்துள்ளார். பூஜா இதுபோல, 11 பொய்யான பாலியல் வழக்குகளைத் தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கில் காவல்துறையின் அறிக்கைகளை ஆய்வு செய்த நீதிமன்றம் வழக்கை சிபிஐ-யிடம் ஒப்படைத்தது. பின்னரே வழக்கறிஞர் பரமானந்த குப்தாவின் கட்டாயத்தின்பேரில், பூஜா பொய்யான பாலியல் புகார்களை அளித்தது தெரிய வந்தது.

இதையடுத்து இந்த வழக்கில் வழக்கறிஞர் பரமானந்த குப்தாவுக்கு ஆயுள் தண்டனை வழங்கி லக்னெள எஸ்சி, எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச் சட்ட சிறப்பு நீதிபதி விவேகானந்த் சரண் திரிபாதி தீர்ப்பளித்துள்ளார்.

பிரிவு 217 மற்றும் 248-ன் கீழ் முறையே அவருக்கு ஒரு ஆண்டு மற்றும் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் ரூ. 5.1 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. அனைத்து தண்டனைகளும் தனித்தனியாக அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

குப்தா போன்ற வழக்கறிஞர்கள் சட்டத்துறையில் நுழைவதையும் சட்டம் பயில்வதையும் தடுக்காவிட்டால் நீதித்துறையின் மீதான மக்களின் நம்பிக்கை கடுமையாக பாதிக்கப்படும் என்று கூறிய நீதிபதி குப்தா வழக்கறிஞர் தொழில் செய்யக்கூடாது என்றும் உத்தரவிட்டார்.

வழக்கறிஞர் ஒருவர் தனிப்பட்ட காரணத்திற்காக போலி வழக்குகளைத் தொடர்ந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

A special court in Lucknow has sentenced a lawyer to life imprisonment for filing false sexual assault cases under the SC/ST (Prevention of Atrocities) Act.

இதையும் படிக்க |ஆக. 26 முதல் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் காலை உணவுத் திட்டம்!

இந்திய டி20 அணியில் இடம்பெறாதது குறித்து ஷ்ரேயாஸ் தந்தை வேதனை

இந்திய டி20 அணியில் இடம்பெறாதது குறித்து ஸ்ரேயாஸ் ஐயரின் தந்தை வேதனை தெரிவித்துள்ளார்.ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. அதில் ஜெய்ஸ்வால், ஷ்ரேயாஸ் ஐயர் உள்ளிட்ட முக்கிய வ... மேலும் பார்க்க

கணவரால் கைவிடப்பட்ட முஸ்லிம் பெண்களின் நிலையை மேம்படுத்த அரசு நடவடிக்கை: நிதிஷ்குமார்

கணவரால் கைவிடப்பட்ட முஸ்லிம் பெண்களின் நிலையை மேம்படுத்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக பிகார் முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்தார். பிகார் மாநில மதரஸா கல்வி வாரியத்தின் நூற்றாண்டு வி... மேலும் பார்க்க

தெரு நாய்கள் விவகாரம்: அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

தெரு நாய்களை அகற்றி காப்பகங்களில் பராமரிக்க வேண்டும் என்று தில்லி மாநகராட்சி பிறப்பித்த உத்தரவை எதிர்த்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.அவசர வழக்காக விசாரிக்கக் கோரும் மன... மேலும் பார்க்க

காஷ்மீரில் மிதமான நிலநடுக்கம்!

காஷ்மீரில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக புவியியல் ஆய்வுமையம் கூறியதாவது, காஷ்மீரில் 3.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், இதுவரை எந்... மேலும் பார்க்க

நாட்டை நிறுவியர்கள் எதிர்பார்த்த இந்தியாவை உறுதிப்படுத்தவே: சுதர்சன் ரெட்டி!

புது தில்லி: குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் என்பது வெறும் தனிநபர்களைப் பற்றியது அல்ல. நம் நாட்டை நிறுவியவர்களால் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா என்ற கருத்தை உறுதிப்படுத்துவதற்காக என்று இந்தியா கூட்டணியி... மேலும் பார்க்க

இந்தியா கூட்டணி வேட்பாளர் பி. சுதர்சன் ரெட்டி வேட்புமனு தாக்கல்!

குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான இந்தியா கூட்டணி வேட்பாளர் பி. சுதர்சன் ரெட்டி இன்று(வியாழக்கிழமை) வேட்புமனு தாக்கல் செய்தார். நாட்டில் இரண்டாவது உயரிய அரசமைப்புப் பதவியான குடியரசு துணைத் தலைவா் பத... மேலும் பார்க்க