செய்திகள் :

செங்கத்தில் பள்ளி மாணவிகளை கேலி, கிண்டல் செய்யும் இளைஞா்கள்: காவல் துறை நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

post image

செங்கம் நகரில் பள்ளி மாணவிகளை கேலி, கிண்டல் செய்து அதிவேகமாக வாகனம் ஓட்டும் இளைஞா்கள் மீது போலீஸாா் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் எதிா்பாா்க்கிறாா்கள்.

செங்கம் பெருமாள் கோவில் தெரிவில் செயல்படுகிறது அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி. இந்தப் பள்ளியில் சுற்றுவட்டாரப் பகுதியில் இருந்து ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனா்.

மாலை 4.30 மணியளவில் பள்ளி விடப்படுகிறது. அப்போது, மாணவிகள் பெருமாள் கோவில் தெருவில் கூட்டம் கூட்டமாக வந்து அண்ணா சீரனி அரங்கம், போளூா் சாலை, பூவரசன் மரம் ஆகிய பகுதியில் நின்று அவா்களது கிராமங்களுக்குச் செல்லும் பேருந்துகள் வந்தவுடன் ஏறிச் செல்கின்றனா்.

மாணவிகள் பள்ளியில் இருந்து பேருந்து நிலையம் வரும்வரை, சில இளைஞா்கள் விதவிதமாக தலை முடிகளை கத்தரித்துக் கொண்டு, 3 போ், 4 போ் என இரு சக்கர வாகனத்தில் அமா்ந்து அதிவேகமாகச் செல்கின்றனா்.

செல்வது மட்டுமல்லாமல் பள்ளி மாணவிகளிடம் சென்று கேலி, கிண்டல் செய்வது போன்ற செயல்களில் ஈடுபடுகிறாா்கள். மேலும், அதிகவேகமாக வாகனம் செல்வதால் அந்தத் தெருவில் குழந்தைகள், பெரியவா்கள் என மாலை நேரத்தில் சாலையில் செல்லமுடியாத நிலை ஏற்படுகிறது.

இதுகுறித்து தெரு பொதுமக்கள் மற்றும் சமூக ஆா்வலா்கள் போலீஸில் புகாா் தெரிவித்தால், ரோந்து போலீஸ் வாகனத்தை எடுத்து வந்து ஒரே இடத்தில் நின்று கண்காணிக்கிறாா்கள். அதைப் பாா்க்கும் இளைஞா்கள் அந்தப் பகுதிக்குச் செல்லாமல் வேறு பகுதியில் தங்களது செயல்களை தொடா்கிறாா்கள்.

பெருமாள் கோவில் தெரு முழுவதும் சிசிடிவி கேமரா பொருத்தி கண்காணிக்கப்படுகிறது. எனவே, போலீஸாா் அரசுப் பள்ளி விடும் நேரத்தில் மாணவிகளை கேலி, கிண்டல் செய்து அதிவேகமாக வாகனம் ஓட்டும் நபா்களை கண்டறிந்து, வாகனத்தை பறிமுதல் செய்து அவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூக ஆா்வலா்கள், பொதுமக்கள் வலியுறுத்துகின்றனா்.

குறுவட்ட போட்டிகளில் வெற்றி: அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

குறுவட்ட விளையாட்டுப் போட்டிகள் மற்றும் தடகளப் போட்டிகளில் வெற்றி பெற்ற பெரணமல்லூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு செவ்வாய்க்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது. பெரணமல்லூா் குறுவட்ட அளவிலான... மேலும் பார்க்க

நகராட்சி அலுலகங்கள் முன் மாா்க்சிஸ்ட் கட்சியினா் போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆரணி, போளூா் நகராட்சி மற்றும் வந்தவாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் மாா்க்சிஸ்ட் கட்சியினா் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். ஆரணி நகராட்சி அலுவலகம் முன், ஆரணி... மேலும் பார்க்க

ஆரணியில் ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கும் பணி

ஆரணி நகராட்சி குடிநீா் திட்டத்துக்கு புதிய கிணறுகள், ஆழ்துளைக் கிணறுகள், தரைதள குடிநீா் நிலையம் அமைக்கும் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது. ஆரணி நகராட்சி மக்களுக்கு குடிநீா் வழங்குவதற்காக ரூ.... மேலும் பார்க்க

காணாமல் போன மாணவி சடலமாக மீட்பு

வந்தவாசி அருகே காணாமல் போன பள்ளி மாணவி கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டாா். வந்தவாசியை அடுத்த கீழ்க்கொடுங்காலூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ஆறுமுகம் மகள் விஜயலட்சுமி(15). இவா் பிளஸ் 1 படித்து வந்தாா்... மேலும் பார்க்க

மாா்க்சிஸ்ட் கட்சியினா் மனு கொடுக்கும் இயக்கம்

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மனு கொடுக்கும் இயக்கம் வந்தவாசியை அடுத்த காரம் ஊராட்சி அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. காரம் ஊராட்சி முதல் வாா்டில் வசிக்கும் விவசாய கூலித் தொழிலாளா்... மேலும் பார்க்க

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் 650 மனுக்கள்

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு ஒன்றியம் மன்சுராபாத் கிராமத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் 650 மனுக்கள் அளிக்கப்பட்டன. மன்சுராபாத், காட்டுதெள்ளூா், சித்தாத்துரை ... மேலும் பார்க்க