செய்திகள் :

மகாராஷ்டிரம்: மாணவிகளை நிர்வாணமாக்கி கொடூரம்! 8 பேர் கைது!

post image

மகாராஷ்டிரத்தில் பள்ளி மாணவிகளை நிர்வாணப்படுத்தி சோதனை நடத்தப்பட்டதாக பள்ளி நிர்வாகத்தில் 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

மகாராஷ்டிரம் மாநிலத்தின் தாணே மாவட்டத்தில் ஷாஹாபூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியின் கழிப்பறையில் ரத்தக் கறை இருப்பதாகக் கூறி, செவ்வாய்க்கிழமையில் (ஜூலை 8) 5 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான மாணவிகளிடம் பள்ளி நிர்வாகம் விசாரணை நடத்தினர்.

மாணவிகளில் யாருக்கேனும் மாதவிடாய் ஏற்பட்டிருக்கிறதா என்று வினவப்பட்டனர்.

தொடர்ந்து, மாதவிடாய் இருப்பதாகக் கூறப்பட்ட மாணவிகளின் கைரேகையைப் பெற்ற பள்ளி நிர்வாகம், மாதவிடாய் இல்லையெனக் கூறிய மாணவிகளை கழிப்பறைக்கு அழைத்துச் சென்று, அவர்களை நிர்வாணப்படுத்தியதுடன், மாதவிடாயுடன் இருக்கிறார்களா என்று சோதனையும் நடத்தியுள்ளனர்.

பள்ளி நிர்வாகத்தின் இந்த வெட்கக்கேடான செயலை, தங்கள் பெற்றோரிடம் மாணவிகள் தெரிவித்ததால், புதன்கிழமையில் பள்ளி வளாகத்தில் மாணவிகளின் பெற்றோர் போராட்டம் நடத்தினர்.

இதனையடுத்து, பள்ளி முதல்வர், 4 ஆசிரியர்கள், உதவியாளர்கள் உள்பட 8 பேரை போக்ஸோ சட்டத்தின்கீழ் காவல்துறையினர் கைது செய்தனர்.

Girls made to strip for menstruation check: Thane school principal, another staffer arrested

ஜம்மு-காஷ்மீரின் வுலர் ஏரியில் பூத்த தாமரை! 30 ஆண்டுகளுக்குப் பின்

சுமார் 30 ஆண்டுகளுக்கு முன் பேரழிவை ஏற்படுத்திய வெள்ளப் பெருக்குக்கு ஏற்பட்டபிறகு, முதல் முறையாக ஜம்மு-காஷ்மீரின் வுலர் ஏரியில் தாமரை மலர்கள் மலர்ந்துள்ளன.கடந்த 1992 ஆம் ஆண்டு ஏற்பட்ட பேரழிவை ஏற்படுத்... மேலும் பார்க்க

விமான விபத்து: விமானிகள் மீது தவறு என்பது போன்று திசைதிருப்பல்! விமானிகள் சங்கம் எதிர்ப்பு

புது தில்லி: அகமதாபாத்தில் நேரிட்ட ஏர் இந்தியா விமான விபத்துக்கு, விமானிகளின் தவறே காரணம் என்பது போன்று விசாரணை திசை திருப்பப்படுவதற்கு, இந்திய விமானிகள் சங்கம் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.அகமதாபாத் ஏ... மேலும் பார்க்க

கொல்கத்தாவில் தொடரும் பாலியல் வன்கொடுமைகள்! மீண்டும் ஒரு சம்பவம்!

கொல்கத்தாவில் கல்லூரி மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மேற்கு வங்கம் மாநிலத்தில் கொல்கத்தாவில் உள்ள இந்திய தொழில்நுட்ப மேலாண்மை வணிகக் கல்லூரியின் விட... மேலும் பார்க்க

தாணேவில் ரயிலில் சென்ற பெண்ணுக்கு பிரசவ வலி: அபாய சங்கிலியை இழுத்த சக பயணிகள்!

தாணேவில் உள்ளூர் ரயிலில் சென்ற பெண்ணுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டதால் சக பயணிகள் அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தினர். மகாராஷ்டிர மாநிலம், தாணே மாவட்டத்தில் நிறைமாத கர்ப்பிணி ஹினா தனது கணவருடன் ... மேலும் பார்க்க

ஷங்காய் ஒத்துழைப்பு மாநாடு: சீனா செல்கிறார் அமைச்சர் ஜெய்சங்கர்!

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்க மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சீனா செல்ல உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் ஏற்பட்ட மோதலுக்குப்... மேலும் பார்க்க

ஹிமாசல் பருவமழைக்கு இதுவரை 92 பேர் பலி: ரூ.751.78 கோடி இழப்பு!

ஹிமாச்சலப் பிரதேசம் முழுவதும் கனமழை மற்றும் மேக வெடிப்புகளால் பரவலான சேதம் ஏற்பட்டுள்ளதாக மாநில பேரிடர் மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர். மாநிலத்தில் இந்தாண்டு பருவமழை ஜூன் மாதம் தொடங்கிய நிலையில், ... மேலும் பார்க்க