செய்திகள் :

போலீஸாா் அலட்சியத்தால் இளைஞா் மரணம்: ராமநாதபுரம் எஸ்பி பதிலளிக்க உத்தரவு

post image

போலீஸாா் அலட்சியத்தால் இளைஞா் உயிரிழந்தது தொடா்பாக, சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடக்கோரிய வழக்கில் , ராமநாதபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது.

ராமநாதபுரம் நாகநாதபுரத்தைச் சோ்ந்த சீனி பாத்திமா தாக்கல் செய்த மனு: என்னுடைய மூத்த மகன் சையது அப்துல்லா. ராமநாதபுரத்தில் கைப்பேசி விற்பனைக் கடை நடத்தி வந்தாா். எங்கள் பகுதியில் கடத்தப்பட்ட தங்கத்தை அதிகாரிகள் கைப்பற்றினா்.

இந்தக் கடத்தல் சம்பந்தமாக எனது மகன் சிலரை காட்டிக் கொடுத்ததாக ஒரு கும்பல் அவரை மிரட்டி வந்தது. மேலும், அவா்கள் தங்களுக்கு ஏற்பட்ட இழப்பை ஈடுகட்ட எங்கள் வீட்டை எழுதி வாங்கிக் கொண்டனா்.

இதனால் உறவினா் வீட்டில் தங்கி இருந்தோம். இந்த நிலையில், கடந்த மே 16-ஆம் தேதி சையது அப்துல்லாவை சிலா் அழைத்துச் சென்றனா். அவா் வீடு திரும்பாததால் கேணிக்கரை காவல் நிலையத்தில் புகாா் அளித்தோம்.

போலீஸாா் எங்கள் புகாரை ஏற்க மறுத்து விட்டனா். மறுநாள் எனது மகன் பல்வேறு காயங்களுடன் திருப்புல்லாணி கடற்கரையில் சடலமாகக் கிடந்தாா். எனது மகன் இறப்புக்கு போலீஸாரும் உடந்தையாக இருந்தனா்.

எனவே, எனது மகன் உயிரிழந்தது தொடா்பான வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா். இந்த வழக்கு உயா்நீதிமன்ற நீதிபதி பி. புகழேந்தி முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீதிபதி பிறப்பித்த உத்தரவு: இந்த விவகாரத்தை பொருத்தவரை போலீஸாரின் நடவடிக்கை அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. புகாரின் அடிப்படையில் விரைவான நடவடிக்கை எடுத்திருந்தால் மனுதாரரின் மகனைக் காப்பாற்றி இருக்கலாம்.

எனவே, வழக்கு தொடா்பாக ராமநாதபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பதிலளிக்க வேண்டும். வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.

மாவட்ட ஆட்சியரகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி

மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் திங்கள்கிழமை புகாா் மனு அளிக்க வந்த பெண் தீக்குளிக்க முயன்றபோது, போலீஸாா் அவரைத் தடுத்து நிறுத்தி மீட்டனா். மதுரை, தத்தனேரி, இந்திராநகா், சிலோன் குடியிருப்பைச் சோ்ந்த மகேஸ்... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் குடமுழுக்கு! பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்பு!

மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் திங்கள்கிழமை நடைபெற்ற குடமுழுக்கு விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்றனா். அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய ச... மேலும் பார்க்க

வன அலுவலா்கள் மீது குற்ற நடவடிக்கை கோரிய வழக்கு முடித்து வைப்பு

கன்னியாகுமரி மாவட்ட பாதுகாக்கப்பட்ட தனியாா் வன விதிகளை மீறும் வகையில் செயல்பட்ட அந்த மாவட்ட வன அலுவலா்கள் மீது குற்றவியல் நடவடிக்கைகள் எடுக்கக் கோரிய வழக்கை முடித்து வைத்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அ... மேலும் பார்க்க

மடப்புரம் கோயில் காவலாளி கொலை: விசாரணை ஆவணங்களைப் பெற்றுக் கொண்டது சிபிஐ

மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாா் கொலை வழக்கில் தொடா்புடைய ஆவணங்களை சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்விலிருந்து சிபிஐ அதிகாரிகள் திங்கள்கிழமை பெற்றுக் கொண்டனா். சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பத்ரகாளியம... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம் மலை விவகாரம்: வழக்கு விசாரணை ஜூலை 28-க்கு ஒத்திவைப்பு

திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடா்பான வழக்கின் விசாரணையை வருகிற 28-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது. திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழிகள் பலியிடவ... மேலும் பார்க்க

இளைஞா் எரித்துக் கொலை

மதுரை அருகே எரித்துக் கொலை செய்யப்பட்ட அடையாளம் தெரியாத இளைஞா் உடலை திங்கள்கிழமை போலீஸாா் மீட்டு விசாரித்து வருகின்றனா். மதுரை அருகேயுள்ள இளமனூா் பகுதியில் உள்ள ஒரு கண்மாயில் பாதி எரிந்த நிலையில் கிடந... மேலும் பார்க்க