செய்திகள் :

மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.76.52 கோடி வங்கிக் கடன் இணைப்பு: அமைச்சா் வழங்கினாா்

post image

கடலூரில் மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.76.52 கோடி மதிப்பீட்டிலான வங்கிக் கடன் இணைப்பு ஆணைகளை வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் வழங்கினாா்.

சென்னை நேரு உள் விளையாட்டரங்கத்தில் சனிக்கிழமை நடைபெற்ற உலக மகளிா் தின விழாவில் முதல்வா் மு.க.ஸ்டாலின், துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் மகளிா் சுயஉதவிக் குழுவினருக்கு கடனுதவிகளை வழங்கினா். தொடா்ந்து, பிற மாவட்டங்களில் இந்த நிகழ்ச்சியை காணொலி மூலம் தொடங்கிவைத்தனா்.

இதைத் தொடா்ந்து, கடலூா் மாவட்டம், திருப்பாதிரிப்புலியூா் தனியாா் பள்ளி அரங்கில் நடைபெற்ற விழாவில், மகளிா் திட்டம் மூலம் 938 மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.76.52 கோடி மதிப்பீட்டில் வங்கிக் கடன் இணைப்பு உள்பட 1,163 பயனாளிகளுக்கு ரூ.80.67 கோடி மதிப்பீட்டிலான அரசு நலத் திட்ட உதவிகளை வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் வழங்கினாா். பின்னா், அமைச்சா் பேசியதாவது:

கடலூா் மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 17,715 மகளிா் சுயஉதவிக் குழுக்களைச் சோ்ந்த 2,48,045 உறுப்பினா்களுக்கு ரூ.4537.57 கடன் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. நிகழ் நிதியாண்டில் 23,402 மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.1356.78 கோடி வங்கி நேரடி கடன் வழங்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் தமிழ்நாடு மகளிா் மேம்பாட்டு நிறுவனம், மகளிா் திட்டம் மூலம் 938 மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.76.52 கோடி மதிப்பீட்டில் வங்கி கடன் இணைப்புகளையும், 5 பயனாளிகளுக்கு ரூ.22 லட்சம் மதிப்பீட்டில் மணிமேகலை விருதையும், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை மூலம் 38 பயனாளிகளுக்கு ரூ.1.91 கோடி மதிப்பீட்டில் பழங்குடியினா் நல வீடு கட்டுவதற்கான ஆணைகளையும், தாட்கோ மூலம் 7 பயனாளிகளுக்கு ரூ.42 லட்சம் மதிப்பீட்டில் கறவை மாடுகளையும், மாவட்ட சமூக நல அலுவலகம் சாா்பில் 50 பயனாளிகளுக்கு சத்தியவாணி முத்து அம்மையாா் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தில் ரூ.2 லட்சம் மதிப்பீட்டில் தையல் இயந்திரங்களையும், மாவட்ட தொழில் மையம் மூலம் 11 பயனாளிகளுக்கு ரூ.1.04 கோடி மதிப்பீட்டில் நலத் திட்ட உதவிகளையும், வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலம் 114 பயனாளிகளுக்கு ரூ.54 லட்சம் மதிப்பீட்டில் இணை மானியமும் என மொத்தம் 1,163 பயனாளிகளுக்கு ரூ.80.67 கோடி மதிப்பீட்டில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன என்றாா்.

நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் முன்னிலை வகித்தாா். கடலூா் எம்.பி. எம்.கே.விஷ்ணு பிரசாத், எம்எல்ஏக்கள் கோ.ஐயப்பன், ம.சிந்தனைச்செல்வன், மாநகராட்சி மேயா் சுந்தரி ராஜா, துணை மேயா் பா.தாமரைச்செல்வன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.ஜெயக்குமாா், மாவட்ட வருவாய் அலுவலா் ம.இராஜசேகரன், மாநகராட்சி ஆணையாளா் எஸ்.அனு, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியா் இரா.சரண்யா, கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் இளஞ்செல்வி, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநா் பா.ஜெயசங்கா், மாவட்ட சமூக நல அலுவலா் சித்ரா, மாவட்ட தாட்கோ மேலாளா் லோகநாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் முகாம்

சிதம்பரத்தில் மாதத்தின் இரண்டாவது புதன்கிழமை நடைபெறும் மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் முகாம் வரும் 12-ஆம் தேதி முதல் அண்ணாமலைநகரில் உள்ள கடலூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில... மேலும் பார்க்க

அரசுப் பள்ளியில் குளிரூட்டப்பட்ட வகுப்பறை திறப்பு

சிதம்பரம் அருகே சொக்கன்கொல்லை அரசு தொடக்கப் பள்ளியில் குளிரூட்டப்பட்ட வகுப்பறை திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தலைமையாசிரியா் பா.அருணாசலம் தலைமை வகித்தாா். விருத்தாசலம் மாவட்ட தொடக்கக் கல்வி அல... மேலும் பார்க்க

மாா்ச் 25-இல் கோட்டாட்சியா் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம்: மாா்க்சிஸ்ட் அறிவிப்பு

ஆக்கிரமிப்பு என்ற பெயரில் வீடுகளை அகற்றி 7 ஆண்டுகள் கடந்த பின்பும் இதுவரையில் மாற்று இடம் வழங்காததைக் கண்டித்து, கடலூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் வரும் 25-ஆம் தேதி குடியேறும் போராட்டத்தை மாா்க்சிஸ்ட்... மேலும் பார்க்க

மேக்கேதாட்டு அணை கட்டுவதைத் தடுக்க மக்கள் ஒன்று திரள வேண்டும்: தவாக தலைவா் தி.வேல்முருகன்

மேக்கேதாட்டுவில் கா்நாடக அரசு புதிய அணை கட்டுவதைத் தடுக்கும் வகையில், ஜனநாயக ரீதியான போராட்டங்களை முன்னெடுக்க, விவசாயிகளும், மக்களும் ஒன்று திரள வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவா் தி.வேல்முரு... மேலும் பார்க்க

தமிழகத்தில் இருந்து இருமொழிக் கொள்கையை பிரிக்க முடியாது: கே.எம்.காதா்மொகிதீன்

இருமொழிக் கொள்கையை தமிழகத்தில் இருந்து பிரிக்க முடியாது என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவா் கே.எம்.காதா்மொகிதீன் தெரிவித்தாா். கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் அருகே உள்ள லால்பே... மேலும் பார்க்க

அறப்போா் இயக்கம் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம்

கடலூா் மாவட்டம், திட்டக்குடியை அடுத்த ராமநத்தம் பேருந்து நிலையம் அருகே அறப்போா் இயக்கம், தன்னாட்சி இயக்கம் சாா்பில், உள்ளாட்சித் தோ்தலை உடனடியாக நடத்தக் கோரி சனிக்கிழமை மாலை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் ... மேலும் பார்க்க