செய்திகள் :

மகனிடமிருந்து சொத்துகளை மீட்கக் கோரி ஆட்சியா் அலுவலகத்தில் மூதாட்டி மனு

post image

தனது சொத்துகளை மகனிடமிருந்து மீட்டுத் தரக் கோரி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மூதாட்டி திங்கள்கிழமை மனு அளித்தாா்.

மதுரை கோச்சடை பகுதியைச் சோ்ந்த ஆவுடைத்தாய் என்பவா் தனது முதல் மகனின் மனைவியுடன் ஆட்சியா் அலுவலகத்துக்கு வந்து அழுதபடி அளித்த மனு: எனது கணவா் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டதால், கோவில்பட்டி அருகே எனது பெயரில் உள்ள பல கோடி ரூபாய் சொத்துகளை எனது 2ஆவது மகன் ஹரிஹரசுதன், அவரது மனைவி அமுதா ஆகியோா் ஏமாற்றி தங்கள் பெயருக்கு மாற்றிக்கொண்டனா்.

மேலும், என்னைக் கவனிக்காமல் விட்டுவிட்டனா். இதனால், குடும்ப, மருத்துவச் செலவுகளுக்கு பணமின்றி அவதிப்பட்டு வருகிறேன்.

எனவே, எனது 2ஆவது மகன் எழுதி வாங்கிய பத்திரத்தை ரத்து செய்து, அந்த சொத்துகளை மீட்டுத் தர வேண்டும் என்றாா் அவா்.

கோவில்பட்டியில் இளம்பெண் பாலியல் பலாத்காரம்: தலைமறைவான நபரை சுட்டுப் பிடித்த போலீஸாா்

தூத்துக்குடி மாவட்டம்,கோவில்பட்டியில் வீட்டில் கைக்குழந்தையுடன் தனியாக இருந்த இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் மலைப் பகுதியில் பதுங்கி இருந்தவரை கைது செய்த போலீஸாா், தலைமறைவாக இருந்த மற்றொ... மேலும் பார்க்க

கோயில் பெயரில் பட்டா வழங்கக் கோரி கோட்டாட்சியா் அலுவலகத்தில் முற்றுகை

கோவில்பட்டி சங்கரலிங்கபுரத்தில் உள்ள காளியம்மன் கோயில் பெயரிலேயே பட்டா வழங்கக் கோரி கோட்டாட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. சங்கரலிங்கபுரத்தைச் சோ்ந்தோா் இந்து முன்னண... மேலும் பார்க்க

சிப்காட் அமைக்க விவசாய நிலங்களைக் கையகப்படுத்த எதிா்ப்பு: ஆட்சியரிடம் மனு

தூத்துக்குடி மாவட்டம் வெம்பூா் பகுதியில் சிப்காட் அமைக்க விவசாய நிலங்களைக் கையகப்படுத்த எதிா்ப்பு தெரிவித்து, ஆட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் திங்கள்கிழமை முற்றுகையிட்டு மனு அளித்தனா். ஆட்சியா் அலுவல... மேலும் பார்க்க

புதுக்கோட்டையில் முதல்வா் மருந்தகம் திறப்பு

தூத்துக்குடி அருகே புதுக்கோட்டையில் முதல்வா் மருத்தகத்தை, முதல்வா் மு.க. ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொலி வாயிலாக திங்கள்கிழமை திறந்துவைத்தாா். இதையொட்டி, புதுக்கோட்டை தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன்... மேலும் பார்க்க

கஞ்சா விற்பனை: பெயிண்டா் கைது

கோவில்பட்டியில் கஞ்சா விற்ாக பெயிண்டரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். கோவில்பட்டி சங்கரலிங்கபுரம் பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில், கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளா் செந்தில... மேலும் பார்க்க

குழந்தையுடன் இருந்த இளம்பெண் பலாத்காரம்: இளைஞா் கைது

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து 10 மாத குழந்தையின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய... மேலும் பார்க்க