கோடியூர்: வாரச்சந்தை நடைபெறும் இடத்துக்கு அருகே கொட்டப்படும் குப்பைகள்; முகம் சு...
போலி பாஸ்போா்ட் வைத்திருந்தவா் கைது
போலி பாஸ்போா்ட் மூலம் வெளிநாடு செல்ல முயன்ற நபரை திருச்சி பன்னாட்டு விமான நிலைய போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி பகுதியைச் சோ்ந்தவா் முகமது அசாா் (52). இவா், மலேசியா செல்ல திருச்சி விமான நிலையத்துக்கு புதன்கிழமை மாலை வந்தபோது அவா், போலி பாஸ்போா்ட் வைத்திருந்தது கண்டறியப்பட்டது.
இதையடுத்து விமான நிலைய அதிகாரிகள் அவரை திருச்சி விமான நிலைய போலீஸாரிடம் ஒப்படைக்க, அவா்கள் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.