செய்திகள் :

மகாராஷ்டிரா தேர்தல்: தமிழருக்கு மீண்டும் வாய்ப்பு; 99 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை அறிவித்த பாஜக!

post image

மகாராஷ்டிரா சட்டமன்றத்திற்கு அடுத்த மாதம் 20-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலுக்கு ஆளும் பா.ஜ.க கூட்டணியில் இடம்பெற்றுள்ள சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தன. நேற்று முன் தினம் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர்கள் அஜித் பவார், தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் டெல்லி புறப்பட்டு சென்றனர். இவர்கள் டெல்லியில் மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசினர். தொகுதி பங்கீடு இன்னும் அறிவிக்கப்படவில்லை. வரும் 22-ம் தேதி வேட்பு மனுத்தாக்கல் தொடங்குகிறது. இதையடுத்து இன்று பா.ஜ.க 99 பேர் கொண்ட முதல் வேட்பாளர் பட்டியலை அறிவித்து இருக்கிறது. இதில் நாக்பூர் தென்மேற்கு தொகுதியில் தேவேந்திர பட்னாவிஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். மொத்தமுள்ள 288 தொகுதிகளில் 151 தொகுதிகளில் பா.ஜ.க போட்டியிடுவதாக அறிவித்து இருக்கிறது. மாநில பா.ஜ.க தலைவர் சந்திரசேகர் பவன்குலே காமாதி தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்செல்வம்

பெரும்பாலான எம்.எல்.ஏ-க்களுக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. சயான் கோலிவாடாவில் மீண்டும் கேப்டன் தமிழ்செல்வத்திற்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இது தவிர தானே தொகுதியில் சஞ்சய் முகுந்த் வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். தானே தொகுதி தங்களுக்கு வேண்டும் என்று சிவசேனா(ஷிண்டே) கேட்டுக்கொண்டிருந்தது. ஆனால் அதற்கும் சேர்த்து பா.ஜ.க வேட்பாளரை அறிவித்து இருக்கிறது. ஐரோலி தொகுதியில் கணேஷ் நாயக்கும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். கொலாபாவில் சபாநாயகர் ராகுல் நர்வேகரும், மலபார் ஹில் தொகுதியில் மங்கல் பிரபாத் லோதாவும், பாந்த்ரா மேற்கு தொகுதியில் மும்பை பா.ஜ.க தலைவர் ஆசிஷ் ஷெலாரும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். சமீபத்தில் பா.ஜ.க-வில் சேர்ந்த முன்னாள் முதல்வர் அசோக் சவானின் மகளுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அமைச்சர் சுதிர் முங்கந்திர்வாருக்கு பல்லர்புர் தொகுதியில் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. 99 பேரில் 13 பேர் பெண்கள் ஆவர்.

அறிவிக்கப்பட்டுள்ள தொகுதிகள் அனைத்திலும் ஏற்கெனவே கடந்த முறை பா.ஜ.க வெற்றி பெற்றவையாகும். வேட்பாளர் பட்டியல் குறித்து பா.ஜ.க தலைவர்களிடம் பேசியபோது, தொகுதி பங்கீடு முடிந்துவிட்டது என்று தெரிவித்தனர். மற்றொருபுறம் எதிர்க்கட்சிகளின் மகாவிகாஷ் அகாடியில் தொகுதி பங்கீட்டில் சிக்கல் நீடித்து வருகிறது. காங்கிரஸ் கோட்டையாக கருதப்படும் விதர்பாவில் தங்களுக்கு தொகுதிகள் ஒதுக்கவேண்டும் என்று உத்தவ் தாக்கரே பிடிவாதம் பிடித்துக்கொண்டிருக்கிறார். இதனால் தொகுதி பங்கீடு இறுதியாவதில் சிக்கல் நீடித்து வருகிறது.

துணை முதல்வர் நிகழ்ச்சி நடந்த இடத்தில், பைக்கில் வட்டமடித்து சத்தமிட்ட தவெக-வினர்... சேலம் சலசலப்பு!

தமிழக அரசியலில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கொங்கு மண்டலம் இருந்து வருகிறது. ஏற்கெனவே கொங்கு மண்டலம் தனது கோட்டை என்று சொல்லி வரும் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடிக்கு செக் வைக்கும் விதமாக, தி... மேலும் பார்க்க

`மாவட்டத் தலைவர்கள் மாற்றம்?' - சத்தியமூர்த்தி பவனில் `புது' சலசலப்பு!

சொதப்பலில் முடிந்த நிர்வாகிகள் சந்திப்பு, பிசுபிசுத்துப் போன நடைப்பயணம் என தமிழக காங்கிரஸில் ஏற்கெனவே ஏகப்பட்ட சர்ச்சைகள் நிலவி வரும் சூழலில், 'தனது ஆதரவாளர்களை மாவட்ட தலைவர்களாக்க துடித்து வருகிறார்,... மேலும் பார்க்க

Train Accident : கவரப்பேட்டை ரயில் விபத்து ஒரு சதியா? - வெளியான `ஷாக்' தகவல்

திருவள்ளூர் மாவட்டம், கவரப்பேட்டை அருகே கடந்த 11-ம் தேதி கர்நாடக மாநிலம், மைசூரில் இருந்து தர்பங்காவிற்கு செல்ல இருந்த ‘பாக்மதி எஸ்பிரஸ்’ ரயில் விபத்திற்குள்ளாகி இருந்தது.லூப் லைனில் நின்று கொண்டிருந்... மேலும் பார்க்க

`ஒரு மொழியை படி, படிக்காதே எனச் சொல்ல இங்கு யாருக்கும் உரிமை இல்லை!' - விஜய பிரபாகரன் கூறுவதென்ன?

``எந்த மொழியும் குறைவானது அல்ல, அவரவருக்கு அவரவர் மொழி பெரியது, நாம் அனைத்து மொழியையும் கற்றறிய வேண்டும்" என தே.மு.தி.க விஜய பிரபாகரன் கூறியிருக்கிறார்.தே.மு.தி.க நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய ... மேலும் பார்க்க

Vijay: "வாய்மொழியில் வித்தை காட்டுவது நம் வேலை அன்று..." - தவெக தலைவரின் இரண்டாவது கடிதம்

தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாடு வரும் 27ம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில், அந்தக் கட்சியின் தலைவர் விஜய், தொண்டர்களுக்கான இரண்டாவது கடிதத்தை வெளியிட்டிருக்கிறார்.நடிகர் விஜய் தமிழக வெற்றிக்கழகம் ... மேலும் பார்க்க

India - Canada : மோசமடையும் இந்தியா - கனடா உறவு... இந்த விவகாரத்தில் லாரன்ஸ் பெயர் அடிபடுவது ஏன்?

லாரன்ஸ் பிஷ்னோய் என்றால் இன்றைக்கு பாலிவுட்டில் ஒரு அச்சம் ஏற்படும் அளவுக்கு நிலைமை உருவாகி இருக்கிறது. பஞ்சாப்பில் பாடகர்கள் லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டாளிகளால் அச்சத்தில் வாழ்கின்றனர். இப்போது அதே நிலையை... மேலும் பார்க்க