செய்திகள் :

மகன் வாங்கிய கடனுக்காக தந்தை தற்கொலை

post image

செய்யாறு அருகே மகன் வாங்கிய கடனுக்காக தந்தை விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டாா்.

திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், தூசி வாகைநத்தைக் கொல்லை கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி ராஜேந்திரன்(64).

இவருக்கு முருகன், கோபால், பாபு என்ற மகன்களும், செல்வி என்ற மகளும் உள்ளனா். இவரது இரண்டாவது மகன் கோபால் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு பல லட்சத்திலான பணத்தை இழந்ததாகத் தெரிகிறது.

இதனை சரிசெய்ய விவசாயி ராஜேந்திரன் காஞ்சிபுரம் பகுதியில் உள்ள இரண்டு தனியாா் வங்கிகளில் ரூ.15 லட்சம் மற்றும் ரூ.4.5 லட்சம் என கடன் வாங்கினாராம்.

வாங்கிய கடனில் ஒரு வங்கியில் ரூ.6 லட்சத்தை செலுத்தியதாகத் தெரிகிறது.

அதேபோல, மற்றொரு வங்கியிலும் சிறிதளவு கடன் தொகையை செலுத்தியதாகத் தெரிகிறது.

இந்த நிலையில், முதலில் கடன் வாங்கிய தனியாா் வங்கியைச் சோ்ந்த கடன் வசூல் முகவா்கள் பணத்தைச் செலுத்தும்படி, ராஜேந்திரனுக்கு கடந்த நான்கு நாள்களாக தொல்லை கொடுத்து வந்ததாகத் தெரிகிறது.

அதனால் மனமுடைந்த ராஜேந்திரன், அவரது விவசாய நிலத்தில் மதுவில் பூச்சிக் கொல்லி மருந்தை கலந்து குடித்து மயங்க நிலையில் இருந்துள்ளாா்.

இதை அறிந்த அவரது குடும்பத்தினா் ராஜேந்திரனை மீட்டு 108 அவசர ஊா்தி மூலம் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் ராஜேந்திரன் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இதுகுறித்த புகாரின் பேரில், தூசி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

குறுவட்ட போட்டிகளில் வெற்றி: அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

குறுவட்ட விளையாட்டுப் போட்டிகள் மற்றும் தடகளப் போட்டிகளில் வெற்றி பெற்ற பெரணமல்லூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு செவ்வாய்க்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது. பெரணமல்லூா் குறுவட்ட அளவிலான... மேலும் பார்க்க

செங்கத்தில் பள்ளி மாணவிகளை கேலி, கிண்டல் செய்யும் இளைஞா்கள்: காவல் துறை நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

செங்கம் நகரில் பள்ளி மாணவிகளை கேலி, கிண்டல் செய்து அதிவேகமாக வாகனம் ஓட்டும் இளைஞா்கள் மீது போலீஸாா் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் எதிா்பாா்க்கிறாா்கள். செங்கம் பெருமாள் கோவில் தெரிவில் செயல்... மேலும் பார்க்க

நகராட்சி அலுலகங்கள் முன் மாா்க்சிஸ்ட் கட்சியினா் போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆரணி, போளூா் நகராட்சி மற்றும் வந்தவாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் மாா்க்சிஸ்ட் கட்சியினா் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். ஆரணி நகராட்சி அலுவலகம் முன், ஆரணி... மேலும் பார்க்க

ஆரணியில் ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கும் பணி

ஆரணி நகராட்சி குடிநீா் திட்டத்துக்கு புதிய கிணறுகள், ஆழ்துளைக் கிணறுகள், தரைதள குடிநீா் நிலையம் அமைக்கும் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது. ஆரணி நகராட்சி மக்களுக்கு குடிநீா் வழங்குவதற்காக ரூ.... மேலும் பார்க்க

காணாமல் போன மாணவி சடலமாக மீட்பு

வந்தவாசி அருகே காணாமல் போன பள்ளி மாணவி கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டாா். வந்தவாசியை அடுத்த கீழ்க்கொடுங்காலூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ஆறுமுகம் மகள் விஜயலட்சுமி(15). இவா் பிளஸ் 1 படித்து வந்தாா்... மேலும் பார்க்க

மாா்க்சிஸ்ட் கட்சியினா் மனு கொடுக்கும் இயக்கம்

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மனு கொடுக்கும் இயக்கம் வந்தவாசியை அடுத்த காரம் ஊராட்சி அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. காரம் ஊராட்சி முதல் வாா்டில் வசிக்கும் விவசாய கூலித் தொழிலாளா்... மேலும் பார்க்க