காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் சோமாஸ்கந்தர் சிலை மெழுகு அச்சு எடுத்ததாகப் புக...
மகாராஷ்டிரம்: மாணவிகளை நிர்வாணமாக்கி கொடூரம்! 8 பேர் கைது!
மகாராஷ்டிரத்தில் பள்ளி மாணவிகளை நிர்வாணப்படுத்தி சோதனை நடத்தப்பட்டதாக பள்ளி நிர்வாகத்தில் 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
மகாராஷ்டிரம் மாநிலத்தின் தாணே மாவட்டத்தில் ஷாஹாபூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியின் கழிப்பறையில் ரத்தக் கறை இருப்பதாகக் கூறி, செவ்வாய்க்கிழமையில் (ஜூலை 8) 5 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான மாணவிகளிடம் பள்ளி நிர்வாகம் விசாரணை நடத்தினர்.
மாணவிகளில் யாருக்கேனும் மாதவிடாய் ஏற்பட்டிருக்கிறதா என்று வினவப்பட்டனர்.
தொடர்ந்து, மாதவிடாய் இருப்பதாகக் கூறப்பட்ட மாணவிகளின் கைரேகையைப் பெற்ற பள்ளி நிர்வாகம், மாதவிடாய் இல்லையெனக் கூறிய மாணவிகளை கழிப்பறைக்கு அழைத்துச் சென்று, அவர்களை நிர்வாணப்படுத்தியதுடன், மாதவிடாயுடன் இருக்கிறார்களா என்று சோதனையும் நடத்தியுள்ளனர்.
பள்ளி நிர்வாகத்தின் இந்த வெட்கக்கேடான செயலை, தங்கள் பெற்றோரிடம் மாணவிகள் தெரிவித்ததால், புதன்கிழமையில் பள்ளி வளாகத்தில் மாணவிகளின் பெற்றோர் போராட்டம் நடத்தினர்.
இதனையடுத்து, பள்ளி முதல்வர், 4 ஆசிரியர்கள், உதவியாளர்கள் உள்பட 8 பேரை போக்ஸோ சட்டத்தின்கீழ் காவல்துறையினர் கைது செய்தனர்.