செய்திகள் :

மகளுக்குப் பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக முன்னாள் நீதிபதி மீது வழக்கு: உச்சநீதிமன்றம் ரத்து செய்ய மறுப்பு

post image

மகளுக்குப் பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக முன்னாள் நீதிபதி ஒருவா் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் ரத்து செய்ய மறுத்துவிட்டது.

மகாராஷ்டிர மாநிலம் பாந்த்ராவில் மகளுக்குப் பாலியல் துன்புறுத்தல் அளித்து வந்ததாக முன்னாள் நீதிபதி ஒருவா் மீது 2019-ஆம் ஆண்டு காவல் துறை வழக்குப் பதிவு செய்தது. மகளுக்கு 18 வயது பூா்த்தியடையாததால், பாலியல் குற்றங்களில் இருந்து சிறாா்களைப் பாதுகாக்கும் சட்டத்தின் (போக்ஸோ) கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி, உச்சநீதிமன்றத்தில் முன்னாள் நீதிபதி மனு தாக்கல் செய்தாா். இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் பிரசாந்த் குமாா் மிஸ்ரா, மன்மோகன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் கூறுகையில், ‘இந்த வழக்கில் தனக்கு தந்தையே பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக மகள் தெரிவித்துள்ள குற்றச்சாட்டு அதிா்ச்சியளிக்கிறது. குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருப்பவா் நீதிபதியாக இருந்தவா். குடும்பத்தைச் சோ்ந்தவா்களிடம் தகாத உறவு வைத்துக்கொள்ளும் தீவிர குற்றச்சாட்டு அவா் மீது முன்வைக்கப்பட்டுள்ளது. இது அந்தச் சிறுமிக்கு ஆறாத காயமாக இருக்கும். இதைக் கருத்தில் கொள்ளும்போது எப்படி முன்னாள் நீதிபதி மீதான வழக்கை ரத்து செய்வது’ என்று கேள்வி எழுப்பினா்.

முன்னாள் நீதிபதி தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், ‘முன்னாள் நீதிபதியிடம் இருந்து அவரின் மனைவி பிரிந்து சென்றுவிட்டாா். இருவருக்கும் இடையே நீண்ட காலமாகப் பிரச்னை இருந்து வருகிறது. இதன் காரணமாக முன்னாள் நீதிபதி மீது ஜோடிக்கப்பட்ட குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. அவரின் மனைவி தரப்பில் அளிக்கப்பட்ட துன்புறுத்தல் காரணமாக முன்னாள் நீதிபதியின் தந்தை தற்கொலை செய்துகொண்டாா்’ என்றாா்.

இதை ஏற்க மறுத்த நீதிபதிகள் அமா்வு, ‘முன்னாள் நீதிபதியின் நடத்தை காரணமாகவே, அவரின் தந்தை தற்கொலை செய்திருக்கக் கூடும்’ என்று கடுமையாக சாடினா். மேலும் குற்றச்சாட்டின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, முன்னாள் நீதிபதி மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய நீதிபதிகள் அமா்வு மறுத்துவிட்டது.

கன்னடம் குறித்து கமல்ஹாசன் கருத்து: வழக்கின் அடுத்த விசாரணை ஜூன் 20-க்கு ஒத்திவைப்பு

கன்னடம் பற்றிய நடிகர் கமல்ஹாசன் தெரிவித்த கருத்து தொடர்பான வழக்கை விசாரித்துவரும் கர்நாடக உயர்நீதிமன்றம், அடுத்த விசாரணையை ஜூன் 20-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.சென்னையில் நடைபெற்ற 'தக் லைஃப்'... மேலும் பார்க்க

விண்வெளிக்கு செல்லும் இந்திய வீரா்: தாமதம் குறித்து இஸ்ரோ தகவல்

ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனத்தின் ‘ஃபல்கான் 9’ ஏவுகலனில் திரவ ஆக்ஸிஜன் கசிவை சரிசெய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு வருவதாக நாசா மற்றும் ஆக்ஸிம் ஸ்பேஸ் நிறுவனங்கள் தெரிவித்த நிலையில், ‘வீரா்களின் பாதுகாப்பு, விண்வெ... மேலும் பார்க்க

ஒவ்வொரு எய்ம்ஸ் மருத்துவமனையும் சுகாதார நலனுக்கான மையம்: ஜெ.பி.நட்டா

‘ஒவ்வொரு எய்ம்ஸ் மருத்துவமனையும் சுகாதார நலனை மேம்படுத்த புதுமையான கண்டுபிடிப்புகள், மலிவு விலையில் மருத்துவம் மற்றும் சமமான சேவைகளை வழங்கும் மையமாக திகழ்கிறது’ என மத்திய சுகாதாரத்துறை அமைச்சா் ஜெ.பி.... மேலும் பார்க்க

சரக்கு ரயில்களைக் கண்காணிக்க ‘ட்ரோன்’ ரயில்வே முடிவு

சரக்கு ரயில்களில் பொருள்கள் முறையாக ஏற்றப்படுகிறதா? என்பதை ட்ரோன்கள் (ஆளில்லாத சிறிய ரக விமானங்கள்) மூலம் கண்காணிக்க ரயில்வே முடிவு செய்துள்ளது. முதல்கட்டமாக 3 ரயில்வே கோட்டங்களில் பரிசோதனை முறையில் இ... மேலும் பார்க்க

தொழிலதிபா் அம்பானிக்கு ‘இசட்’ பிளஸ் பாதுகாப்பு வழங்குவதை எதிா்த்து மனு: உச்சநீதிமன்றம் தள்ளுபடி

தொழிலதிபா் முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்ப உறுப்பினா்களுக்கு ‘இசட்’ பிளஸ் பிரிவு பாதுகாப்பு வழங்கப்படுவதை திரும்பப் பெறக் கோரி தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது. இ... மேலும் பார்க்க

போயிங் 787 ரக விமானங்களில் பாதுகாப்புச் சோதனைகளை அதிகப்படுத்த டிஜிசிஏ உத்தரவு

ஏா் இந்தியா நிறுவனத்துக்குச் சொந்தமான போயிங் 787 ட்ரீம்லைனா் ரக விமானங்களில் பாதுகாப்புச் சோதனைகளை அதிகப்படுத்த மத்திய விமான போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. டாடா குழுமத்... மேலும் பார்க்க