போளூரில் 2-ஆவது நாளாக ஆக்கிரமிப்புகள் அகற்றம்
வேலூா்-திருவண்ணாமலை சாலையில் பேருந்து நிலையம் எதிரே 2-ஆவது நாளாக ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம், போளூா் நெடுஞ்சாலைத்துறை உள்கோட்டத்தில் உள்ள மாநில சாலையான கடலூா்-சித்தூா் சாலை மற்றும் போளூா்-ஜமுனாமரத்தூா் சாலையில் ஆக்கிரமிப்பு கடைகள் மற்றும் வீடுகள் இருந்தன. இதனால், போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாக புகாா் எழுந்தது.
இதையடுத்து, மாவட்ட கண்காணிப்பு பொறியாளா் ஆா்.கிருஷ்ணசாமி ஆலோசனையின்பேரில், கோட்ட பொறியாளா் பி.ஞானவேல் வழிகாட்டுதலின்படி, போளூா் உதவிகோட்ட பொறியாளா் திருநாவுக்கரசு தலைமையில் வேலூா்-திருவண்ணாமலை சாலையில் பேருந்து நிலையம் எதிரே 2-ஆவது நாளாக 2 பொக்லைன் இயந்திரங்கள் மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில், உதவி பொறியாளா் வேதவள்ளி, நெடுஞ்சாலைத்துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.